தேர்வு எழுதுவதே போராட்டமாக வெடித்திருப்பது வேதனையிலும் வேதனை... தமிழிசை சவுந்தரராஜன்

தேர்வுகள் நடைபெற இருந்தது. முதன்மை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தேர்வு எழுதுவதே போராட்டமாக வெடித்திருப்பது வேதனையிலும் வேதனை... தமிழிசை சவுந்தரராஜன்
Published on

தமிழ் நாட்டில் சார்-பதிவாளர், துணை வணிகவரி அதிகாரி, தொழிலாளர் நல ஆய்வாளர் உள்ளிட்ட க்ரூப் 2 பணிகள், உதவியாளர் கணக்காளர், தொகுதி உதவியாளர் உள்ளிட்ட க்ரூப் 2 ஏ என காலியாக உள்ள 828 பணியிடகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கக தமிழ்நாடு முழுவதும் இன்று (பிப். 8) காலையும், மாலையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சா்பில் தேர்வுகள் நடைபெற இருந்தது.

எனினும், பல்வேறு நிர்வாகக் கோளாறு மற்றும் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக இன்று நடத்தப்பட இருந்த முதன்மை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. முன்னதாக

இன்றைய தேர்வு நடைபெற இருந்த நிலையில், தேர்வு மையம் முறையாக ஒதுக்கப்படவில்லை என கூறி தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்வர்கள் எதிர்கொண்ட இன்னல் மற்றும் கடைசி நேர அலைகழிப்புகளுக்கு முன்னாள் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சுவுந்தரராஜன் தனது X தளப்பதிவில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த பதிவில், "திமுக மாடல் அரசாங்கம் முற்றிலும் நிர்வாக சீர்கேட்டினால் நிலை குலைந்து போயிருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம்... 9000 டிஎன்பிஎஸ்சி தேர்வர்களின் கனவு இங்கே நசுக்கப்பட்டு கொண்டிருக்கிறது... இளைஞர்களின் வாழ்க்கை நசுக்கி விட்டு இளைஞர் அணி மாநாடு நடத்துவது தான் திமுகவின் அரசியல் நாடகம்.. பல இடங்களில் சென்டர் ஒதுக்கப்படாமல் போராடிக் கொண்டிருக்கின்ற நேரத்தில் சில இடங்களில் தேர்வு எழுத ஆரம்பித்து விட்டார்கள்.. இந்த குளறுபடி இந்த ஆட்சியின் குழப்பத்தின் உச்சக்கட்டம்.. வாழ்க்கைப் போராட்டமாக இருக்கும் இந்த இந்த இளைஞர்கள்.. விடிவு காலம் வேண்டும் என்று கடுமையாக தயாரித்து... தேர்வுக்கு வந்தால்.. தேர்வு எழுதுவதே போராட்டமாக வெடித்திருப்பது வேதனையிலும் வேதனை அரசு உடனே இதற்கு நடவடிக்கை தேவை... ஆயிரக்கணக்கானோர் தங்கள் நேரத்தையும் பொருளையும் செலவிட்டு.. ஆர்வமுடன் வந்தவர்கள் அலை கழிக்கப்பட்டிருக்கிறார்கள்... நியாயமாக சரியான திட்டமிடலுடன் தேர்வுகள் நடைபெற வேண்டும் என்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.. மறுபடியும் தேர்வு அறிவிக்கப்படும் பொழுது எந்த குளறுபடியும் இல்லாமல் பார்த்துக் கொள்வது அரசாங்கத்தின் கடமை...," என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com