என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தப் போராட்டம் தேசிய அவமானம்: காங்கிரசை கண்டித்த பா.ஜ.க.
    X

    இந்தப் போராட்டம் தேசிய அவமானம்: காங்கிரசை கண்டித்த பா.ஜ.க.

    • ஏஐ உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடந்து வருகிறது.
    • அங்கு நுழைந்த இளைஞர் காங்கிரசார் மேலாடையைக் கழற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் ஏஐ (செயற்கை நுண்ணறிவு) உச்சி மாநாட்டை இந்தியா நடத்துகிறது. இந்த மாநாடு டெல்லி பாரத் மண்டபத்தில் நடந்து வருகிறது.

    நேற்று நடந்த மாநாட்டு நிகழ்ச்சியில் ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ், கிரீஸ் பிரதமர் கிரிகோஸ், இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே, பூட்டான் பிரதமர் ஷேரிங் டோப்கே உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    இதற்கிடையே, டெல்லி பாரத் மண்டப பகுதிக்குள் திடீரென புகுந்த இளைஞர் காங்கிரசார் தங்கள் மேலாடையைக் கழற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்கா-இந்தியா வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டதுடன், பிரதமர் மோடிக்கு எதிராகவும் முழக்கமிட்டனர்.

    இந்நிலையில், காங்கிரசின் இந்தப் போராட்டத்துக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, பா.ஜ.க. தகவல் தொழில்நுட்பத்துறை தலைவர் அமித் மாளவியா கூறுகையில், அரசியல் எதிர்ப்பு என்பது ஜன்நாயக உரிமை. அதற்காக இப்படி செய்வது தேசிய அவமானம்.

    காங்கிரஸ் இதற்கு வெட்கப்பட வேண்டும். மதிப்புமிக்க ஒரு மாநாட்டை இந்தியா நடத்தும் சமயத்தில், கண்ணியத்திற்கு எதிரான ஒரு

    செயலில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது, நம் நாட்டின் உலகளாவிய பிம்பத்தை அவமானப்படுத்துவது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.

    Next Story
    ×