search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvalluvar statue"

    • கோவை மாநகராட்சி ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.2.50 கோடி மதிப்பில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டப்பட்டுள்ளது.
    • நூலகத்தில் மொத்தம் 10 ஆயிரம் புத்தகங்கள் வைக்க முடியும். ஒரே நேரத்தில் 80 பேர் அமர்ந்து வாசிக்க ஏற்றவாறு இருக்கைகள் உள்ளன.

    குனியமுத்தூர்:

    கோவை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை-பொள்ளாச்சி சாலையில் குறிச்சி கிழக்கு கரைப்பகுதியில் தமிழர் மரபை பிரதிபலிக்கும் வகையில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, பரதநாட்டியம் ஆடும் பெண், ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரர்கள், சிலம்பம் ஆடும் வீரர்கள் என தலா 15 அடி உயரத்தில் 4 சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த சிலைகள் அனைத்தும் பைர் பொருட்களால் செய்யப்பட்டுள்ளது. இந்த சிலைகளின் அருகே திறந்தவெளி அரங்கம் போல பொதுமக்கள் நின்று பார்க்கும் வகையில் செல்பி பாய்ண்ட் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    அதில் ஜல்லிக்கட்டு காளை, பொங்கல் பானை, தலையாட்டி பொம்மை, நடனமாடும் பெண், ஜல்லிக்கட்டு காளையை அடக்குவது, சக்கரம் ஆகிய கட்டமைப்புகளும் அதில் பொருத்தப்பட்டுள்ளன.

    இதன் மறுபுறம் உள்ள குறிச்சி சின்னக்குளத்தில், உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்து ஆகிய 247 தமிழ் எழுத்துகளை கொண்டு பிரமாண்டமான திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    25 அடி உயரத்தில் 25 அடி நீளம் 15 அடி அகலத்தில் இந்த சிலையானது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் மற்றும் பொதுமக்கள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

    இந்நிலையில் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் நடக்கும் விழாவில் காணொலி வாயிலாக பங்கேற்று இதனை திறந்து வைத்தார்.

    இதேபோல் கோவை மாநகராட்சி ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.2.50 கோடி மதிப்பில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டப்பட்டுள்ளது. இந்த மையம் 48 சென்ட் பரப்பளவு கொண்ட இடத்தில் 7,800 சதுரடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 

    தமிழ் எழுத்துக்களால் உருவான திருவள்ளுவர் சிலை மின்னொளியில் ஜொலிக்கும் காட்சி.

    தமிழ் எழுத்துக்களால் உருவான திருவள்ளுவர் சிலை மின்னொளியில் ஜொலிக்கும் காட்சி.

    தரைத்தளம் மற்றும் முதல் தளம் கொண்டதாகும். இந்த நூலகத்தில் மொத்தம் 10 ஆயிரம் புத்தகங்கள் வைக்க முடியும். ஒரே நேரத்தில் 80 பேர் அமர்ந்து வாசிக்க ஏற்றவாறு இருக்கைகள் உள்ளன.

    சிறுவர், சிறுமிகள், மாணவ-மாணவிகளுக்கு ஏற்ற நூல்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளன. போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெறுபவர்கள் படிக்க தேவையான நூல்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளன.

    இந்த நூலகத்தையும் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    அதேபோல கோவை பெரியகுளத்தின் கரையில் அமைக்கப்பட்டுள்ள அனுபவ மையம் என்ற பொழுது போக்கு கட்டமைப்பையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

    • நவம்பர் 1-ம் நாள் தொடங்கி 3 நாட்களுக்கு தமிழ்ப் பண்பாட்டு நிகழ்வு நடத்துகின்றனர்.
    • கிளேர்வுட் தமிழ்க் கல்வியாலயத்தில் மல்லை தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மல்லை சி.இ.சத்யா, துர்கா சத்யா மற்றும் மலேசியாவிலிருந்து பல்வேறு தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    தென்ஆப்பிரிக்கா டர்பனில் உள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கமும், கிளேர்வுட் தமிழ்க் கல்வியாலயம் மற்றும் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கமும் இணைந்து, நவம்பர் 1-ம் நாள் தொடங்கி 3 நாட்களுக்கு தமிழ்ப் பண்பாட்டு நிகழ்வு நடத்துகின்றனர்.

    இவ்விழாவில், வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் 157-வது சிலையை தென்ஆப்பிக்கா நாட்டின் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் பெருந்தமிழன் டாக்டர் மிக்கி செட்டி தலைமையில் கிளேர்வுட் தமிழ்க் கல்வியாலயத்தின் தலைவர் பெருந்தமிழன் மாஸ்டர் ஹீகான் மெர்வின் ரெட்டி முன்னிலையில் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் நிறுவனர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

    கிளேர்வுட் தமிழ்க் கல்வியாலயத்தில் மல்லை தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மல்லை சி.இ.சத்யா, துர்கா சத்யா மற்றும் மலேசியாவிலிருந்து பல்வேறு தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர்.

    • வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 9 அடி உயரமுள்ள 157-வது திருவள்ளுவர் சிலையினை அதன் நிறுவனர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார்.
    • இந்நிகழ்வில் பல்வேறு கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    சென்னை:

    தென்னாப்பிரிக்கா டர்பனில் உள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கமும், கிளேர்வுட் தமிழ்க் கல்வியாலயம் மற்றும் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கமும் இணைந்து, நாளை (2-ந்தேதி) தொடங்கி 3 நாட்களுக்கு தமிழ்ப் பண்பாட்டு நிகழ்வு நடத்துகின்றனர்.

    இவ்விழாவில், வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 9 அடி உயரமுள்ள 157-வது திருவள்ளுவர் சிலையினை அதன் நிறுவனர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார். இவ்விழாவில் நேரில் பங்கேற்பதற்காக டா்பன் நகருக்கு சென்று மல்லை தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மல்லை சி.இ. சத்யா, துர்கா சத்யா ஆகியோரும், மலேசியாவிலிருந்து பல்வேறு தமிழ் அறிஞர்களும் கலந்து கொள்கிறார்கள்.

    உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் டாக்டர் மிக்கி செட்டி, கிளேர்வுட் தமிழ்க் கல்வியாலயத்தின் தலைவர் மாஸ்டர் ஹூகான் மெர்லின் ரெட்டி மற்றும் தமிழ்ச் சங்க செயல்பாட்டினர் ராஜராஜன் ஆகியோர் விழாவில் பங்கேற்கிறார்கள். இந்நிகழ்வில் பல்வேறு கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    • சிலையை புதுச்சேரியை சேர்ந்த பத்ம விருது பெற்ற சிற்பக் கலைஞர் முனுசாமி வடிவமைத்துள்ளார்.
    • சிலையை பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி பார்வையிட உள்ளார்.

    புதுச்சேரி:

    பிரான்சில் உள்ள தமிழ் கலாசார மன்றம் பிரான்ஸ் அரசு அனுமதி பெற்று அங்கு மகாத்மா காந்திக்கு முழு உருவ வெண்கலச்சிலையை கடந்த 2011-ல் அமைத்தது.

    தற்போது பிரான்ஸ் அரசு அனுமதி பெற்று பிரான்சின் ஜெர்சி நகரத்தில் உள்ள மைய பூங்கா வளாகத்தில் திருவள்ளுவர் சிலை செப்டம்பர் மாதம் நிறுவப்பட உள்ளது.

    இந்த சிலையை புதுச்சேரியை சேர்ந்த பத்ம விருது பெற்ற சிற்பக் கலைஞர் முனுசாமி வடிவமைத்துள்ளார்.

    வெண்கலத்தில் 7 அடியில் 600 கிலோ எடையில் திருவள்ளுவர் சிலை பிரமாண்டமாக உருவாகியுள்ளது. கடந்த 3 மாதத்திற்கு முன்பு விமானத்தில் திருவள்ளுவர் சிலை பிரான்சுக்கு கொண்டு செல்லப்பட்டது. சிலை திறப்பு விழாவையொட்டி திருவள்ளுவர் மாநாடும் நடத்தப்படுகிறது.

    சிலை அனைவரையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி பார்வையிட உள்ளார்.

    தமிழ் கலாசார மன்றத்தின் மூலம் பிரான்சில் வாரந்தோறும் தமிழ் மொழி வகுப்புகள், பண்பாட்டு இசை, நடனப்பயிற்சி வகுப்புகளை இளையோருக்கு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

    • பிரான்சில் முதுகலை படிக்கும் இந்திய மாணவர்களுக்கு 5 ஆண்டுகள் நீண்ட கால படிப்புக்கு பிந்தைய விசா வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
    • அமெரிக்காவின் மக்கள் தொகையை விட அதிகம் உலகின் பழமையான மொழி தமிழ்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் நாட்டில் இன்று தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் படி பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்தார். அதன் பேரில் பிரதமர் மோடி 2 நாட்கள் அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார்.

    தலைநகர் பாரீஸ் சென்ற பிரதமர் மோடியை பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் வரவேற்றார். ஏராளமான இந்திய வம்சாவளியினரும் அவரை உற்சாகத்துடன் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து பாரீசில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

    வெளிநாட்டில் பாரத் மாதா கீ ஜே என்கிற முழக்கத்தை கேட்கும் போது நான் சொந்த மண்ணில் நிற்பது போல் உணர்கிறேன். நான் பல முறை பிரான்ஸ் வந்துள்ளேன். ஆனால் இந்த முறை எனது வருகை சிறப்பானது. இன்று பிரான்சின் தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. பிரான்ஸ் மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். என்னை அழைத்த பிரான்ஸ் மக்களுக்கு நன்றி. இது இந்தியாவுக்கும், பிரான்சுக்கும் இடையிலான பிரிக்க முடியாத நட்புறவின் பிரதிபலிப்பாகும்.

    இன்று உலகம் புதிய பாதையை நோக்கி நகர்கிறது. இதில் இந்தியாவின் பங்கும் கூட மிக வேகமாக மாறி வருகிறது. இந்தியா தற்போது ஜி 20 கூட்டமைப்பின் தலைமையை ஏற்றுள்ளது. இந்தியாவின் சந்திரயான் விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட்டவுன் பணி தொடங்கி இருக்கிறது. இன்னும் சில மணி நேரங்களில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரலாற்று சிறப்பு மிக்க சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்த இருக்கிறோம்.

    பருவநிலை மாற்றம், பயங்கரவாதம் அல்லது பயங்கரவாத எதிர்ப்பு என எதுவாக இருந்தாலும் உலகம் இந்தியாவையே உற்றுப்பார்க்கிறது. எந்தவொரு சந்தர்ப்பத்தையும் நாம் நழுவ விட மாட்டோம். ஒவ்வொரு நேரத்தையும் வீணாக விட மாட்டோம் என்று இந்தியா தீர்மானித்துள்ளது.

    எனது ஒவ்வொரு நொடியும் நமது நாட்டு மக்களுக்கானது என தீர்மானித்துள்ளேன். அடுத்த 25 ஆண்டுகளில் ஒரு வளர்ந்த நாடாக மாறும் நோக்கில் இந்தியா செயல்படுகிறது. இந்தியாவுக்கு ஒரு பிரகாசமான இடம் இருக்கிறது என்று சர்வதேச நிறுவனங்கள் கூறுகின்றன. இந்தியாவில் முதலீடுகளுக்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன.

    பிரான்சில் முதுகலை படிக்கும் இந்திய மாணவர்களுக்கு 5 ஆண்டுகள் நீண்ட கால படிப்புக்கு பிந்தைய விசா வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்தியர்கள் இனி பிரான்சில் யு.பி.ஐ. பேமெண்ட் முறையை பயன்படுத்த இந்தியாவும், பிரான்சும் ஒப்புக்கொண்டு உள்ளன. இனி ஈபிள் கோபுரத்தில் இருந்து இந்திய சுற்றுலாப்பயணிகள் இந்திய ரூபாய்களில் கட்டணங்களை செலுத்த முடியும்.

    ஐக்கிய நாடுகள் சபை அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் 10 முதல் 15 ஆண்டுகளில் 42 கோடி இந்தியர்கள் வறுமை கோட்டுக்கு கீழ் இருந்து மேலே கொண்டு வரப்பட்டு உள்ளனர் என கூறி இருக்கிறது. இந்த எண்ணிக்கை ஐரோப்பியாவின் மக்கள் தெகையை விட அதிகமாகும்.

    அமெரிக்காவின் மக்கள் தொகையை விட அதிகம் உலகின் பழமையான மொழி தமிழ். உலகின் மிகப்பழமையான மொழி இந்திய மொழி என்பதில் மிகப்பெரிய பெருமை எனக்கு உண்டு.

    பிரான்ஸ் நாட்டில் இந்தியாவின் சார்பில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும். பிரான்சில் திருவள்ளுவர் சிலையை அமைப்பது இந்தியாவுக்கு கிடைத்த பெருமை.

    100 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்சுக்கான யுத்தத்தில் இந்திய வீரர்கள் ஈடுபட்டனர். பிரெஞ்சு மண்ணில் நிகழ்ந்த யுத்தத்தில் பங்கேற்று பிரெஞ்சு மண்ணில் இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இங்கு நடந்த போரில் பங்கேற்ற படைப்பிரிவுகளில் ஒன்றான பஞ்சாப் ரெஜிமென்ட் பிரான்சின் தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்க உள்ளது.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    பிரான்சில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்ததும் அங்கு இருந்து இந்திய வம்சாவளியினர் பலத்த கரவொலி எழுப்பினார்கள்.

    பிரதமர் மோடி அறிவித்துள்ள திருவள்ளுவர் சிலையை புதுவையைச் சேர்ந்த சிற்ப கலைஞர் முனுசாமி வடிவமைத்து உள்ளார். இந்த சிலை வெண்கலத்தில் 7 அடி உயரத்தில் 600 கிலோ எடை யில் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருவள்ளுவர் சிலை பிரான்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டது.

    பிரான்சில் உள்ள தமிழ் கலாசார மன்றம், பிரான்ஸ் அரசு அனுமதியுடன் பாரீஸ் அருகே செர்ஜி நகரத்தில் உள்ள மைய பூங்கா வளாகத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட உள்ளது. இந்த சிலையை பிரதமர் மோடி இன்று பார்வையிட உள்ளார்.

    பாரீசில் இன்று பிரமாண்ட தேசிய தினவிழா நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார், அவர் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் சேர்ந்து அணி வகுப்பினை பார்வையிடுகின்றனர்.

    இந்த அணிவகுப்பில் இந்திய முப்படைகளை சேர்ந்த 269 அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். பிரான்சிடம் இருந்து வாங்கப்பட்ட ரபேல் போர் விமானங்களும் பிரான்ஸ் விமாப்படையுடன் இணைந்து சாகசங்களில் ஈடுபட உள்ளன. இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். சென்னை போர்க்கப்பலும் இந்த தேசிய தின விழா அணிவகுப்பில் பங்கேற்கின்றன.

    இந்த நிகழ்ந்சி முடிந்ததும் இருநாட்டு தலைவர்களும் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். பாதுகாப்பு, கல்வி, பொருளாதாரம், தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கின்றனர்.

    மேலும் பிரான்சிடம் இருந்து இந்திய கடற்படைக்காக 26 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. பிரான்ஸ் தொழில்நுட்ப உதவியுடன் மும்பை மலே கான் கப்பல் கட்டும் தளத்தில் 3 ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகிறது.

    • விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள வங்க கடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது.
    • 1 மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.

    கன்னியாகுமரி:

    அமாவாசை தினம் என்பதால் கன்னியாகுமரியில் ஒரு புறம் கடல் சீற்றமாகவும், கொந்தளிப்பாகவும் காணப்படுகிறது.

    இன்னொரு புறம் கடல் உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள வங்க கடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது. அதே வேளையில் இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக் கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடனும் சீற்றமாகவும் காணப்பட்டது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

    இதற்கிடையில் காலை 9 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து 1 மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.

    அதன்பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர். கன்னியாகுமரி முக்கடல் சங்கத்தில் கடல்சீற்றம் காரணமாக சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க சுற்றுலா போலீசார் தடை விதித்தனர். மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது.

    இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோஷமாக வீசின. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் பெரும்பாலான கட்டுமரம் மற்றும் வள்ளம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    • திருவள்ளுவர் அறக்கட்டளை பொருளாளர் இறையடிகன், பொறுப்பாளர் உதயகுமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
    • திருக்குறள் தொண்டர் கருப்பசாமியை பாராட்டி இணை செயற்பொறுப்பாளர் நெடுஞ்சேர லாதன் நினைவு பரிசு வழங்கினார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி திருவள்ளுவர் அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் 1-ந்தேதி குமரிமுனை திருக்குறள் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதேபோல வைகாசி மாத பிறப்பான நேற்று 17-வது ஆண்டு குமரி முனை திருக்குறள் திருவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் சங்கிலித்துறை கடற்கரையில் அமைந்துள்ள திருக்குறள் ஒண்சுடர் தூணில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.

    தமிழ் அறிஞர் செந்தூர் பாரிசுடர் ஏற்றி வைத்தார். பின்னர் திருவள்ளுவர் அறக்கட்டளை செயல் பொறுப்பாளர் தாகூர் மற்றும் தமிழ் அறிஞர் கணேஷ் ஆகியோர் முன்னிலையில் திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.

    அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு திருவள்ளுவர் அறக்கட்டளை பொறுப்பாளர் கதிர் முத்தையன் தலைமையில் தமிழ் அறிஞர்கள் படகில் புறப்பட்டு சென்று திருவள்ளுவர் சிலையின் கால் பாதத்தில் மலர் தூவி வழிபட்டனர். மாலையில் லீபுரம் சந்திப்பில் இருந்து திருக்குறளூருக்கு தமிழ் அறிஞர்கள் திருவள்ளுவர் அறக்கட்டளை பொறுப்பாளர் ராமன் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.

    இந்த ஊர்வலத்தை புனிதா கணேசன் தொடங்கி வைத்தார். பின்னர் இரவு திருக்குறளூரில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு திருவள்ளுவர் அறக்கட்டளை ஆட்சி பொறுப்பாளர் தமிழ் முகிலன் தலைமை தாங்கினார். லீபுரம் பஞ்சாயத்து தலைவி ஜெயக்குமாரி லீன், துணை தலைவர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை பொறுப்பாளர் பாண்டிய ராஜன் வரவேற்று பேசினார்.

    இதில் திருவள்ளுவர் அறக்கட்டளை பொருளாளர் இறையடிகன், பொறுப்பாளர் உதயகுமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். திருக்குறள் தொண்டர் கருப்பசாமியை பாராட்டி இணை செயற்பொறுப்பாளர் நெடுஞ்சேர லாதன் நினைவு பரிசு வழங்கினார். பின்னர் அறக்கட்டளை பொறுப்பாளர் விமுனா மூர்த்தி, உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை நிறுவனர் குறளமிழ்தன் ஆகியோர் திருக்குறள் திறப்பாடு போட்டி நடத்தினார்கள். முடிவில் அறக்கட்டளை பொறுப்பாளர் நற்றேவன் நன்றி கூறினார்.

    • வி.ஜி.பி. உலகத் தமிழ் சங்க தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோஷம் சார்பில், திருவள்ளுவர் சிலை வழங்கப்பட்டுள்ளது.
    • குஜராத் மணிநகரில், புதிதாக தமிழ்ப் பள்ளிக்கூடம் அமைக்கும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.

    குஜராத் மாநிலம் மணிநகரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா தமிழ் பள்ளிக்கு, வி.ஜி.பி. உலகத் தமிழ் சங்க தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோஷம் சார்பில், திருவள்ளுவர் சிலை வழங்கப்பட்டுள்ளது.

    இந்த சிலையை தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வி.ஜி.சந்தோஷம், மல்லைத் தமிழ் சங்கம் தலைவரும், மதிமுக துணை பொதுச் செயலாளருமான மல்லை சத்யா உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.

    இதேபோல், குஜராத் மணிநகரில், புதிதாக தமிழ்ப் பள்ளிக்கூடம் அமைக்கும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.

    இந்த விழாவில், சிறப்பு விருந்தினர்களாக குஜராத் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஜெகதீஷ் ஈஸ்வர், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

    • உயர்நீதிமன்ற நீதிபதி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த மின்னல் நரசிங்கபுரம் கிராமத்தில் திருவள்ளுவர் உருவசிலை திறப்பு விழா அமைப்பு குழு தலைவர் ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் ஏகாச்சாரம் தலைமையில் விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன், தமிழ்நாடு பாடநூல் கழகச் செயலாளர் கண்ணப்பன் முன்னிலையில் நடைபெற்றது.

    சிறப்பு அழைப்பாளராக குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தனர்.

    நிகழ்ச்சியில் பட்டதாரி ஆசிரியர்கள் டி.கே.மூர்த்தி, சாம்பசிவன், அருனகிரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வடிவேலு மற்றும் பலர் உடன் இருந்தனர். முடிவில் ஓய்வு பெற்ற ஆசிரியர் பாண்டியன் நன்றி கூறினார்.

    • நேதாஜியின் பிறந்தநாளையொட்டி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பாளை மகராஜநகர் ரெயில்நிலைய சாலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு மாவட்ட தலைவர் கண்மணிமாவீரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • தமிழக அரசின் சார்பில் வேய்ந்தான்குளம் புதிய பஸ்நிலையத்தில் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ், திருவள்ளுவர் உருவ சிலை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    நெல்லை:

    நேதாஜியின் பிறந்தநாளையொட்டி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பாளை மகராஜநகர் ரெயில்நிலைய சாலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு மாவட்ட தலைவர் கண்மணிமாவீரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை ெசலுத்தப்பட்டது.

    பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மத்திய, மாநில அரசுகள் நேதாஜி பிறந்த நாளை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும், தமிழக அரசின் சார்பில் வேய்ந்தான்குளம் புதிய பஸ்நிலையத்தில் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ், திருவள்ளுவர் உருவ சிலை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் அ.தி.மு.க. முன்னாள் அரசு வக்கீல் புல்லட்ராஜா, அ.தி.மு.க. வக்கீல் அன்புஅங்கப்பன், த.ம.மு.க. மாநகர இளைஞரணி செயலாளர் முத்துப்பாண்டி, த.ம.ஜ.க. மாவட்ட செயலாளர் அப்துல்ஜப்பார், நிர்வாகிகள் டேனியல், துரைச்சாமி, டிக்முத்து, முருகேஷ், பரமசிவபாண்டியன், சிவந்தி முத்துவளவன், சிவந்தி அறிவாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருவள்ளுவர் சிலை கடல் உப்புக்காற்றினால் பாதிப்படையாமல் இருப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசப்படுவது வழக்கம்.
    • திருவள்ளுவர் சிலையில் படிந்திருந்த உப்புத்தன்மை முழுமையாக அகற்றப்பட்டு விட்டதா? என்பதனை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை எழுப்பப்பட்டு உள்ளது. இந்த சிலை கடல் உப்புக்காற்றினால் பாதிப்படையாமல் இருப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசப்படுவது வழக்கம்.

    அதன்படி தற்போது ரூ.1 கோடி செலவில் திருவள்ளுவர் சிலையில் ரசாயன கலவை பூசும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி கடந்த ஜூன்மாதம் முதல் 5 மாதங்களுக்கு திருவள்ளுவர் சிலையை பார்வையிட சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.

    சிலையின் ஒவ்வொரு பகுதியில் உள்ள சிமெண்ட் பாய்ண்ட்களில் படிந்திருக்கும் கடல் உப்பு தன்மை அகற்றப்பட்டு கடுக்காய், சுண்ணாம்பு, பனைவெல்லம் ஆகியவை கலந்த சிமெண்ட் கலவை பூசும் பணி நடைபெற்றது.

    இந்த நிலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக பொது மேலாளர் பாரதி தேவி, தமிழ்நாடு தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம், மத்திய மின் வேதியியல் ஆய்வக தலைமை விஞ்ஞானி டாக்டர் சரஸ்வதி, விஞ்ஞானி டாக்டர் அருண் சந்திரன், சுற்றுலா வளர்ச்சி கழக திட்ட பொறியாளர் பால் ஜெப ஞானதாஸ், உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், மண்டல மேலாளர் டேவிட் பிரபாகர், கன்னியாகுமரி சுற்றுலா வளர்ச்சி கழக மேலாளர் உதயகுமார், குமரி மாவட்ட சுற்றுலா அதிகாரி (பொறுப்பு) சதீஷ்குமார், ஒப்பந்தக்காரர் ராஜன் உள்பட தொல்லியல் துறை வல்லுனர்கள் மற்றும் காரைக்குடியை சேர்ந்த கெமிக்கல் நிறுவன வல்லுநர்கள் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது திருவள்ளுவர் சிலையில் படிந்திருந்த உப்புத்தன்மை முழுமையாக அகற்றப்பட்டு விட்டதா? என்பதனை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன் பிறகு சோதனை முறையில் திருவள்ளுவர் சிலையில் ரசாயன கலவை பூசி வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.

    பின்னர் வல்லுனர் குழுவினர் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை பார்வையிட அனுமதிப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இன்னும் 15 நாட்களில் ரசாயன கலவை பூசும் பணி நிறைவடைந்து திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • திருவள்ளுவர் சிலை நடுக்கடலில் நிறுவப்பட்டுள்ளதால் உப்பு காற்றால் பாதிக்கப்படும்.
    • பொங்கல் பண்டிகைக்கு முன்பாக பணி நிறைவு செய்யப்பட்டு சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு திறந்து விடப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலா தலம் ஆகும். கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை சுற்றுலா பயணிகளை மிகவும் கவரும் அம்சங்கள் ஆகும்.

    திருவள்ளுவர் சிலை நடுக்கடலில் நிறுவப்பட்டுள்ளதால் உப்பு காற்றால் பாதிக்கப்படும். எனவே 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிலை முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு அதன் மேல் ரசாயன கலவை பூசப்படுவது வழக்கம். அதன்படி கடந்த ஜூன் மாதம் 6-ந்தேதி திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணி ரூ.1 கோடி செலவில் ஆரம்பமானது.

    முதல்கட்டமாக சிலையை சுற்றிலும் இரும்பு குழாய்கள் மூலம் சாரம் அமைக்கும் பணி நடைபெற்றது. இதற்காக 80 டன் இரும்பு குழாய்கள் பயன்படுத்தப்பட்டன. சிலையை சுற்றிலும் காகித கூழ் ஒட்டும் பணி நடைபெற்றது. இவ்வாறு ஒட்டப்படும் காகித கூழ் மூலம் சிலையில் படிந்திருக்கும் உப்புத்தன்மை முழுவதுமாக நீக்கப்படும். பின்னர் காகித கூழ் அகற்றப்பட்டு சிலை சுத்தம் செய்யப்படும். தற்போது காகித கூழ் ஒட்டும் பணி 80 சதவீத அளவு நிறைவடைந்து உள்ளது. அடுத்த கட்டமாக காகிதகூழ் அகற்றப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட ரசாயன கலவை மூலம் சிலை முழுவதுமாக பூசப்படும்.

    இந்தப் பணிகள் அனைத்தும் நவம்பர் மாதம் 5-ந்தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் இடையிடையே பெய்த மழை காரணமாகவும் காற்றின் வேகம் காரணமாகவும் பணிகள் தடைபட்டன.

    தற்போது 65 சதவீத பணிகள் நிறைவடைந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வருகிற பொங்கல் பண்டிகைக்கு முன்பாக பணி நிறைவு செய்யப்பட்டு சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு திறந்து விடப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×