search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sp velumani"

    • அனைத்து செய்தியாளர் சந்திப்பும் இனி பாஜக கட்சி அலுவலகத்தில் மட்டும்தான் நடைபெறும்
    • செய்தியாளர் சந்திப்பை முறைப்படுத்தப் போகிறோம்.

    2024 பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ம.க, த.மா.க உடன் கூட்டணி அமைத்து களம் கண்ட பாஜக படுதோல்வி அடைந்தது.

    இதையடுத்து, அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்திருந்தால் 35 இடங்களில் வென்றிருப்போம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    பின்னர் கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்த அண்ணாமலை அதிமுக கட்சியில் எடப்பாடி- வேலுமணி இடையே உட்கட்சி பூசல் இருப்பது போல் தெரிகிறது" என்று தெரிவித்தார்.

    இதையடுத்து, எஸ்.பி.வேலுமணி கூறிய கூட்டணி தொடர்பான கருத்துக்கு தமிழிசை சவுந்தரராஜன் ஆதரவு தெரிவித்தார்.

    "அதிமுக- பாஜக கூட்டணி அமைத்து இருந்தால் 35 இடங்கள் கிடைத்திருக்கும் என்ற வேலுமணியின் கருத்து உண்மையே.அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து இருந்தால் திமுக இத்தனை இடங்களை பெற்றிருக்க முடியாது" என்று அவர் கூறினார்.

    இப்படி அண்ணாமலையின் கருத்துக்கு மாறாக தமிழிசை பேசியது பாஜக வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, இனி விமான நிலையத்தில் பிரஸ் மீட் கிடையாது. அனைத்து செய்தியாளர் சந்திப்பும் இனி பாஜக கட்சி அலுவலகத்தில் மட்டும்தான் நடைபெறும். செய்தியாளர் சந்திப்பை முறைப்படுத்தப் போகிறோம். பிரஸ்மீட் எப்போது என பாஜக தரப்பில் இருந்து முறைப்படி தெரிவிக்கப்படும். பாஜகவினர் இனி இஷ்டத்திற்கு செய்தியாளர்களை சந்திக்கமாட்டார்கள்" என்று தெரிவித்தார்.

    டெல்லியில் இருந்து கோவை திரும்பிய அண்ணாமலை இவ்வாறு தெரிவித்திருப்பது பாஜக மேலிடத்தின் முடிவாக இருக்கும் என்று சொல்லப்படுகின்றது.

    • அதிமுக கட்சியில் எடப்பாடி- வேலுமணி இடையே உட்கட்சி பூசல் இருப்பது போல் தெரிகிறது.
    • அண்ணாமலையின் பேட்டிக்கு அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு பதிலடி.

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி புறப்பட்டார். அதற்கு முன் செய்தியாளர்களுக்கு பதில் அளித்தார்.

    அப்போது அண்ணாமலை," பாஜகவுடன் அதிமுக இணைந்து போட்டியிருந்தால் 35 தொகுதிகளை பிடித்திருப்போம் என எஸ்.பி. வேலுமணி சொல்கிறார். ஆனால், அதிமுக-வின் மற்ற தலைவர்கள் பாஜக உடன் நாங்கள் இல்லை என்றனர். இதனால் எஸ்.பி. வேலுமணி கூறியதை பார்க்கும்போது, அதிமுக கட்சியில் எடப்பாடி- வேலுமணி இடையே உட்கட்சி பூசல் இருப்பது போல் தெரிகிறது" என்றார்.

    தொடர்ந்து, அண்ணாமலையின் பேட்டிக்கு அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு பதிலடி கொடுத்துள்ளது. அதில், அ.தி.மு.க. குறித்தோ, எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி குறித்தோ பேச அண்ணாமலைக்கு எந்த அருகதையும் இல்லை என குறிப்பிட்டுள்ளது.

    இந்நிலையில், எஸ்.பி.வேலுமணி கூறிய கூட்டணி தொடர்பான கருத்துக்கு தமிழிசை சவுந்தரராஜன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தமிழிசை கூறுகையில், "அதிமுக- பாஜக கூட்டணி அமைத்து இருந்தால் 35 இடங்கள் கிடைத்திருக்கும் என்ற வேலுமணியின் கருத்து உண்மையே.

    அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து இருந்தால் திமுக இத்தனை இடங்களை பெற்றிருக்க முடியாது. அதிமுக குறித்த அண்ணாமலையின் கருத்துக்கு அவரிடமே விளக்கம் பெறுங்கள்.

    அதிமுக உட்கட்சி விவகாரத்தில் நான் எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. கூட்டணி என்பது அரசியல் வியூகம். 2026 தேர்தல் குறித்து முடிவு செய்ய நிறைய கால அவகாசம் உள்ளது.

    பாஜக ஐடி விங், அண்ணாமலை வார் ரூம் நிர்வாகிகளை எச்சரிக்கிறேன். கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் மாநில தலைவராக எச்சரிக்கிறேன்.

    ஆளுநர் பணியை விட்டு விட்டு வந்ததற்கு நானே கவலைப்படவில்லை. உங்களுக்கு என்ன கவலை?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 2014-ல் சி.பி.ராதாகிருஷ்ணன் வாங்கியதை விட குறைவான வாக்குகளை பெற்றுள்ளார் அண்ணாமலை.
    • விமர்சனங்களை விட்டுவிட்டு பாஜக ஆட்சியில் கோவைக்கு திட்டங்களை அண்ணாமலை கொண்டு வரட்டும்.

    கோவை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி.

    * கடந்த காலங்களிலும் கோவையில் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.

    * 2019 பாராளுமன்ற தேர்தலில் தோற்ற பின்னரும் 2021-ல் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றி பெற்றது. 2021 சட்டமன்ற தேர்தலில் கோவையில் முழுமையாக வெற்றி பெற்றது.

    * கோவையில் 2019-ல் அதிமுக கூட்டணி பெற்ற வாக்குகளை விட தற்போது அதிக வாக்குகளை பெற்றுள்ளோம்.

    * பா.ஜ.க. கூட்டணியில் இருந்த போது அதிகம் பேசியது அண்ணாமலை தான்.

    * அதிமுக- பாஜக கூட்டணி பிரிவுக்கு காரணம் அண்ணாமலை தான்.

    * 2014-ல் சி.பி.ராதாகிருஷ்ணன் வாங்கியதை விட குறைவான வாக்குகளை பெற்றுள்ளார் அண்ணாமலை.

    * விமர்சனங்களை விட்டுவிட்டு பாஜக ஆட்சியில் கோவைக்கு திட்டங்களை அண்ணாமலை கொண்டு வரட்டும்.

    இவ்வாறு எஸ்.பி.வேலுமணி கூறினார்.

    • கேரளாவில் நடப்பது தி.மு.க.-வின் கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட்கள் ஆட்சி
    • தமிழக மக்களின் நலனை அண்டை மாநிலங்களிடம் அடகு வைப்பதை இந்த ‘நாடக மாடல் தி.மு.க. அரசு’ கைவிட வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அம்மாவின் அரசு பல சட்டப் போராட்டங்களை நடத்தி உச்சநீதிமன்றத்தில் 16.2.2018-ல் இறுதி ஆணையைப் பெற்று, அதன் அடிப்படையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு செயலாக்கத் திட்டத்தை அரசிதழில் 1.6.2018 அன்று வெளியிட்டது. அதன் அடிப்படையில், 2023-ல் காவிரியில் நமக்குரிய பங்கு நீரை பெறமுடியாத தி.மு.க. அரசின் நீர்வளத் துறை அமைச்சர் தனது அறிக்கையில் வாய்ஜாலம் காட்டி உள்ளார்.

    வார்த்தை ஜாலங்களில் கில்லாடிகளான தி.மு.க. அரசின் மந்திரிகளில், தலையாய மந்திரியான துரைமுருகன் சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டும் பிரச்சனை முதல், காவிரிப் பிரச்சனை வரை ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று போராடுவோம் என்று கூறி மக்களை முட்டாளாக்கப் பார்க்கிறார்.

    தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம், அண்டை மாநிலங்களான ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதும்; கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே அணை கட்ட முயற்சிப்பதும்; கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதும், தி.மு.க. அரசின் எதிர்ப்பே இல்லாமல் சுதந்திரமாக நடைபெறுவதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் உள்ளனர்.

    தற்போது கேரளாவில் நடப்பது தி.மு.க.-வின் கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட்கள் ஆட்சி. சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை அனைத்து பத்திரிகைகளும், ஊடகங்களும் வெளிச்சம் போட்டுக்காட்டி வருகின்றன. இச்செய்திகளின் அடிப்படையில் கேரள அரசின் நடவடிக்கைக்கு பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, இரு மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    தங்கள் குடும்பத்தினர் நடத்தி வரும் தொழில்களுக்காகவும், சுயநலத்திற்காகவும், தமிழக மக்களின் நலனை அண்டை மாநிலங்களிடம் அடகு வைப்பதை இந்த 'நாடக மாடல் தி.மு.க. அரசு' கைவிட வேண்டும். காவிரி நீர் பிரச்சனை குறித்து ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. சட்ட ரீதியான போராட்டம் நடத்தியும், தேர்தல் கூட்டணி அமைத்துள்ள அண்டை மாநில ஆட்சியளர்களிடமும் வற்புறுத்தியும், தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டுவதை விட்டுவிட்டு, தட்டிக் கழிக்கும் அறிக்கையை அமைச்சர் வெளியிடுவது, தமிழக மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகமாகும்.

    அடுத்தவர்கள் மீது வீண் பழி சுமத்தி, தங்களை புனிதமானவர்களாகக் காட்டி மக்களை ஏமாற்றலாம் என்ற எண்ணத்தை தி.மு.க. ஆட்சியாளர்கள் கைவிட்டு, பசுமைத் தீர்ப்பாயம் மற்றும் சட்டத்தின் மூலம் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை.
    • எங்களுடன் கலந்தாலோசித்தே எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார்.

    கோவை:

    அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை.

    * எங்களுடன் கலந்தாலோசித்தே எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார்.

    * ஈபிஎஸ் தலைமையில் அதிமுக பெரும் வெற்றி பெறும், எனவே ஓபிஎஸ், சசிகலா இணைப்பு சாத்தியமில்லை.

    * அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலாவை சேர்ப்பது போன்ற பிம்பத்தை சிலர் ஏற்படுத்துகிறார்கள்.

    * வரும் சட்டசபை தேர்தல் மட்டுமல்ல எப்போது சட்டசபை தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் தலைமையில் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெற்று மீண்டும் அம்மாவின் ஆட்சி அமையும். அப்போது கோவை மாவட்டத்திற்கு விடுபட்ட திட்டங்களை நாங்கள் கொண்டு வருவோம் என்று கூறினார்.

    • பூங்கொத்து வழங்கி பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
    • பைத்தியக்காரர்கள் ஆதாரமற்ற வதந்திகளை பரப்பினார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் முடிவு அடுத்த மாதம் வெளியானதும் அ.தி.மு.க.வில் பிரிவு ஏற்படும் என்றும், அப்போது கட்சிக்கு தலைமை தாங்க போவது செங்கோட்டையனா? அல்லது எஸ்.பி.வேலுமணியா? என தெரிய வரும் என்றும் தி.மு.க. அமைச்சர் ரகுபதி கடந்த 2 நாட்களுக்கு முன்பு பேட்டி அளித்திருந்தார்.

    இதற்கு காரணம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அண்மையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த வைத்திலிங்கத்தை சந்தித்து ரகசிய ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி வந்தது.

    பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி வலுவான கூட்டணி அமைக்க தவறி விட்டதால் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாகவே எஸ்.பி.வேலுமணி அதிருப்தியில் இருப்பதாகவும், சமூக வலை தளங்களில் செய்திகள் உலா வந்தன.

    இதை உறுதிப்படுத்தும் வகையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி கடந்த 12-ந் தேதி பிறந்தநாள் கொண்டாடிய போது அ.தி.மு.க.வில் உள்ள பலரும் அவருக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து விட்டு வந்தனர்.

    ஆனால் எஸ்.பி.வேலுமணி மட்டும் செல்லவில்லை. அதற்கு பதிலாக தனது எக்ஸ் வலைதளத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். கழகத்தை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக வழி நடத்தி வருவதாக அதில் குறிப்பிட்டிருந்தார்.

    எக்ஸ் வலைதளத்தில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த எஸ்.பி.வேலுமணி எதற்காக நேரில் சென்று எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வில்லை என்று அ.தி.மு.க.வினர் பேசத் தொடங்கினார்கள்.

    இந்த நிலையில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரான எஸ்.பி.வேலுமணி நேற்று சென்னை வந்து அடையாரில் இருந்த எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

    தன்னுடன் வந்திருந்த ஆதரவாளர்களையும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வைத்து ஆளுயர ஆப்பிள் மாலை அணிவித்தார். இதன் மூலம் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவிக்கையில், எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை திறம்பட நடத்துவதை சகித்துக்கொள்ள முடியாமல் சில பைத்தியக்காரர்கள் ஆதாரமற்ற வதந்திகளை பரப்பினார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

    அ.தி.மு.க. பொதுக் குழுவில் தீர்மானம் கொண்டு வந்து அனைவரும் ஒருமனதாக எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத் ேதாம். அவரது தலைமையில் கட்சி வீறுநடை போடுவதாகவும் தெரிவித்தார்.

    முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில் அ.தி.மு.க. என்பது மிகப்பெரிய ஆலமரம் அதன் கீழ் எல்லோரும் இருக்கிறோம். இங்கு பிளவு என்ற பேச்சுக்கே இடமில்லை.

    செங்கோட்டையனின் பேரன் திருமணம் வரவேற்பு கோவையில் ஜூன் 16-ந் தேதி நடைபெறுகிறது. இந்த திருமணத்தை எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி நடத்துகிறார்.

    எனவே கட்சி வளர்ச்சியை பொறுக்க முடியாமல் வெளியில் பிதற்றுகிறார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது என்று தெரிவித்தார்.

    இதேபோல் மூத்த தலைவர்களும் தி.மு.க.வை சாடி உள்ளனர். 

    • அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்களை முடக்குவதில் தான் தி.மு.க.வினர் குறியாக உள்ளனர்.
    • எடப்பாடி பழனிச்சாமி வழங்கிய சிறப்பான ஆட்சியின் பலன்களை மக்கள் உணர்ந்து அ.தி.மு.க.விற்கு வாக்களிப்பார்கள்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கணபதி பாளையம் ஊராட்சி கள்ளிமேட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் பொது க்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி., வேலுமணி பேசியதாவது:-

    மக்களுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்துவதை விட்டு, விட்டு , அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்களை முடக்குவதில் தான் தி.மு.க.வினர் குறியாக உள்ளனர். நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். ஜெயலலிதா செய்த நல்ல பல திட்டங்களும், எடப்பாடி பழனிச்சாமி வழங்கிய சிறப்பான ஆட்சியின் பலன்களை மக்கள் உணர்ந்து அ.தி.மு.க.விற்கு வாக்களிப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

    • பாஜக ஐடி விங் பரப்பும் தகவல்களுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டு இருக்காதீர்கள். ’டோன்ட் கேர்’ என விட்டுவிடுங்கள்.
    • மீண்டும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வரவேண்டும்

    "3% - 4% வாக்கு வங்கி வச்சிருக்க பாஜகவில் நான் சேருவதாகச் சொல்கிறார்கள். இதுக்குபோய் நான் பதில் சொல்லனுமா? Don't Care-னு விட்டுட்டு போயிடணும்" என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

    கோவை சிங்காநல்லூர் பகுதியில் அதிமுகவின் முன்னாள் மாவட்ட செயலாளர் சிங்கை கோவிந்தராஜனின் 25வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அதிமுகவின் அமைப்புச் செயலாளரும், சட்டப்பேரவை கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார்.

    அந்நிகழ்ச்சியில் பேசிய எஸ்.பி.வேலுமணி, "பாஜக ஐடி விங் வெளியிடும் தகவல்களை எல்லாம் பார்க்க நேரமில்லை. தற்போது மக்களவைத் தேர்தல் வந்து விட்டது. உலக அளவில் அதிக தொண்டர்களைக் கொண்ட 7வது கட்சியாக அதிமுக உள்ளது. இந்த கட்சி நமது தாய்வீடு போல. சாதாரணமாக இருந்த நம்மை எம்.எல்.ஏ.,க்களாக, அமைச்சர்களாக உயர்த்தி அழகு பார்த்த கட்சி அதிமுக. எல்லோரும் தாய் வீட்டிற்குத் தான் வருவார்கள். தாய் கழகத்தை விட்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

    பாஜக ஐடி விங் பரப்பும் தகவல்களுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டு இருக்காதீர்கள். 'டோன்ட் கேர்' என விட்டுவிடுங்கள். கோவைக்கு அதிமுக ஆட்சிக்காலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். அதை சொல்லியே வாக்காளர்களிடம் மக்களவைத் தேர்தலில் வாக்கு கேட்போம். மீண்டும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வரவேண்டும் என்பதுதான் நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும்

    சிறப்பான முறையில் 4 ஆண்டுகள் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பணியாற்றினார். எதிர்கட்சி தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். 40 தொகுதிகளிலும் வெல்வோம். கூட்டணி அமைத்து அதிமுக வெற்றி பெறுவோம்" என அவர் தெரிவித்தார்.

    • தமிழகத்தில் தற்போதைய தேவை ஆட்சி மாற்றம்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கும் திட்டங்கள் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தது தான்.

    கருமத்தம்பட்டி:

    கருமத்தம்பட்டியில் நடந்த கிறிஸ்தவ அமைப்பு மாநாட்டில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழகத்தில் தற்போதைய தேவை ஆட்சி மாற்றம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோர் பல்வேறு வாக்குறுதிகளை தந்தனர். சிறுபான்மை மக்களுக்கு என்றும் அம்மா வழியில் பாதுகாவலர் எடப்பாடி பழனிசாமி தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. பல திருச்சபை திறப்புக்கு காரணம் அவர் தான்.

    முதலமைச்சராக இருந்தபோதும் எளிதாக மக்கள் அணுகக் கூடியவராக செயல்பட்டார். அவர் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்று தான் கோவை மாவட்டத்தில் 10 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்துள்ளனர்.

    கோவை மாவட்டத்தில் கடந்த 50 ஆண்டு காலம் இல்லாத வளர்ச்சியை எடப்பாடி பழனிசாமி தந்துள்ளார். மேம்பாலம், அத்திக்கடவு-அவினாசி திட்டம், கலெக்டர் அலுவலகம், புதிய கல்லூரிகள், தாலுகா அலுவலகம், அரசு மருத்துவமனையில் புதிய கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கும் திட்டங்கள் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தது தான்.

    கிறிஸ்தவ அமைப்பு சார்பில் நடத்தப்படும் பல பள்ளிகளுக்கு அனுமதி வழங்கினார். தற்போதைய ஆட்சியில் கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுக்க வேண்டும். பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகியுள்ளோம். பாராளுமன்ற தேர்தலில் பழனிசாமி தலைமையில் பெரிய கூட்டணி அமையும். சட்டசபை தேர்தல் எப்போது நடந்தாலும் பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்பார்.

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பில்லை. பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும், சட்டசபை தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. வெற்றி பெறும். அவர் பொறுப்பேற்ற பின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் அறிவுரையின் படி மேம்படுத்த தமிழக அரசு தவறியதால் அங்கீகாரம் ரத்து என குற்றச்சாட்டு
    • அரசு பூங்காவிற்கு மூடுவிழா நடத்துவது வேதனை என்று சாடல்

    கோவை,

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது:-

    கோவை மாநகரின் மையப்பகுதியான காந்திபுரத்தில் அமைந்துள்ள வ.உ.சி. பூங்கா என அழைக்கப்படும் வ.உ.சிதம்ப ரனார் பூங்காவை மேம்ப டுத்த மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவ டிக்கை மேற்கொள்ளாத தால் கடந்த ஆண்டு இதன் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு, அதன் தொடர்ச்சியாக இங்குள்ள உயிரினங்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருவது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். மேலும் கோவை மாவட்ட மக்களையும், சுற்றுலா பயணிகளையும் மிகவும் வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது.

    இந்த பூங்கா 1965-ம் ஆண்டு நான்கரை ஏக்கர் பரப்பளவில் தொடங்க ப்பட்டு ஒரு உயிரியல் மற்றும் பொழுதுபோக்கு பூங்காவாக சுற்றுலாப யணிகளை பெரிதும் கவர்ந்து வந்தது. 2013-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இங்கு 335 பறவைகள், 106 பாலூட்டிகள் மற்றும் 54 ஊர்வன உள்ளிட்ட 890 விலங்குகள் இருந்தன. வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவாக இப்பெயர் பூங்காவிற்கு சூட்டப்பட்டது. கோவை மாநகராட்சியால் பூங்கா நிர்வகிக்கப்பட்டு வந்தது.

    கோவை மாவட்டத்தில் சிறந்த பொழுதுபோக்கு இடங்கள் இல்லாத நிலையில் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதி னருக்கும் இப்பூங்கா ஒரு பொழுது போக்கு மையமாக சுமார் 60 ஆண்டுகளாக விளங்கு கிறது.

    முன்னாள் பிரதமர் அப்துல்கலாம் இப்பூங்கா வில் நட்ட மரம் பச்சைநாயகி என்ற பெயரில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சிறப்பு மிக்க உயிரியல் பூங்காவை மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் அறிவுரையின் படி மேம்படுத்த கோவை மாநகராட்சி நிர்வாகமும், தமிழக அரசும் முன்வர தவறிய நிலையில் இதன் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு உயிரினங்கள் இடம் மாற்றம் செய்யப்படு வது, மிகவும் கண்டிக்கத்தக்கது ஆகும்.

    தி.மு.க. அரசு கடந்த 3 ஆண்டுகளாக கோவை மாவட்டத்திற்கென எந்தவொரு திட்டத்தையும் தராமல், அ.தி.மு.க. அரசு கோவையின் வளர்ச்சிக்கு தந்து சிறப்பித்த சாதனை திட்டங்களான பாலங்கள், குடிநீர் திட்டப்பணிகள், சீர்மிகு நகர திட்டம், சாலைகள் விரிவாக்கம் மற்றும் குளங்கள் மேம்பாடு ஆகியவற்றில் சுனக்கம் காட்டி கோவை மாவட்டத்தை புறக்கணித்து வருகிறது. இந்தநிலையில் வ.உ.சி. பூங்காவில் உள்ள உயிரினங்கள் இடமாற்றம் செய்து இந்த அரசு பூங்காவிற்கு மூடு விழா காண்கிறது.

    எனவே வ.உ.சி. விலங்கியல் பூங்காவில் உள்ள உயிரினங்களை இடமாற்றம் செய்யப்படு வதை கோவை மாநகராட்சி நிர்வாகமும், தமிழக அரசும் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை மேற்கொண்டு மேம்படுத்தி மீண்டும் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்வதோடு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் விருப்பத்தை பூர்த்தி செய்ய அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி தான் அ.தி.மு.கவின் தலைவர்.
    • எடப்பாடி பழனிசாமி தலைமையில் வலிமையான கூட்டணி அமையும்.

    கோவை:

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவையில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    2½ ஆண்டு காலமாக ஆட்சி செய்து வரும் தி.மு.க அரசு கோவை மாவட்டத்திற்கு எந்த திட்டமும் தரவில்லை. எந்தவொரு திட்டமும் புதிதாக வரவில்லை.

    கோவையில் சாலைகள் தரமற்ற முறையில் போடப்படுகிறது. பல சாலைகள் போடப்படவில்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் கோவையில் 500 சாலை திட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்தார்கள். எனவே எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வந்தால் தான் தமிழ்நாட்டிற்கு விடிவு காலம் வரும்.

    நான் அதிமுகவின் ஏக்நாத் ஷிண்டே என சிலர் பிரச்சனையை கிளப்பி வருகின்றனர். இந்த பிரச்சனையை கிளப்புபவர்கள் யார் என்று தெரியவில்லை. அது எங்கிருந்து வருகிறது எனவும் தெரியவில்லை.

    தி.மு.க. ஐ.டி.விங் குழுவினர் ஏதாவது செய்து அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இது போன்ற கருத்துக்களை பரப்பி வருகின்றனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி தான் அ.தி.மு.கவின் தலைவர்.

    ஏக்நாத் ஷிண்டே என்பவர் அவரது கட்சிக்கு துரோகம் செய்துள்ளார். நான் ஏற்கனவே தெளிவாக சொல்லிவிட்டேன். நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த அ.தி.மு.க தொண்டர்களும் எடப்பாடி பழனிசாமி பின்னால் முழுமையாக நிற்கிறோம். நான் என்றைக்குமே அ.தி.மு.க காரன் தான். எனது குடும்பமே அ.தி.மு.க குடும்பம் தான். எனவே எந்தவித குழப்பம் செய்தாலும் இங்கு எதுவும் நடக்காது. நாங்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வீறுநடை போடுவோம்.

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் வலிமையான கூட்டணி அமையும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்வோம். எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க வெல்லும். அத்தனை மக்களும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வர வேண்டும் என நினைக்கின்றனர்.

    பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என எடப்பாடி பழனிசாமி தெளிவாக சொல்லி விட்டார். அதனை இவர்களால்தாங்க முடியவில்லை. அதனால் இப்படி குழப்பம் ஏற்படுத்த பார்க்கிறார்கள். இதுபோல் சில்மிஷம் செய்து எங்களை பிரிக்க நினைக்கிறார்கள். அது நடக்காது. அ.தி.மு.க.வில் இருந்து என்னை மட்டுமல்ல. யாரையும் பிரிக்க முடியாது.

    எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார். பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெல்லும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று நெல்லை வந்தார்.
    • நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    தமிழக உள்ளாட்சித்துறை முன்னாள் அமைச்சரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான எஸ்.பி. வேலுமணி இன்று நெல்லை வந்தார். சந்திப்பு பகுதியில் அவரை நெல்லை மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் நிர்வாகிகள் வரவேற்றனர்.

    இந்த வரவேற்பு நிகழ்ச்சி அமைப்புச் செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், சுதா பரமசிவன், ஏ.கே.சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் நடை பெற்றது.

    அப்போது அ.தி.மு.க. தேர்தல் பிரிவு இணைச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இன்பதுரை அவருக்கு சால்வை அணிவித்தார். இந்த வரவேற்பு நிகழ்ச்சியின் போது மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, டவுன் கூட்டுறவு வங்கி தலைவர் பால் கண்ணன், பகுதி செயலாளர்கள் காந்தி வெங்கடாசலம், சண்முககுமார், சிந்து முருகன், சின்னத்துரை, பாளை பகுதி மாணவரணி செயலாளர் புஷ்பராஜ் ஜெய்சன், முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×