என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

செல்ஃபி கேட்டால் திருநீறை அழிக்கிறார் ஒரு அரசியல் தலைவர்- அண்ணாமலை
- இந்துக்களின் வாழ்வியல் முறைக்கு பிரச்சனை.
- மொழியும், ஆன்மீகமும், இலக்கியமும் சேர்ந்ததுதான் தமிழ்.
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் பேசிய பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-
இந்தியாவில் ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டதால் சிலருக்கு பிரச்னை. நமது வாழ்வியல் முறையை தொந்தரவு செய்து பஹல்காமில் தாக்குதல் நடத்தப்பட்டது.
எனது வாழ்வியல் முறைக்கு பிரச்னை வந்தால் எழுந்து நிற்பேன்; அடிப்பேன். இந்து என்பதற்காக நமது கடைகோடி தொண்டர்கள் கொல்லப்படுகிறார்கள்.
மொழியும், ஆன்மீகமும், இலக்கியமும் ஒன்றாக இருக்கும் பெருமை தமிழுக்கு உண்டு; கந்த சஷ்டி கவசத்தில் அறிவியல், விஞ்ஞானம் உள்ளது.
5,400 ஆண்டுகள் பழமையானவன் தமிழன். அந்த பழமையோடு வாழ விடுவார்களா? செல்பி கேட்டால் ஒரு அரசியல் தலைவர் திருநீறை அழிக்கிறார்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story






