search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vegetable market"

    • விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளதால் காய்கறி மண்டிகளுக்கு காய்கறி வரத்து மிகவும் குறைந்து வருகிறது.
    • காய்கறி மண்டிகளில் விற்கப்படும் அனைத்து வகை காய்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து உள்ளது.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தொழிலுக்கு அடுத்தபடியாக மலைத் தோட்ட காய்கறிகள்தான் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு கடந்த சில வாரங்களாக கோடை அனல் வெயில் கொளுத்தி வருவதால் குளம், குட்டைகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் தோட்டங்களில் பயிரிட்டு உள்ள விளைபொருட்களுக்கு தண்ணீர் பாய்ச்ச இயலாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அங்கு விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளதால் காய்கறி மண்டிகளுக்கு காய்கறி வரத்து மிகவும் குறைந்து வருகிறது.

    இதனால் நீலகிரி மாவட்டத்துக்கு சமவெளி பகுதியில் இருந்து மட்டுமே காய்கறிகள் வரத்து இருப்பதால், அங்கு காய்கறிகளின் விலை தற்போது கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. அதிலும் குறிப்பாக ஒரு கிலோ பீன்ஸ் ரூ.200, அவரை-ரூ.180, கேரட்-ரூ.80, உருளைக்கிழங்கு ரூ.80, முருங்கைக்காய் ரூ.200, ப்ரக்கோலி ரூ.240 என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் காய்கறி மண்டிகளில் விற்கப்படும் அனைத்து வகை காய்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து உள்ளது.


    இனிவரும் நாட்களில் கடும் வறட்சி ஏற்பட்டு வெயில் தாக்கம் அதிகரிக்க கூடும் என வானிலை நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளதால் காய்கறிகளின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். நீலகிரி மார்க்கெட்டுகளில் காய்கறிகளின் விலை கிடுகிடுவென அதிகரித்து உள்ளதால், கவலை அடைந்து உள்ள இல்லத்தரசிகள், தமிழக அரசு குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்க ஏதுவாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிக அளவில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.
    • 2 நாட்களை கடந்தும் லாரிகளில் இருந்து பல்லாரி இறக்கப்படாமல் இருப்பதால் அவை அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மிகப்பெரிய காய்கறி சந்தையாக விளங்கி வரும் பாவூர்சத்திரம் பெருந்தலைவர் காமராஜர் தினசரி மார்க்கெட்டில் காய்கறிகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிக அளவில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.

    பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.35 முதல் 40 வரை ஒரு கிலோ பல்லாரி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் ரூ.25, ரூ.20 என படிப்படியாக குறைந்த நிலையில் தற்போது ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    பாவூர்சத்திரம் மார்க்கெட்டுக்கு மராட்டிய மாநிலத்தில் இருந்து அதிகளவில் பல்லாரி கொள்முதல் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது மராட்டிய மாநிலத்தில் பல்லாரி விளைச்சல் அதிகரிப்பால் அதிகளவில் லாரிகள் மூலம் தென் மாவட்டங்களுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

    இதனால் பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் பல்லாரி விலை ரூ.10 முதல் ரூ.15 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளதாலும் போதிய விற்பனை நடை பெறாததாலும் பாவூர்சத்திரம் மார்க்கெட் பகுதி மற்றும் நெல்லை-தென்காசி 4 வழிச்சாலை ஓரங்களில் 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் லோடுகள் இறக்காமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    2 நாட்களை கடந்தும் லாரிகளில் இருந்து பல்லாரி இறக்கப்படாமல் இருப்பதால் அவை அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

    • திருமங்கலத்தில் காய்கறி மார்க்கெட் கட்டிட பூமி பூஜை நடந்தது.
    • நகராட்சிக்கு சொந்தமான தரைவாடகை கட்டிடத்தில் 40 கடைகள் இயங்கி வருகின்றன.

    திருமங்கலம்

    திருமங்கலம் சின்னக் கடை வீதியில் தினசரி காய்கறி மார்க்கெட் அமைந்துள்ளது. இதற்குள் மீன்மார்க்கெட் தனியாகவும் உள்ளது. கடந்த 60 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த மார்க்கெட் மிகவும் குறுகலாகவும் இடப்பற்றாக் குறையுடனும் இயங்கி வருகிறது.

    இதில் நகராட்சிக்கு சொந்தமான தரைவாடகை கட்டிடத்தில் 40 கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளுக்கு புதிய கட்டிடம் கட்டி காய்கறி வியாபாரிகளின் நலனை பாதுகாக்க நகராட்சி முடிவு செய்தது.

    அதன்படி கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதியதாக 40 கடைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான தீர்மானம் மன்ற கூட்டத்தில் வைக்கப்பட்டுஒப்புதல் பெறப்பட்டது.

    இதனை தொடர்ந்து இதற்கான 40 கடைக ளுக்கான பூமிபூஜை மார்க்கெட்டில் வளாகத்தில் நடைபெற்றது. நகராட்சி பொறியாளார் ரத்தினவேல் முன்னிலையில் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக் குமார் தலைமையில் பூமிபூஜை நடைபெற்றது. இதில் நகராட்சி துணைத் தலைவர் ஆதவன் அதிய மான், தி.மு.க. கவுன்சிலர்கள் ஜஸ்டின் திரவியம், திருக்குமார், விரக்குமார், சின்னசாமி, வினோத், சாலியா உல்பத், சரண்யா ரவி, ரம்ஜான்பேகம்ஜாகீர், சங்கீதா, காங்கிரஸ் கவுன்சிலர் அமுதா சரவணன் நகராட்சி ஓவர்சிஸ் ராஜா, சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட் சுமார் 100ஆண்டுகளுக்கு மேலாக தினசரி பெரிய மார்க்கெட்டாக செயல்பட்டு வருகிறது.
    • உடனடியாக அதிகாரிகள் சேறும் சகதியுமாக உள்ள மார்க்கெட்டை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரி களும் பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட் சுமார் 100ஆண்டுகளுக்கு மேலாக தினசரி பெரிய மார்க்கெட்டாக செயல்பட்டு வருகிறது,

    இந்த மார்க்கெட்டுக்கு உள்ளுர் வியாபாரிகள் மட்டுமின்றி

    வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சில்லரை வியாபாரிகள் மினி சரக்கு வாகனங்களில் காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்,

    மழை

    இதனையடுத்து தற்போது கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை தொடங்கி கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது இதனால் தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் மழைநீர் குட்டை குட்டையாக தேங்கி சேறும் சகதியுமாக காணப்படு வதால் வெளியூரிலிருந்து வரும் சில்லரை வியாபாரிகள் காய்கறிகளை தாங்கள் கொண்டு வந்த மினி ஆட்டோவில் ஏற்றிச் செல்ல முடியாமல் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருவதாகவும் மேலும் காய்கறிகளை வாங்கவதற்கு கூட நடந்து செல்லமுடியாமல் சேற்றிலேயே நடந்து சென்று வாங்கிய அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாமல் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

    உடனடியாக அதிகாரிகள் சேறும் சகதியுமாக உள்ள மார்க்கெட்டை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரி களும் பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தலைவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மார்கெட்டை சரிசெய்யாவிட்டால் சிஐடியு, மற்றும் சாலையோர வியாபாரிகள் சங்கங்கள் இணைந்து சேற்றில் நாற்று நடும் போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்தனர்.

    • கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கு விற்பனையானது.
    • கடும் பனிப்பொழிவு தாக்கம், காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்படுகிறது

    ஈரோடு, 

    ஈரோடு வ .உ. சி. காய்கறி மார்க்கெட்டிற்கு தினமும் கோலார், ஆந்திரா, தாளவாடி, அனந்தபூர் போன்ற பகுதிகளில் இருந்து 10 லோடு லாரிகளில் 10 டன் தக்காளிகள் வரத்தாகி வந்தன. இதனால் கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.20க்கு விற்பனையானது.

    இந்நிலையில் கடும் பனிப்பொழிவு தாக்கம், காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு தக்காளி வரத்தும் குறைந்துள்ளது. இன்று வ. உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டுக்கு கோலாரில் இருந்து ஒரு டன் தக்காளி மட்டுமே வரத்தாகி இருந்தது. இதனால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது.

    இன்று ஒரு கிலோ தக்காளி ரூபாய் 40க்கு விற்பனையானது. தொடர் முகூர்த்தம் இருப்பதால் தக்காளி தேவை அதிகரித்துள்ளது. எனினும் தேவைக்கு ஏற்ப தக்காளி வரத்து குறைவாக இருப்பதால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து விட்டது.

    இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு இதே நிலைமைதான் நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர். அதன் பிறகு மெல்ல மெல்ல விலை சரிய தொடங்கும் என தெரிவித்தனர்.

    • மதுரை மேலூரில் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் திடீர் மறியல், முற்றுகையில் ஈடுபட்டனர்.
    • காய்கறி வியாபாரிகள் சந்தைப்பேட்டை பகுதி வியாபாரம் செய்வதற்கு ஏற்ற இடம் இல்லை தெரிவித்தனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் செக்கடியில் நகராட்சிக்கு சொந்தமான தினசரி காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

    மார்க்கெட்டின் கட்டிடம் பழமையானது என்பதால் அதனை இடித்து புதிதாக கட்டிடம் கட்ட நகராட்சி முடிவு செய்தது. இதன் காரணமாக செக்கடி காய்கறி வியாபாரிகள் சந்தைப்பேட்டை உழவர் சந்தை பகுதியில் தற்காலிகமாக கடையை அமைத்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு காய்கறி வியாபாரிகள் சந்தைப்பேட்டை பகுதி வியாபாரம் செய்வதற்கு ஏற்ற இடம் இல்லை தெரிவித்தனர்.

    இந்த நிலையில் காய்கறி வியாபாரிகள் சங்கத்தலைவர் மணவாளன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இன்று மேலூர் நகராட்சி அலுவலகத்தை முற்று கையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது நகர் பகுதியிலேயே கடை அமைத்துத்தர ஏற்பாடு செய்ய வேண்டுமென தெரி வித்தனர்.

    இதுகுறித்து கமிஷனர் ஆறுமுகம், என்ஜினீயர் பட்டுராஜன், கவுன்சிலர் திவாகர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதையடுத்து போரா ட்டக்காரர்கள் திடீரென அங்கிருந்து புறப்பட்டு மதுரை-திருச்சி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மறியல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×