'பிரேமலதா விஜயகாந்த் துணை முதலமைச்சராக வேண்டும் என்பதுதான் எனது ஆசை' - எல்.கே.சுதீஷ்!

2011-ல் 29 தொகுதிகளில் வெற்றிப்பெற்று விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக சட்டமன்றம் சென்றார்.10 லட்சம் தொண்டர்கள் இன்று மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர்.
'பிரேமலதா விஜயகாந்த் துணை முதலமைச்சராக வேண்டும் என்பதுதான் எனது ஆசை' - எல்.கே.சுதீஷ்!
Published on

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பாசார் கிராமத்தில் தேமுதிகவின் மாநாடு நடைபெற்றது. 2026 சட்டசபைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து முடிவெடுக்க பிரேமலதாவுக்கு முழு அதிகாரம் வழங்கப்படுகிறது என்பது உட்பட மாநாட்டில் 11 தீர்மானங்கள் போடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ், 

"கடலூர் என்றாலே கேப்டனின் கோட்டை. ராசியான மாவட்டம் கடலூர். 2011-ல் மூன்று சட்டமன்ற தொகுதிகளில் தேமுதிக வெற்றிப் பெற்ற மாவட்டம். 2011-ல் 29 தொகுதிகளில் வெற்றிப்பெற்று விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக சட்டமன்றம் சென்றார். மீண்டும் அதேபோல தேதிமுக வெற்றிப்பெற்று பிரேமலதா விஜயகாந்த் துணை முதலமைச்சராக வேண்டும் என்பது எனது ஆசை. 10 லட்சம் தொண்டர்கள் இன்று மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர். அதனால் தேமுதிக சீட்டு எண்ணிக்கையில் பேரம் பேசுவதில் தவறில்லை. தேமுதிக எந்த கூட்டணியில் இடம் பெறுகிறதோ அந்தக் கட்சிதான் வெற்றிப்பெறும்." என தெரிவித்தார்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com