இந்திய கடலோர காவல்படை தலைமை இயக்குநர் மரணம்

இந்திய கடலோர காவல்படை தலைமை இயக்குநரான ராகேஷ் பாலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்திய கடலோர காவல்படை தலைமை இயக்குநர் மரணம்
Published on

சென்னை:

இந்திய கடலோர காவல்படையின் தலைமை இயக்குநராக செயல்பட்டவர் ராகேஷ் பால். அவருக்கு இன்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதையடுத்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார்.

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்த அவரது உடலுக்கு மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com