search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "community baby showers"

    • திருப்பத்தூரில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
    • பூ மற்றும் பழங்கள் உள்ளிட்ட வளைகாப்பு பொருட்கள் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் சிங்கம்புணரி வட்டார பகுதிகளில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் சமூக நலம் மகளிர் உரிமைத்துறை சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

    இவ்விழாவிற்கு அமைச் சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை வகித்து கர்ப்பிணி பெண்களுக்கு தமிழக அரசின் வளைகாப்பு பொருள்கள் மற்றும் தனது சார்பில் சேலை, பாதாம் பருப்பு, ஹார்லிக்ஸ், பேரிச்சம்பழம் உள்ளிட்ட ஊட்டச்சத்து பொருட்கள் தொகுப்பினை வழங்கி வாழ்த்தினார்.

    அப்போது அவர் பேசுகையில், கர்ப்பிணி தாய்மார்கள் அனைவருக்கும் இவ்விழா வின் மூலம் 5 வகையான கலவை சாதம், வளையல்கள், பூ மற்றும் பழங்கள் உள்ளிட்ட வளை காப்பு பொருட்கள் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

    திருப்பத்தூர் மற்றும் சிங்கம்புணரி வட்டாரத் திற்குட்பட்ட மொத்தம் 200 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படும் நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

    கர்ப்பிணி தாய்மார்கள், கர்ப்பகால மாதம் முதல் தொடங்கி 10 மாதமும் அரசு மருத்துவமனையில் பதிவு செய்து சரியான மாதாந்திர பரிசோதனை மேற்கொண்டு ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுப்பது டன் தானும் ஆரோக்கியமாக இருந்திட வேண்டும் என்பதே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும் என்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்.மணிபாஸ்கரன், தேவ கோட்டை வருவாய் கோட் டாட்சியர் பால்துரை, சுகாதார துணை இயக்குநர் விஜய்சந்திரன் ஒருங்கி ணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவர் முத்து மாரியப்பன், திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சண்முகவடிவேல், பேரூ ராட்சி தலைவர் கோகிலா ராணி நாராயணன், துணைத்தலைவர் கான்முக மது, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் கோமதி சண்முகம், ராஜேஸ்வரி சேகர், சரண்யாஹரி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சிங்கம்புணரி அருகே 50 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
    • அர்களுக்கு சர்க்கரை பொங்கல், லெமன் சாதம், புளிசாதம், தயிர் சாதம், வெஜிடேபிள் பிரியாணி உள்ளிட்ட 5 வகையான உணவுகள் பரிமாறப்பட்டது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள ஏரியூரில் திருமலை மருதீஸ்வரர் திருமண மண்டபத்தில் அரசு சார்பில் 50 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா நடந்தது.

    சமூகநலன் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணை ந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் ஆகிய துறைகளின் சார்பில் இந்த வளைகாப்பு விழா நடைபெற்றது. ஒன்றிய தலைவர் திவ்யாபிரபு தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

    விழாவில் 50 கர்ப்பிணி பெண்களுக்கு மாலை அணிவித்து கன்னத்தில் சந்தனம் பூசி, நெற்றியில் குங்குமமிட்டு, கைகளில் கண்ணாடி வளையல் அணிந்து வளைகாப்பை நடத்தினர். அதனை தொடர்ந்து அவர்களுக்கு சில்வர் கிண்ணம், வாழைப்பழம், மஞ்சள், குங்குமம், ரவிக்கைதுணி, மஞ்சள் கயிறு, தாம்பூலத்தில் வைத்து சீதனமாக வழங்கப்பட்டது.

    இதை தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு சர்க்கரை பொங்கல், லெமன் சாதம், புளிசாதம், தயிர் சாதம், வெஜிடேபிள் பிரியாணி உள்ளிட்ட 5 வகையான உணவுகள் பரிமாறப்பட்டது.

    இந்த விழாவில் மாவட்ட திட்ட அலுவலர், வட்டார குழந்தைகள் திட்ட அலுவலர், ஏரியூர் ஊராட்சி மன்றத்தலைவர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

    ×