என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான் பா.ஜ.க.வின் கொள்கை- தமிழிசை
    X

    வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான் பா.ஜ.க.வின் கொள்கை- தமிழிசை

    • பீகார் மக்கள் பற்றி தி.மு.க.வினர் தரக்குறைவாக பேசியது சரித்திரத்தில் உள்ளது.
    • தமிழர்கள் மீது பிரதமர் மரியாதை வைத்திருப்பதால்தான் செங்கோலை பாராளுமன்றத்தில் வைத்தார்.

    தமிழகத்தில் தி.மு.க.வும், பிற மாநிலங்களில் இந்தியா கூட்டணியில் இருப்பவர்களும் பீகார் மக்களை துன்புறுத்துகிறார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:

    * பீகார் மக்களை தி.மு.க.வினர் கீழ்த்தரமாக நடத்துவதாக பிரதமர் கூறியதில் என்ன தவறு இருக்கிறது?

    * பீகார் மக்கள் பற்றி தி.மு.க.வினர் தரக்குறைவாக பேசியது சரித்திரத்தில் உள்ளது.

    * பீகாரிகள் அறிவில்லாதவர்கள் என கே.என்.நேரு சொன்னார். டேபிள் துடைக்க, பாத்ரூம் கழுவத்தான் சரியானவர்கள் என தயாநிதி கூறினார்.

    * தி.மு.க. மீது வைக்கப்படும் விமர்சனம் தி.மு.க. மீது மட்டும் தான், தமிழர்கள் மீது இல்லை என்பதை முதல்வருக்கு சொல்லிக்கொள்கிறேன்.

    * தமிழர்கள் மீது பிரதமர் மரியாதை வைத்திருப்பதால்தான் செங்கோலை பாராளுமன்றத்தில் வைத்தார்.

    * தமிழக முதல்வரின் வேற்றுமை அரசியல் எடுபடாது. வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான் பா.ஜ.க.வின் கொள்கை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×