search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Special Trains"

    • வழக்கமாக இயக்கப்படும் பஸ்களை விட பிற பகுதிகளிலும் சிறப்பு பஸ்கள் நாளை பிற்பகல் முதல் இயக்கப்பட உள்ளன.
    • சிறப்பு ரெயில்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக நேற்று அரசு பொது விடுமுறை அறிவித்து இருந்தது. தனியார் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு கட்டாயம் விடுப்பு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தததால் சொந்த ஊர்களுக்கு 17, 18 ஆகிய தேதிகளில் புறப்பட்டு சென்றனர்.

    சென்னை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தங்கி வேலை செய்து வந்த கூலி தொழிலாளர்கள், ஊழியர்கள் ஓட்டு போடுவதற்காக சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இதற்காக அரசு சிறப்பு பஸ்கள் இயக்கின. தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்களை சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கியது.

    இந்த நிலையில் ஓட்டு போட சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக கூடுதலாக பஸ் வசதியை அரசு போக்குவரத்து கழகங்கள் இன்று (சனிக்கிழமை) முதல் செய்துள்ளது. அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு சனி, ஞாயிறு தொடர் விடுமுறை கிடைப்பதால் 22-ந்தேதி (திங்கட்கிழமை) வேலைக்கு செல்ல வசதியாக பெரும்பாலும் நாளை பயணத்தை தொடர்வார்கள்.

    அதனால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கோவை, சேலம், ஓசூர், திருப்பூர், சிதம்பரம், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு கூடுதலாக பஸ்கள் விடப்பட்டுள்ளது.

    வழக்கமாக இயக்கப்படும் பஸ்களை விட பிற பகுதிகளிலும் சிறப்பு பஸ்கள் நாளை பிற்பகல் முதல் இயக்கப்பட உள்ளன.

    தூத்துக்குடியில் இருந்து சென்னை எழும்பூருக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் விடப்பட்டு உள்ளது. இந்த ரெயில் தூத்துக்குடியில் இன்று மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு எழும்பூருக்கு நாளை அதிகாலை 3.50 மணிக்கு வந்து சேருகிறது. பின்னர் 4.45 மணிக்கு சென்ட்ரல் நிலையம் சென்றடைகிறது.

    இந்த சிறப்பு ரெயிலில் உள்ள அனைத்து பெட்டிகளும் முன்பதிவு செய்யப்படாதவை. இந்த ரெயில் மதுரை, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் வழியாக இயக்கப்படுகிறது.

    மற்றொரு சிறப்பு ரெயில் திருச்சியில் இருந்து எழும்பூருக்கு இன்று இயக்கப்பட்டது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்ட ரெயில் பகல் 1.20 மணிக்கு எழும்பூர் வந்து சேர்ந்தது.

    இதே போல் தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு இன்று சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் தாம்பரத்தில் இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு நாளை காலை 11.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடைகிறது.

    மறுமார்க்கத்தில் திருநெல்வேலியில் இருந்து நாளை பகல் 3.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.55 மணிக்கு தாம்பரம் வந்து சேருகிறது. சிறப்பு ரெயில்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இது குறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் கூறும்போது நாளை (ஞாயிற்றுக்கிழமை) பயணம் செய்ய 34 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். மொத்தம் 1.25 லட்சம் இடங்கள் உள்ளன. பொதுமக்கள் நெரிசலை தவிர்க்க அரசு பஸ்களில் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்றார்.

    • தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்திற்கு 15 மற்றும் 17-ந்தேதிகளில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
    • மறுமார்க்கத்தில் திருநெல்வேலியில் இருந்து தாம்பரத்திற்கு 12, 14, 17 ஆகிய தேதிகளில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட செல்லும் மக்களுக்காக சிறப்பு ரெயில்கள் ஏற்கனவே விடப்பட்டன.

    தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய வழக்கமான ரெயில்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன. சிறப்பு ரெயில்களிலும் காத்திருப்போர் பட்டியல் கணிசமாக உயர்ந்தது. இதனால் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்தது.

    கூட்ட நெரிசலை குறைக்க மேலும் 2 சிறப்பு ரெயில்கள் இன்று அறிவிக்கப்பட்டன. தாம்பரம்-தூத்துக்குடிக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயிலும், தாம்பரம்-திருநெல்வேலிக்கு முன்பதிவு சிறப்பு ரெயிலும் விடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பகல் நேரத்தில் முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. காலை 7.30 மணிக்கு தாம்பரத்தில் புறப்படும் இந்த ரெயில் இரவு 10.45 மணிக்கு தூத்துக்குடி செல்கிறது. இதேபோல 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை)யும் மற்றொரு சிறப்பு ரெயில் தூத்துக்குடிக்கு விடப்பட்டுள்ளது.

    தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்திற்கு 15 மற்றும் 17-ந்தேதிகளில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் தூத்துக்குடியில் காலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.

    சிறப்பு ரெயிலில் 2-ம் வகுப்பு பொதுப்பெட்டிகள் 2, 2-ம் வகுப்பு பெட்டிகள் 2 என மொத்தம் 22 பெட்டிகள் இடம்பெற்று உள்ளன.


    இதேபோல தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு நாளை (11-ந்தேதி) 13, 16-ந்தேதிகளில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இரவு 9.50 மணிக்கு தாம்பரத்தில் புறப்படும் இந்த முன்பதிவு சிறப்பு ரெயில் மறுநாள் காலை 11.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடைகிறது.

    மறுமார்க்கத்தில் திருநெல்வேலியில் இருந்து தாம்பரத்திற்கு 12, 14, 17 ஆகிய தேதிகளில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. திருநெல்வேலியில் பகல் 2.15 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.

    இந்த ரெயிலில் 3-ம் வகுப்பு ஏ.சி. படுக்கை வசதி-3 பெட்டிகள், ஏ.சி. 3 அடுக்கு படுக்கை எக்னாமிக் பெட்டிகள்-9, 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி-2, 2-ம் வகுப்பு பொது பெட்டி-2 உள்ளன.

    இந்த சிறப்பு ரெயில் தாம்பரத்தில் இருந்து விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, பாவூர்சத்திரம், கீழ கடையம், அம்பாசமுத்திரம், கல்லிடைகுறிச்சி, சேரன்மாதேவி வழியாக திருநெல்வேலி சென்றடைகிறது.

    அதேபோல நெல்லையில் இருந்தும் இதே வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு விரைவில் தொடங்கும் என்று தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி குக நேசன் தெரிவித்துள்ளார்.

    • பாசஞ்சர் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும்.
    • நாகூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் தகவல் மையம் அமைக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகூர் தர்கா நிர்வாகம் சார்பில் திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்ட மேலாளர் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    நாகூர் ஆண்டவர் பெரிய கந்தூரி விழா வருகிற 14-ந்தேதி தொடங்கி புனித கொடி ஏற்றத்துடன் தொடங்கி

    27. 12. 2023 தேதி புதன்கிழமை புனித கொடி இறக்கத்துடன் நிறைவடைய உள்ளது.

    இதில் முக்கிய நிகழ்வாக 23-ம் தேதி சனிக்கிழமை இரவு புனித சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு 24 -ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ரவுலாவஷரீபில் சந்தனம் பூசும் வைபவம் நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    ஆகவே ரெயில் மூலம் அதிக அளவில் பக்தர்கள் வருவதால் நாகூர், திருச்சி, சென்னை, பெங்களூர், கொல்லம், ஹைதராபாத் மற்றும் மும்பை ஆகிய நகரங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கவும், காரைக்கால் - சென்னை, காரைக்கால் - எர்ணாகுளம், மன்னார்குடி - சென்னை ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்களும், நாகூர் வழியாக பெங்களூரு, திருச்சி மற்றும் தஞ்சாவூர் செல்லும் பாசஞ்சர் ரயில்களும் கூடுதலாக பெட்டி இணைக்க வேண்டும்.

    மேலும் ரெயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக அதிக அளவில்கழிவறை வசதி குடிநீர் வசதி ஏற்படுத்திடவும் நாகூர் ரயில் நிலையத்தில் பயணிகள் தகவல் மையம் அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • செகந்திராபாத் சிறப்புரெயில் நாளை பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள்இரவு கொல்லம் செல்லும்
    • நரசப்பூர் விரைவு ரெயில் நவம்பர்26-ந்தேதி மாலை 3.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை கோட்டயம் சென்றடையும்

    கோவை,

    சபரிமலை சீசனை யொட்டி கோவை, போத்த னூர் வழித்தடத்தில் கேரள மாநிலம் கொல்லம், கோட்டயம் பகுதிகளுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க ப்படுவதாக தெரிவிக்கப்ப ட்டுள்ளது.

    இது தொடர்பாக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சபரிமலை சீசனை யொட்டி நவம்பர் 24, டிசம்பர் 1 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் செகந்திராபாத் -கொல்லம் சிறப்பு விரைவு ரெயில் (எண் 07127) மறுநாள் இரவு 7.30மணிக்கு கொல்லம் நிலை மண்ட பத்தை சென்றடையும்.

    நவம்பர் 25 மற்றும் டிசம்பர் 2 ஆகிய சனிக்கிழமைகளில் கொல்லத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்படும் கொல்லம் -செகந்திராபாத் சிறப்பு ரெயில் விரைவு எண் 07128 திங்கட்கிழ மைகளில் காலை 4.30 மணிக்கு செகந்திரா பாத்தை சென்றடையும்.இந்த ரெயிலானது, காயன்குளம், மாவேலிக்கரை, செங்க ன்னூர், திருவல்லா, சங்கன ச்சேரி, கோட்டயம், எர்ணா குளம் டவுன், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், திருப்பதி, ரேணிகுண்டா, தாடிபத்ரி, கூட்டி, ஸ்ரீ ராம்நகர், காச்சிக்குடா, உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

    நவம்பர்26, டிசம்பர் 3 ஆகிய ஞாயிற்றுக்கிழ மைகளில் கர்நாடக மாநிலம், நரசப்பூரில் இருந்து மாலை 3.50 மணிக்குப் புறப்படும் நரசப்பூர் - கோட்டயம் விரைவு ரெயில் (எண் 07119) மறுநாள் மாலை 4.50 மணிக்கு கோட்டயத்தை சென்றடையும். நவம்பர் 27, டிசம்பர் 4 ஆகிய திங்கட்கி ழமைகளில் கோட்டயத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் கோட்டயம் - நரசப்பூர் சிறப்பு விரைவு ரெயில் (எண் 07120) மறுநாள் இரவு 9 மணிக்கு நரசப்பூரை சென்றடையும்.

    இந்த ரெயிலானது எர்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலா ர்பேட்டை, காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணி குண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல், தெனாலி,விஜயவாடா, பீமாவரம், டவுன் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

    நவம்பர் 27-ந் தேதி முதல் டிசம்பர் 31 ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை களில் சென்னை சென்ட்ர லில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்படும் சென்னை - கோட்டயம் வாராந்திர சிறப்பு ரெயில் (எண் 06091) மறுநாள் பிற்பகல் 1.10 மணிக்கு கோட்டயத்தைச் சென்றடையும்.

    நவம்பர் 27 முதல் ஜனவரி 1-ந் தேதி வரை திங்கட்கிழமைகளில் கோட்டயத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் கோட்டயம் -சென்னை சிறப்பு வாராந்திர ரெயில் எண் (06092) மறுநாள் காலை 10.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை சென்றடையும். இந்த ரெயிலானது எர்ணா குளம் டவுன், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • டிசம்பர் 31-ந்தேதி முதல் ஜனவரி 15-ந்தேதி வரை மகர விளக்கு பூஜைகள் நடைபெறுகின்றன.
    • சபரிமலை செல்லும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ரெயில்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது.

    சென்னை:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 17-ந்தேதி நடை திறக்கப்பட்டது. விரதம் இருந்து வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் தரிசனத்திற்காக கோவிலில் குவிந்து வருகிறார்கள். சபரிமலையில் மண்டல பூஜை டிசம்பர் 27-ந்தேதி நடக்கிறது.

    மண்டல பூஜை முடிந்ததும் டிசம்பர் 27-ந்தேதி இரவு கோவில் நடை சாத்தப்படுகிறது. பின்பு மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந்தேதி சபரிமலை கோவில் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து டிசம்பர் 31-ந்தேதி முதல் ஜனவரி 15-ந்தேதி வரை மகர விளக்கு பூஜைகள் நடைபெறுகின்றன.

    சபரிமலை செல்லும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ரெயில்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது. எனவே சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் சென்னை சென்ட்ரலில் இருந்து கோட்டயத்துக்கு இன்று முதல் 7 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    வாரத்தின் ஞாயிற்றுக்கிழமைகளான இன்று (19-ந்தேதி), வருகிற 26-ந்தேதி, டிசம்பர் 3-ந்தேதி, 10-ந்தேதி, 17-ந்தேதி, 24-ந் தேதி, 31-ந்தேதிகளில் சிறப்பு ரெயில்கள்(வண்டி எண்:06027) இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு செல்லும். இந்த ரெயில் அரக்கோணம், சேலம், ஈரோடு, திருப்பூர், பாலக்காடு, திரிச்சூர் வழியாக மறுநாள் மதியம் 1.10 மணிக்கு கோட்டயம் சென்றடைகிறது.

    இதுபோல் கோட்டயத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வருகிற 20-ந்தேதி, 27-ந்தேதி, டிசம்பர் 4-ந்தேதி, 11-ந்தேதி, 18-ந் தேதி, 25-ந்தேதி, மற்றும் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி 1-ந்தேதிகளில் சிறப்பு ரெயில்(எண்:06028) இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை10.30 மணிக்கு வந்தடைகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது.

    இதேபோல் பயணிகள் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் சென்னை-பெங்களூரு இடையே சிறப்பு வந்தே பாரத் ரெயில் (எண்:06031) நாளை (20-ந்தேதி) இயக்கப்படுகிறது. நாளை மாலை 5.15 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் காட்பாடியில் மட்டும் நின்று இரவு 10 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இதேபோல் பெங்களூரில் இருந்து மறுநாள் (21-ந்தேதி) இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு வந்தே பாரத் ரெயில் (எண்:06032) மறுநாள் (22-ந்தேதி) காலை 4.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடைகிறது.

    • கொரோனாவிற்கு முன்பு சில ஆண்டுகளாக வியாழக்கிழமை தோறும் நெல்லை- தாம்பரம் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வந்தது.
    • சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு எப்போது வரும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் தெற்கு ரெயில்வே சார்பில் நெல்லைக்கு சில சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டன.

    தென்காசி:

    வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் அனைத்து தென்மாவட்ட ரெயில்களும் நிரம்பி வழிகிறது.

    தென்மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய விரைவு ரெயில்களான கன்னியாகுமரி, முத்துநகர், திருச்செந்தூர், அனந்தபுரி, நெல்லை, பொதிகை, சிலம்பு, கொல்லம் மெயில், பாண்டியன் உள்ளிட்ட அனைத்து விரைவு ரெயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்து ஒவ்வொரு ரெயிலிலும் காத்திருப்பு பட்டியல் எண்ணிக்கை 300-க்கும் மேல் உள்ளது.

    இந்நிலையில், சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு எப்போது வரும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் தெற்கு ரெயில்வே சார்பில் நெல்லைக்கு சில சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் தென்காசிக்கு ஒரு சிறப்பு ரெயில் கூட இயக்கப்படாதது பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-

    நெல்லையில் காலியாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நெல்லை - பிலாஸ்பூர் ரெயில் பெட்டிகளை கொண்டு கொரோனாவிற்கு முன்பு சில ஆண்டுகளாக வியாழக்கிழமை தோறும் நெல்லை- தாம்பரம் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வந்தது.

    தற்போது அதே காலிப்பெட்டிகளை கொண்டு தென்காசி வழியாக தீபாவளி சிறப்பு ரெயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்த நிலையில் அந்த ரெயிலை நெல்லையில் இருந்து நேர்வழியில் தற்போது சிறப்பு ரெயிலாக இயக்குவது வருத்தமளிக்கிறது.

    சேரன்மகாதேவி, கல்லிடை, அம்பை, கடையம், பாவூர்சத்திரம் ரெயில் நிலையங்களின் நடைமேடைகளில் 17 பெட்டிகள் மட்டுமே நிறுத்த முடியும் என்பதால் 22 பெட்டிகள் கொண்ட பிலாஸ்பூர் ரெயில் பெட்டிகளை வைத்து தென்காசி வழியாக சிறப்பு ரெயில் இயக்க முடியவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    எனவே உடனடியாக இந்த 5 ரெயில் நிலையங்களில் நடைமேடைகளை நீட்டிப்பதோடு மட்டுமல்லாமல் தீபாவளி முடிந்து சென்னை செல்வதற்கு சிறப்பு ரெயில் இயக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஈரோட்டில் இருந்து வெள்ளி மதியம் 1:45 மணிக்கு புறப்பட்டு சனி இரவு 9:15 மணிக்கு சம்பல்பூரை சென்றடையும்.
    • ரெயில் எண்: 08311 சம்பல்பூர் - ஈரோடு வாராந்திர சிறப்பு ரெயில் நவம்பர் 29-ந் தேதி வரை தொடர்ந்து இயக்கப்படும்.

    திருப்பூர்:

    பயணிகளின் நெரிசலை தடுக்க சம்பல்பூர் (ஒடிசா) -ஈரோடு இடையே வாராந்திர சிறப்பு ெரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ெரயில்களின் சேவைக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    ெரயில் எண்: 08311 சம்பல்பூர் - ஈரோடு வாராந்திர சிறப்பு ெரயில் நவம்பர் 29-ந் தேதி வரை தொடர்ந்து இயக்கப்படும்.ெரயில் சம்பல்பூரில் இருந்து புதன்கிழமை காலை 10:55 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமை இரவு 7:50 மணிக்கு ஈரோட்டுக்கு சென்றடையும். ெரயில் எண்: 08312 ஈரோடு - சம்பல்பூர் வாராந்திர சிறப்பு ெரயில் டிசம்பர் 1-ந்தேதி வரை தொடர்ந்து இயக்கப்படும்.

    ஈரோட்டில் இருந்து வெள்ளி மதியம் 1:45 மணிக்கு புறப்பட்டு சனி இரவு 9:15 மணிக்கு சம்பல்பூரை சென்றடையும். ெரயில் எண்: (08311) சம்பல்பூர் - ஈரோடு வாராந்திர சிறப்பு ெரயில் வியாழன் அன்று சேலம் ரெயில் நிலையத்திற்கு மாலை 6:42 மணிக்கு வந்து 6:45க்கு புறப்படும். ெரயில் எண் (08312) ஈரோடு - சம்பல்பூர் வாராந்திர சிறப்பு ெரயில் வெள்ளி அன்று சேலம் ரெயில் நிலையத்திற்கு மதியம் 2:47 மணிக்கு வந்து 2:50 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரெயில் பயணிகள் பயணிக்க ஏதுவாக 3 சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
    • ஏப்ரல் 26 முதல் ஜூன் 28 வரை சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    கோடை விடுமுறையை முன்னிட்டு ெரயில் பயணிகள் பயணிக்க ஏதுவாக 3 சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன் விபரம் வருமாறு :- ஜூன் 27 வரை (செவ்வாய்தோறும்) சென்னை தாம்பரம் - மங்களூரு சிறப்பு ரெயில் (06031). மறுமார்க்கமாக ஏப்ரல் 26 முதல் ஜூன் 28 வரை (புதன்தோறும்) மங்களூரு - சென்னை தாம்பரம் சிறப்பு ரெயில், மே 3 முதல் ஜூன் 28 வரை (புதன்தோறும்) திருவனந்தபுரம் - சென்னை எழும்பூர் சிறப்பு ெரயில் (06044) மே 4 முதல் ஜூன் 29 வரை (வியாழன் தோறும்) சென்னை எழும்பூர் - திருவனந்தபுரம் சிறப்பு ரெயில் (06043) இயக்கப்படுகிறது.

    மேற்கண்ட 2 ரெயில்களும் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.கொச்சுவேலி - பெங்களூரு சிறப்பு ரெயில் ஜூன் 27 வரை செவ்வாய்கிழமைகளில் இயங்கும். மறுமார்க்கமாக புதன்தோறும் பெங்களூரு - கொச்சுவேலி ஏப்ரல் 26 முதல் ஜூன் 28 வரை சிறப்பு ரெயில் இயங்கும். இந்த ரெயில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திருப்பத்தூர் வழியாக இயக்கப்படும். மேற்கண்ட தகவலை தெற்கு ரெயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.

    கோவை - நாகர்கோவில் இடையே இயக்கப்பட்ட ரெயிலில் துாத்துக்குடிக்கென இரு பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தது. வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையத்தில் பெட்டிகள் தனியே கழற்றப்பட்டு, தூத்துக்குடிக்கு வேறு என்ஜின் மூலம் இயக்கப்பட்டது. கொரோனா காரணமாக, ரெயில் இயக்கம் நிறுத்தப்பட்ட போது இச்சேவையும் திரும்ப பெறப்பட்டது.

    கடந்த 3 ஆண்டுகளாக தூத்துக்குடிக்கு ரெயில் இல்லை. கோவை, திருப்பூரில் இருந்து தூத்துக்குடி செல்ல வேண்டுமெனில் ஈரோடு சென்று அங்கிருந்து வேறு ரெயிலில் செல்ல வேண்டியுள்ளது.

    இது குறித்து ரெயில் பயணிகள் கூறுகையில், 'கோவையில் இருந்து வடமாநிலங்களுக்கு கோடை சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. தூத்துக்குடி ரெயில் இயக்கம் இல்லாததால், ஈரோடு சென்று அங்கிருந்து பயணிக்க வேண்டியுள்ளது. ஈரோடு வழியாக இயக்கப்படும் தினசரி ரெயில் மைசூரில் இருந்து வருவதால், எப்போதும் கூட்டமாக உள்ளது. முன்பதிவில் இடம் கிடைப்பதில்லை. எனவே பயணிகள் வசதிக்காக, கோவை - தூத்துக்குடி இடையே கோடை சிறப்பு ெரயில் அறிவிக்க வேண்டும் என்றனர்.

    திருவனந்தபுரம் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 7:40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12:45 மணிக்கு சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை சென்றடையும்.

    திருப்பூர்,ஏப்.3-

    மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, தமிழ் புத்தாண்டு மற்றும் விஷு பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் வழியாக சிறப்பு ெரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து தெற்கு ெரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவனந்தபுரம்- சென்னை எழும்பூர் ெரயில்(வண்டி எண்: 06044) வருகிற 5 மற்றும் 12 ஆகிய தேதிகளில் இரு தினங்கள், திருவனந்தபுரம் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 7:40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12:45 மணிக்கு சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை சென்றடையும்.

    மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூர்- திருவனந்தபுரம் ெரயில் (வண்டி எண்: 06043) வருகிற 6 மற்றும் 13 ஆகிய இரு தினங்கள் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மதியம் 2:25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6:45 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் ரெயில் நிலையத்தை சென்றடையும்.இந்த ெரயிலானது அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம், கொல்லம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

    எர்ணாகுளம்- சென்னை எழும்பூர் ெரயில் (வண்டி எண்: 06046) வருகிற 9 மற்றும் 16-ந் தேதி, எர்ணாகுளம் ரெயில் நிலையத்தில் இரவு 11:20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12:05 மணிக்கு சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை சென்றடையும். மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூர்- எர்ணாகுளம் ெரயில் (வண்டி எண்: 06045) வருகிற 10 மற்றும் 17ந்தேதி சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 2:25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3:10 மணிக்கு எர்ணாகுளம் ரெயில் நிலையத்தை சென்றடையும். இந்த ெரயில் ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கோடைகால விடுமுறை காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சென்னை மற்றும் வேளாங்கண்ணிக்கு ஏராளமான மக்கள் பயணம் செய்கின்றனர்.
    • ரெயில்களில் கூட்டம் மிக அதிகமாக காணப்படுவதுடன் மக்கள் பயணச் சீட்டு கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

    சென்னை:

    புதுடெல்லியில் மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவை நாடார் சங்க நிர்வாகிகளுடன் சந்தித்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் திருவனந்தபுரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கும், நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கும் கோடை கால சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என்று மனு அளித்தார்.

    அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கன்னியாகுமரி மக்களின் நீண்ட நாள் ரெயில்வே துறை சம்பந்தமான கோரிக்கைகள் நிலுவையில் உள்ளது. குறிப்பாக திருவனந்தபுரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு வாராந்திர ரெயில் மற்றும் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு கூடுதலாக தினசரி ரெயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலனையில் உள்ளது.

    கோடைகால விடுமுறை காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சென்னை மற்றும் வேளாங்கண்ணிக்கு ஏராளமான மக்கள் பயணம் செய்கின்றனர். அப்போது ரெயில்களில் கூட்டம் மிக அதிகமாக காணப்படுவதுடன் மக்கள் பயணச் சீட்டு கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

    இதை கருத்தில் கொண்டு கோடைகால விடுமுறையின் போது திருவனந்தபுரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கும் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கும் சிறப்பு ரெயில்களை தினமும் இயக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள 15 மாவட்ட மக்கள் பயனடையும் வகையில் கிழக்கு கடற்கரை ரெயில்வே திட்டத்தினை நிறைவேற்ற ஆவன செய்ய வேண்டும்.

    மேலும் நிலுவையில் உள்ள நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வரும் மே 24-ந்தேதி நடக்கிறது.
    • மயிலாடுதுறை-விழுப்புரம் இருமார்க்கத்திலும் சிறப்பு ெரயில்கள் இயக்க வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வரும் மே 24-ந்தேதி நடை பெற்றவுள்ளதையொட்டி மயிலாடுதுறை-விழுப்புரம் இருமார்க்கத்திலும் சிறப்பு ரெயில்கள் இயக்கிட வலியுறுத்தி ெரயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தினர் தென்னக ெரயில்வே பொது மேலாளருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர்.

    அதில் கூறியிப்பதாவது:-

    பிரசித்திப்பெற்ற சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷகம் 32 ஆண்டுகளுக்கு பிறகு வரும் மே 24-ந்தேதி நடைபெற உள்ளது.

    தேவார திருப்பதிகம் அருளிய திருஞானசம்பந்தர் அவதரித்த தலம், காசிக்கு இணையான அஷ்டபைரவர் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் கோயில் என்பதால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், வெளிநாடு களிலிருந்து பல லட்சம் பக்தர்கள் வருகைபுரிய உள்ளதாக தருமபுரம் ஆதீனம் செய்தியாளர்கள் சந்திபின்போது தெரிவித்தார்.

    இதனிடையே சீர்காழி ெரயில் நிலையத்தில் பல ெரயில்கள் நின்று செல்வதில்லை என வணிகர்கள், ெரயில் யணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் சீர்காழி ெரயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரன், செயலாளர் முஸ்தபா, பொருளாளர் நந்தகுமார் ஆகியோர் மத்திய ரெயில்வே தலைவர், தெற்கு ெரயில்வே பொதுமேலாளர், திருச்சி கோட்ட மேலாளர், இயக்கவியல் மேலாளர் ஆகியோருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர்.

    அதில் தாம்பரம்-செங்கோட்டை-தாம்பரம் விரைவு ெரயிலுக்கு சீர்காழி ெரயில் நிலையத்தில் நின்று செல்லவும், மயிலாடுதுறை-விழுப்புரம் இரு மார்க்கத்திலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதன் மூலம் பல லட்சம் பக்தர்கள் பயனடைவர் என அதில் கூறியுள்ளனர்.

    • குடியரசு தின விடுமுறையையொட்டி சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
    • இந்த ரெயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் தொடங்கியது.

    மதுரை

    குடியரசு தின விடுமுறை கால கூட்ட நெரிசலை தவிர்க்க பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து தென் மாவட்ட பகுதிகளுக்கு சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

    அதன்படி தாம்பரம் -நாகர்கோவில் சிறப்பு ரெயில் (06053) தாம்பரத்தில் இருந்து வருகிற 25-ந்தேதி -ந்தேதி இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு நாகர்கோவில் சேரும். மறுமார்க்கத்தில் நாகர்கோவில்-தாம்பரம் சிறப்பு கட்டண ரெயில் (06054) வருகிற 29 -ந்தேதி நாகர்கோவிலில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

    இந்த ரெயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்புடன் கூடிய இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, ஒரு குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதிப்பெட்டி, 13 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வசதியுள்ள பெட்டி இணைக்கப்படும்.

    தாம்பரம்-திருநெல்வேலி சிறப்பு கட்டண ரெயில் (06021) தாம்பரத்தில் இருந்து வருகிற 26 -ந்தேதி இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறு நாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும். மறு மார்க்கத்தில் திருநெல்வேலி-சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரெயில் (06022) திருநெல்வேலியில் இருந்து வருகிற 27-ந்தேதி மதியம் 1 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இந்த ரெயில்களில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டி, 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 3 குளிர்சாதன குறைந்த கட்டண மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், ஒரு மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வசதியுள்ள பெட்டி இணைக்கப்படும்.

    இந்த ரெயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரெயில் கூடுதலாக தாம்பரம், மாம்பலம் ஆகிய ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

    இந்த ரெயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் தொடங்கியது.

    ×