என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

முன்னாள் அமைச்சர்கள் மீது புகார்- போலீசாருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
- எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.
- புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான நிதி முறைகேடு புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எம்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
டெண்டர் முறைகேடு குறித்து கோவை மாநகராட்சி துணை ஆணையராக இருந்த காந்திமதிக்கு எதிராக வழக்கு தொடர அரசு அனுமதித்ததாக விஜிலெசன்ஸ் தெரிவித்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மேலும், அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகளில் மட்டும் ஏன் இவ்வளவு கால தாமதம் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் மீதான நிதி முறைகேடு தொடர்பான வழக்குகளில் காவல்துறையினர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.






