என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கார்த்திகை தீபத்தை ஒட்டி திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு
    X

    கார்த்திகை தீபத்தை ஒட்டி திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு

    • நெல்லையில் இருந்து டிசம்பர் 3ம் தேதி இரவு 9.30 மணிக்கு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்.
    • விழுப்புரத்தில் இருந்து வரும் 30, டிசம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் சிறப்பு ரெயில்.

    கார்த்திகை தீபத்தை ஒட்டி திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    நெல்லையில் இருந்து டிசம்பர் 3ம் தேதி இரவு 9.30 மணிக்கு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில். மறுமார்க்கமாக இது டிசம்பர் 4ம் தேதி இரவு 7.55 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மறுநாள் காலை நெல்லை சென்றடையும்

    சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் டிசம்பர் 3, 4 தேதிகளில் காலை 9.15 மணிக்கு புறப்படும் ரெயில் திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி வழியே திருவண்ணாமலை சென்று, பின்னர் விழுப்புரம், செங்கல்பட்டு வழியே இரவு 7 மணிக்கு சென்னை கடற்கரையை வந்தடையும்

    விழுப்புரத்தில் இருந்து வரும் 30, டிசம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் காலை 10.10 மணிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரெயில் திருவண்ணாமலை செல்லும். மறுமார்க்கமாக இதே தேதிகளில் மதியம் 12.40 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்

    விழுப்புரத்தில் இருந்து டிசம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் 10.40 மணிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரெயில் வேலூர் கண்டோன்மெண்ட் செல்லும். மறுமார்க்கமாக அங்கிருந்து டிசம்பர் 4, 5, 6 தேதிகளில் அதிகாலை 2.05 மணிக்கு புறப்பட்டு, காலை 5 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்

    தாம்பரத்தில் இருந்து வரும் டிசம்பர் 3, 4 தேதிகளில் காலை 9.15 மணிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரெயில் திருவண்ணாமலை செல்லும். மறுமார்க்கமாக அதே நாளில் மாலை 5 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் முன்பதிவு வசதி கொண்ட ரெயில்களுக்கு நாளை (புதன்கிழமை) காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×