என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "special trains"

    • நெல்லையில் இருந்து டிசம்பர் 3ம் தேதி இரவு 9.30 மணிக்கு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்.
    • விழுப்புரத்தில் இருந்து வரும் 30, டிசம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் சிறப்பு ரெயில்.

    கார்த்திகை தீபத்தை ஒட்டி திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    நெல்லையில் இருந்து டிசம்பர் 3ம் தேதி இரவு 9.30 மணிக்கு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில். மறுமார்க்கமாக இது டிசம்பர் 4ம் தேதி இரவு 7.55 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மறுநாள் காலை நெல்லை சென்றடையும்

    சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் டிசம்பர் 3, 4 தேதிகளில் காலை 9.15 மணிக்கு புறப்படும் ரெயில் திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி வழியே திருவண்ணாமலை சென்று, பின்னர் விழுப்புரம், செங்கல்பட்டு வழியே இரவு 7 மணிக்கு சென்னை கடற்கரையை வந்தடையும்

    விழுப்புரத்தில் இருந்து வரும் 30, டிசம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் காலை 10.10 மணிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரெயில் திருவண்ணாமலை செல்லும். மறுமார்க்கமாக இதே தேதிகளில் மதியம் 12.40 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்

    விழுப்புரத்தில் இருந்து டிசம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் 10.40 மணிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரெயில் வேலூர் கண்டோன்மெண்ட் செல்லும். மறுமார்க்கமாக அங்கிருந்து டிசம்பர் 4, 5, 6 தேதிகளில் அதிகாலை 2.05 மணிக்கு புறப்பட்டு, காலை 5 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்

    தாம்பரத்தில் இருந்து வரும் டிசம்பர் 3, 4 தேதிகளில் காலை 9.15 மணிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரெயில் திருவண்ணாமலை செல்லும். மறுமார்க்கமாக அதே நாளில் மாலை 5 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் முன்பதிவு வசதி கொண்ட ரெயில்களுக்கு நாளை (புதன்கிழமை) காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது குறிப்பிடத்தக்கது. 

    • சென்டிரலில் இருந்து டிசம்பர் 2-ம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்படும்.
    • இந்த சிறப்பு ரெயில் மறுநாள் இரவு 11.15 மணிக்கு பனாரஸ் சென்றடையும்.

    சென்னை:

    உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் டிசம்பர் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை 'காசி தமிழ் சங்கமம் 4.0' நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி, சென்னையில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

    இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

    சென்னை சென்டிரலில் இருந்து டிசம்பர் 2-ம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் இரவு 11.15 மணிக்கு பனாரஸ் சென்றடையும்.

    பனாரசில் இருந்து 7-ம் தேதி இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் 9-ம் தேதி இரவு 11.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.

    இதேபோல, சென்டிரலில் இருந்து டிசம்பர் 6-ம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு புறப்படும் ரெயில் 7-ம் தேதி இரவு 11.15 மணிக்கு பனாரஸ் சென்றடையும். மறு மார்க்கமாக பனாரசில் இருந்து டிசம்பர் 11-ம் தேதி இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் 13-ம் தேதி இரவு 11.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.

    சென்னை சென்டிரலில் இருந்து டிசம்பர் 12-ம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் 13-ம் தேதி இரவு 11.15 மணிக்கு பனாரஸ் சென்றடையும். மறு மார்க்கமாக பனாரசில் இருந்து டிசம்பர் 17-ம் தேதி இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் 19-ம் தேதி இரவு 11.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும் என கூறப்பட்டுள்ளது.

    • கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
    • கூட்ட நெரிசலுக்கு ஏற்ப முக்கிய ரெயில்களில் கூடுதல் பெட்டிகளும் இணைத்து இயக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    இந்தியாவில் ரெயில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. எனவே, ஒவ்வொரு ஆண்டும் ரெயில்வே வாரியம் சார்பில் பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் இயக்கப்படும் சிறப்பு ரெயில்களில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    சிறப்பு ரெயில்கள் மட்டுமின்றி, கூட்ட நெரிசலுக்கு ஏற்ப முக்கிய ரெயில்களில் கூடுதல் பெட்டிகளும் இணைத்து இயக்கப்பட்டு வருகிறது.

    தெற்கு ரெயில்வேயைப் பொறுத்தவரையில், கடந்த 2 ஆண்டுகளைவிட நடப்பாண்டில் அதிகளவு கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தெற்கு ரெயில்வேக்கு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.

    இந்நிலையில், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த நடப்பாண்டில் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரையில் 7 மாதங்களில் ரெயில்களில் 5 ஆயிரத்து 436 கூடுதல் ரெயில் பெட்டிகள் இணைத்து இயக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.22.97 கோடி வருவாய் கிடைத்துள்ளது என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சென்னை எழும்பூர் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06112) மறுநாள் மதியம் 12 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
    • சென்டிரல் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06128), மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தடுக்கவும் சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    * சென்னை எழும்பூரில் இருந்து வருகிற 14-ந்தேதி முதல் ஜனவரி 16-ந்தேதி வரையில் (வெள்ளிக்கிழமை) இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.06111), மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து வருகிற நவம்பர் 15-ந்தேதியில் இருந்து ஜனவரி 17-ந்தேதி வரையில் (சனிக்கிழமை) இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06112) மறுநாள் மதியம் 12 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

    * சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 16-ந்தேதி முதல் ஜனவரி 18-ந்தேதி வரையில் (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06113), மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து வருகிற 17-ந்தேதி முதல் ஜனவரி 19-ந்தேதி வரையில் (திங்கட்கிழமை) மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06114), மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.

    * சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 19-ந்தேதி முதல் ஜனவரி 21-ந்தேதி வரையில் (புதன்கிழமை) மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06119), மறுநாள் காலை 6.40 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து வருகிற 20-ந்தேதி முதல் ஜனவரி 22-ந்தேதி வரையில் (வியாழக்கிழமை) காலை 10.40 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06120), மறுநாள் காலை 3.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.

    * சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 20-ந்தேதி முதல் ஜனவரி 22-ந்தேதி வரையில் (வியாழக்கிழமை) இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06127), மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

    மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து வருகிற 21-ந்தேதி முதல் ஜனவரி 23-ந்தேதி வரையில் (வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06128), மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.

    * சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 22-ந்தேதி முதல் ஜனவரி 24-ந்தேதி வரையில் (சனிக்கிழமை) இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06117), மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

    மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து வருகிற 23-ந்தேதி முதல் ஜனவரி 25-ந்தேதி வரையில் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06118), மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தாம்பரம்- செங்கோட்டை இடையிலான சிறப்பு ரெயில் முன்பதிவு இன்று மாலை 4 மணி முதல் தொடங்கியது.
    • மதுரைக்கு செல்லும் மெமு ரெயில் இரவு 11.45 மணிக்கு புறப்புடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தீபாவளியை ஒட்டி மக்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக கூடுதல் சிறப்பு ரெயில், முன்பதிவு இல்லாத ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    அதன்படி, தாம்பரம்- செங்கோட்டை அக்டோபர் 17ம் தேதி இரவு 7.30 மணிக்கு பறப்படும் ரெயில் மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் அக்டோபர் 20ம் தேதி இரவு 8.45 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்காக, தாம்பரம்- செங்கோட்டை இடையிலான சிறப்பு ரெயில் முன்பதிவு இன்று மாலை 4 மணி முதல் தொடங்கியதாகவும் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    மேலும், அக்டோபர் 17, 18-ல் சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு செல்லும் மெமு ரெயில் இரவு 11.45 மணிக்கு புறப்புடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து அக்டோபர் 18ம் தேதி பிற்பகல் 12 மணிக்கும், 21ம் தேதி இரவு 8.30 மணிக்கும் மெமு ரெயில் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய எல்லா ரெயில்களும் நிரம்பி விட்டதால் சிறப்பு ரெயில்களை எதிர்நோக்கி இருக்கிறார்கள்.
    • தென் மாவட்டங்கள் மற்றும் கோவை, கேரளா மார்க்கத்தில் கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும்.

    தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 20-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை ஒட்டி சென்னையில் வசிக்கும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் சொந்த ஊருக்கு செல்ல பயணத்தை திட்டமிட்டுள்ளனர்.

    இந்த ஆண்டு தீபாவளி திங்கட்கிழமை வருவதால் சனி, ஞாயிறு விடுமுறையோடு 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. இதனால் சொந்த ஊருக்கு செல்ல மக்கள் ரெயில்களில் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். நேற்று முன்தினம் இதற்கான முன்பதிவு தொடங்கியது. தொடங்கிய சில நிமிடங்களிலேயே முக்கிய ரெயில்களில் அனைத்து இடங்களும் நிரம்பி விட்டன.

    இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி முதல் ஏசி முதல் வகுப்பு வரை எல்லா படுக்கைகளும் நிரம்பி விட்டதால் காத்திருப்போர் பட்டியல் காணப்படுகிறது.

    முன்பு போல காத்திருப்போர் பட்டியலில் 400 டிக்கெட் தற்போது கொடுப்பதில்லை. அதிகபட்சமாக 250 டிக்கெட் மட்டுமே கொடுக்க முடியும். அதனால் சொந்த ஊர் செல்லக்கூடியவர்கள் பயணம் உறுதியான டிக்கெட் மட்டுமே பெறுவதில் தீவிரமாக உள்ளனர்.

    சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய எல்லா ரெயில்களும் நிரம்பி விட்டதால் சிறப்பு ரெயில்களை எதிர்நோக்கி இருக்கிறார்கள். திருநெல்வேலி, நாகர்கோவில், கோயம்புத்தூர், பெங்களூரு வந்தே பாரத் ரெயில்களிலும் இடமில்லை. இதேபோல கோவை செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிரம்பி காத்திருப்போர் பட்டியல் முடிந்து விட்டது. தீபாவளி பண்டிகைக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னதாக பயணம் செய்யக்கூடிய அனைத்து ரெயில்களும் நிரம்பி விட்டதால் சிறப்பு ரெயில்கள் அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து தெற்கு ரெயில்வே உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு ரெயில்கள் விடுவது வழக்கம். எப்பொழுதும் ஒரு வாரத்திற்கு முன்பு தான் இந்த அறிவிப்பு வெளியிடப்படும். அந்த வகையில் தீபாவளிக்கு முன்னதாக அக்டோபர் இரண்டாவது வாரத்தில் சிறப்பு ரெயில் குறித்து அறிவிப்பு வெளியாகும். இது பகல் மற்றும் இரவு நேர பயணம் செய்யக்கூடிய வகையில் இயக்கப்படும்.

    தென் மாவட்டங்கள் மற்றும் கோவை, கேரளா மார்க்கத்தில் கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும்.

    இதற்கிடையில் எந்தெந்த ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க சாத்தியப்படுமோ அதற்கு ஏற்ப பெட்டிகள் அதிகரிக்கப்படும்.

    எனவே தீபாவளி பயண கூட்ட நெரிசலை குறைக்க எந்தெந்த வழித்தடங்களில் சிறப்பு ரெயில்கள் தேவைப்படுகிறது என்பதை ஆய்வு செய்து அதற்கு ஏற்ப சிறப்பு ரெயில்கள் விடப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சிறப்பு ரெயில்களை இயக்கவும் ரெயில்வே வாரியம் உத்தர விட்டுள்ளது.
    • 3 பெட்டிகள் வரை கூடுதலாக இணைத்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    கோடைகாலம் தொடங்கி உள்ளது. பள்ளி தேர்வுகள் முடிந்து, விடுமுறைவிட்ட பின்னர் பலரும் சொந்த ஊர், சுற்றுலா தலங்களுக்கு செல்வார்கள். இதனால் சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்லும் ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    பெரும்பாலான ரெயில்களில் குறிப்பிட்ட நாட்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியலில் எண்ணிக்கை கூடி வருகிறது.

    இதை கருத்தில் கொண்டு, தேவை அதிகமுள்ள விரைவு ரெயில்களில் தேவைக்கு ஏற்ப 3 பெட்டிகள் வரை கூடுதலாக இணைத்து இயக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

    பண்டிகை, தொடர் விடுமுறை நாட்களில் வழக்கமாக செல்லும் விரைவு ரெயில்களில் தேவைக்கு ஏற்ப கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்படும். பள்ளி, கல்லூரிகள் தேர்வுகள் முடிந்த பிறகு, கோடை விடுமுறை தொடங்கும்போது பொதுமக்கள் சொந்த ஊர்கள், சுற்றுலா தலங்களுக்கு அதிக அளவில் செல்வார்கள்.

    எனவே, அடுத்த மாதம் முதல் பயணிகளின் வசதிக்காக, சிறப்பு ரெயில்களை இயக்கவும், வழக்கமான ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கவும் ரெயில்வே வாரியம் உத்தர விட்டுள்ளது.

    முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட விரைவு ரெயில்களில் படிப்படியாக கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்பட உள்ளன. தேவைக்கு ஏற்ப, முக்கிய வழித்தடங்களில் செல்லும் விரைவு ரெயில்களில் 3 பெட்டிகள் வரை கூடுதலாக இணைத்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். ரெயில்களில் முன்பதிவு, காத்திருப்போர் எண்ணிக்கை பட்டியலை தெற்கு ரெயில்வே தயாரித்து வருகிறது.

    இதன் அடிப்படையில், திருநெல்வேலி, நாகர்கோவில், கோவை உட்பட பல்வேறு விரைவு ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தாம்பரத்தில் இருந்து வரும் 28-ந்தேதி மாலை புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 8 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.
    • திருச்சியில் இருந்து வரும் 29, 30, 31 ஆகிய தேதிகளில் காலை புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில், அதேநாள் மதியம் தாம்பரம் வந்தடையும்.

    சென்னை:

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் தாம்பரம்-கன்னியாகுமரி, திருச்சி-தாம்பரம், இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    * தாம்பரத்தில் இருந்து வரும் 28-ந்தேதி மாலை 6 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06037), மறுநாள் காலை 8 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமார்க்கமாக, கன்னியாகுமரியில் இருந்து வரும் 31-ந்தேதி இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06038), மறுநாள் காலை 8.55 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    * திருச்சியில் இருந்து வரும் 29, 30, 31 ஆகிய தேதிகளில் காலை 5.35 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06048), அதேநாள் மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து வரும் 29,30,31 ஆகிய தேதிகளில் மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும் சிறப்பு ரெயில் (06047), அதேநாள் இரவு 10.40 மணிக்கு திருச்சி சென்றடையும்.

    இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோடை விடுமுறைக்கு மக்கள் அதிக அளவில் சொந்த ஊர் செல்வது வழக்கம்.
    • இதனை முன்னிட்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை ஏப்ரல்-மே மாதங்களில் விடப்படுகிறது. கோடை விடுமுறையின்போது பேருந்துகள் மற்றும் ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். எனவே கூட்ட நெரிசலைத் தவிர்க்க சிறப்பு ரெயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும் என பயணிகள் நீண்ட நாளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதற்கிடையே, கோடை விடுமுறைக்கு மக்கள் அதிக அளவில் சொந்த ஊர் செல்வது வழக்கம். இதனை முன்னிட்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது.

    இந்நிலையில், தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு ஏப்ரல் 4-ம் தேதி முதல் இருந்து 27-ம் தேதி வரை வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாட்கள் கோடை கால அதிவேக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

    நாளை காலை 8 மணிக்கு சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரெயில்கள் அதிவேக ரெயில்களாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பயணிகள் கோரிக்கை ஏற்று சிறப்பு ரெயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

    • ரெயில்களை வேளாங்கண்ணி வரை நீட்டிப்பு செய்தால் பண்டிகை காலங்களில் பயணிகள் பயன்பெறுவர் என்றனர்
    • கோவை-வேளாங்கண்ணி இடையே வாராந்திர ரெயில் இயக்கலாம்.

     திருப்பூர் :

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய அன்னை தேவாலயம் உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதியில் இருந்து லட்சக்கணக்கான கிறிஸ்துவர்கள் வேளாங்கண்ணிக்கு செல்வது உண்டு. இதற்கென சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    வருகிற 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் கோவையில் இருந்து திருப்பூர் மற்றும் பாலக்காடு வழியாக வேளாங்கண்ணிக்கு நேரடி ரெயில் இன்று வரை இல்லை.

    ஈரோடு சென்று அங்கிருந்து திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் வழியாக செல்லும் ரெயில்களில் தான் பயணிக்க வேண்டியுள்ளது என்பதால், வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க கோரிக்கை எழுந்துள்ளது.

    இது குறித்து பயணிகள் கூறுகையில், கோவை-வேளாங்கண்ணி இடையே வாராந்திர ரெயில் இயக்கலாம். வேளாங்கண்ணிக்கு அருகில் உள்ள மன்னார்குடி, நீடாமங்கலம் நிலையத்திற்கு கோவையில் இருந்து செம்மொழி எக்ஸ்பிரஸ் இயங்குகிறது. காரைக்கால், நாகூர், நாகப்பட்டினம் நிலையங்களுக்கு டீகார்டன் எக்ஸ்பிரஸ் தினசரி செல்கிறது. மேற்கண்ட ரெயில்களை வேளாங்கண்ணி வரை நீட்டிப்பு செய்தால் பண்டிகை காலங்களில் பயணிகள் பயன்பெறுவர் என்றனர்

    • தாம்பரத்தில் இருந்து ஜனவரி 16-ந்தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06057) மறுநாள் காலை 9 மணிக்கு நெல்லை சென்றடையும்.
    • மறுமார்க்கமாக திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 17-ந்தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06058) மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் கேரளாவுக்கு சிறப்பு கட்டண ரெயில்கள் ஜனவரி 12-ந்தேதி முதல் இயக்கப்பட உள்ளன.

    இதுகுறித்து தெற்கு ரெயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தாம்பரத்தில் இருந்து ஜனவரி 12-ந்தேதி இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06021) மறுநாள் காலை 9 மணிக்கு நெல்லை சென்றடையும்.

    மறுமார்க்கமாக திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 13-ந்தேதி பகல் ஒரு மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06022) மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.

    இந்த ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக இயக்கப்படுகின்றன.

    தாம்பரத்தில் இருந்து ஜனவரி 13-ந்தேதி இரவு 7.30 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண்.06041) மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 16-ந்தேதி மாலை 5.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 7.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

    தாம்பரத்தில் இருந்து ஜனவரி 16-ந்தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06057) மறுநாள் காலை 9 மணிக்கு நெல்லை சென்றடையும்.

    மறுமார்க்கமாக திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 17-ந்தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06058) மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரெயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர் வழியாக இயக்கப்படுகின்றன.

    கேரளாவின் கொச்சு வேலியில் இருந்து ஜனவரி 17-ந்தேதி காலை 11.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06044) மறுநாள் காலை 6.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும். மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து ஜனவரி 18-ந்தேதி காலை 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06043) கேரளாவின் கொச்சுவேலிக்கு அதிகாலை 3.20 மணிக்கு சென்றடையும்.

    இந்த ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் டவுண், குழித்துறை, திருவனந்தபுரம் வழியாக இயக்கப்படுகின்றன.

    கேரளாவின் எர்ணாகுளத்தில் இருந்து ஜனவரி 12-ந்தேதி இரவு 11.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06046) மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்.

    மறுமார்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து ஜனவரி 13-ந்தேதி பகல் 2.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண். 06045) மறுநாள் காலை 3.10 மணிக்கு கேரளாவின் எர்ணாகுளம் சென்றடையும். இந்த ரெயில் தமிழகத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக இயக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆன்லைன் வாயிலாக ஏஜென்சிகள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்திட ஆர்வம் காட்டுகின்றனர்.
    • முன்கூட்டியே ரயிலை நாடி தேடி டிக்கெட் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டுவதில்லை.

    உடுமலை :

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொள்ளாச்சி, உடுமலை வழியாக தென் மாவட்டங்கள் மற்றும் தலைநகர் சென்னைக்கு இந்த ஆண்டாவது சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    பொள்ளாச்சியை பிற நகரங்களுடன் இணைக்கும், ரெயில் வழித்தடம் மீட்டர் கேஜில் இருந்து அகல ரெயில் பாதையாக மேம்படுத்தப்பட்டது. ஆனால் மீட்டர் கேஜ் காலத்தில் இயங்கிய ரெயில்கள் குறைக்கப்பட்டு குறைந்த எண்ணிக்கையிலேயே தற்போது ரெயில்கள் இயங்கி வருகின்றன.

    திருவனந்தபுரம்- மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ், பாலக்காடு - சென்னை எக்ஸ்பிரஸ், பாலக்காடு - திருச்செந்தூர், கோவை- - பொள்ளாச்சி, கோவை- - மதுரை பயணிகள் ரெயில்கள் மட்டுமே தற்போது இயங்குகின்றன.நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க மறுப்பதுடன் பண்டிகை காலங்களில் கூட, தென் மாவட்டங்கள் மற்றும் தலைநகர் சென்னைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க தெற்கு ரெயில்வே நிர்வாகம் முன்வருவதில்லை.

    கோவை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்ட மக்களும், சென்னையில் வசிக்கும் கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களும் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு சென்று வர சிறப்பு ரெயில்கள் இயக்க, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தும் எந்த பலனும் இல்லை.

    இந்த ஆண்டாவது வருகிற 11ந் தேதி முதல் 14ந் தேதி வரையும், திரும்பி வருவோர் வசதிக்காக, 18ந் தேதி முதல் 21-ந் தேதி வரையும் பொள்ளாச்சி வழித்தடத்தில், கோவை - ராமேஸ்வரம் மற்றும் கோவை -தாம்பரம் இடையே 2 சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும் என ரெயில் பயணியர் நலச்சங்கத்தினர் மட்டுமின்றி, அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர். 

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.அதன்படி எர்ணாகுளம் -சென்னை இடையே ஜனவரி 12ந் தேதி திருப்பூர் மார்க்கமாக இயங்கும் வகையில் சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது.டிக்கெட் முன்பதிவு துவங்கினாலும், தங்களுக்கான டிக்கெட் உறுதி செய்ய பயணிகள் ஆர்வம் காட்டவில்லை.அதாவது திருப்பூர், உடுமலையில் ரெயில் நிலைய முன்பதிவு கவுன்டர் வந்து டிக்கெட் பெற முயல்வோர் எண்ணிக்கை குறைவாக காணப்படுகிறது. ஆன்லைன் வாயிலாக ஏஜென்சிகள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்திட ஆர்வம் காட்டுகின்றனர்.

    இது குறித்து ரெயில் டிக்கெட் முன்பதிவு மைய அதிகாரிகள் கூறியதாவது:- திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தமட்டில், தீபாவளி பண்டிகைக்கு மட்டுமே அதிகமானோர் சொந்த ஊர் செல்வர். அதற்கு நிகராக பொங்கலுக்கு சொந்த ஊர் பயணிப்பதில்லை.அவ்வாறு சொந்த ஊர் செல்ல முடிவெடுத்தாலும், கடைசி நேரம் ஏதேனும் ஒரு ரெயில் பொது பெட்டியில் பயணித்துக்கொள்கின்றனர். முன்கூட்டியே ரயிலை நாடி தேடி டிக்கெட் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டுவதில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர். 

    ×