search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sirkazhi"

    • நாட்டு நலப்பணித் திட்ட இயக்கம் மாணவர்களுடன் ஒன்றிணைந்து தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
    • நகர்மன்ற உறுப்பினர் ஜெயந்தி பாபு தலைமையில் நடை பெற்றது

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளிலும் மத்திய அரசின் தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் நகரில் ஒட்டுமொத்தமாக தூய்மை பணி நடைபெற்றது. 18-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் புதிய பஸ் நிலையம், அம்பேத்கார் சிலை, அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மற்றும்

    எல்.எம்.சி. மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட இயக்கம் மாணவர்களுடன் ஒன்றிணைந்து தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

    நகர் மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன்,துணை தலைவர் சுப்பராயன் ஆகியோர் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர் இதே போல் 13-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் நகர் மன்ற உறுப்பினர் முபாரக் தலைமையில் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து தூய்மை சேவா இயக்கத்தின் படி தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது இதில் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பொறுப்பா ளர்கள் பலர் பங்கேற்றனர். 14-வது வார்டு பிடாரி வடக்கு வீதி உள்ளிட்ட பகுதிகளில் நகர்மன்ற உறுப்பினர் ஜெயந்தி பாபு தலைமையில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் தூய்மை பணியில் ஈடுபட்டு குப்பைகளை அகற்றினர்.

    • சீர்காழி, பொறையாறு பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • பழையாறு, பழைய பாளையம், திருமுல்லைவாசல், பூம்புகார்மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, ஆச்சாள்புரம், அரசூர், எடமணல், பொறையாறு, கிடாரம் கொண்டான் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை 24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

    எனவே இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, ஆச்சாள்புரம், அரசூர், எடமணல், பொறையாறு, கிடாரம் கொண்டான், கொள்ளிடம், புத்தூர், கொண்டல், பழையாறு, பழைய பாளையம், திருமுல்லைவாசல், பூம்புகார்மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

    இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் லதா மகேஸ்வரி தெரிவித்தார்.

    • மாவட்ட மாற்றுத்தி றனாளிகள் அலுவலக உதவியாளர் பரத்குமார் தலைமை வகித்தார்.
    • வருவாய் கோட்டாட்சி யரின் நேர்முக உதவியாளர் சண்முகம் வரவேற்று பேசினார்.

    சீர்காழி:

    சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி களு க்கான சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது.

    மாவட்ட மாற்றுத்தி றனாளிகள் அலுவலக உதவியாளர் பரத்குமார் தலைமை வகித்தார்.

    சீர்காழி குடிமை ப்பொருள் வழங்கல் தாசில்தார் சபிதாதேவி, சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார்கள் இந்துமதி, சாந்தி, வட்ட வழங்கல் தனி தாசில்தார் பாபு, மண்டல துணை தாசில்தார் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வருவாய் கோட்டாட்சி யரின் நேர்முக உதவியாளர் சண்முகம் வரவேற்று பேசினார். சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா மாற்றுத் திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவி தையல் எந்திரம், ஊன்றுகோல் ஆகியவற்றை வழங்கி மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்றுக்கொ ண்டார். இதில் டாக்டர் அருண்ராஜ்குமார், சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன், மேலாளர்கள் சங்கர், சுமதி கலந்து கொண்டனர்.

    • கடல் சாகச பயணத்தின் ஐந்தாம் நாளான நேற்று பூம்புகார் துறைமுகத்தில் இருந்து காரைக்கால் நோக்கிச் செல்லும் பயணம் தொடங்கி உள்ளது.
    • இந்தப் பயணத்தில் மூன்று கடற்படை அதிகாரிகளும் 4 தேசிய மாணவர் படை இணை அலுவலர்களும் பங்கேற்றுள்ளனர்

    சீர்காழி:

    ஜனவரி 2023 அன்று நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு நடத்தப்படும் போட்டிகளில் ஒன்றான கடல் சாகச பயணம் குறித்த போட்டிக்கான நிகழ்வாக சமுத்திரகமன் 2022 கடல் சாகச பயணம் புதுவையில் இருந்து காரைக்கால் சென்று மீண்டும் புதுவை திரும்புதல் நிகழ்வு அமைக்கப்பட்டுள்ளது.

    கடலூர் 5 தமிழ்நாடு தேசிய மாணவர் படை, கப்பல் படை பிரிவு மற்றும் 1 புதுவை தேசிய மாணவர் கப்பல் படை மாணவர்கள் இணைந்து நடத்தும் கடல் சாகச பயணம் கடந்த 6-ந் தேதி காலை புதுவையில் துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைக்க நடைபெற்றது. இதில் 25 மாணவிகள் உள்பட 60 தேசிய மாணவர் படை மாணவர்கள் கடல் சாகச பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த கடல் சாகச பயணத்தின் ஐந்தாம் நாளான நேற்று பூம்புகார் துறைமுகத்தில் இருந்து காரைக்கால் நோக்கிச் செல்லும் பயணம் தொடங்கி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா கொடியசைத்து இந்த கடல் சாகச பயணத்தைத் பூம்புகாரில் தொடங்கி வைத்தார்.

    இந்தக் குழுவினருடன் இந்தப் பயணத்தில் மூன்று கடற்படை அதிகாரிகளும் 4 தேசிய மாணவர் படை இணை அலுவலர்களும் பங்கேற்றுள்ளனர் இப்பய ணத்தில் மூன்று பாய்மரப் படகுகளில் மாணவர்கள் பயணிக்கின்றனர்.

    இந்த குழுவினர் தாங்கள் செல்லும் இடங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் ரத்த தான முகாம் மரம் நடுதல் தூய்மைப்பணி திட்டம் எனப் பல சமூக சேவை சார்ந்த நிகழ்வுகளை நடத்த உள்ளனர்.

    இதன் ஒரு பகுதியாக டி.பி.எம்.எல் கல்லூரியில் தேசிய மாணவர் படை சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது. அதை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா தொடக்கி வைத்தார். தேசிய மாணவர் படை மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ரத்த தானம் அளித்தனர்.

    சீர்காழி அருகே வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தை அனுப்பிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சீர்காழி:

    இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் தீவிரவாதிகள் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்துள்ள ஒரு பள்ளிவாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதுபற்றிய விபரம் வருமாறு:

    நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம், தைக்கால் பகுதியில் காதர்ரியா பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளிவாசலுக்கு கடந்த 23-ந்தேதி ஒரு கடிதம் வந்தது. அதனை தபால்காரர் அருகில் உள்ள பிரம்பு விற்பனை கடையில் கொடுத்து விட்டு சென்றுவிட்டார்.

    அதனை கடை உரிமையாளர் ஜமாத் தலைவர் முகமது சுல்தானிடம் நேற்று இரவு கொடுத்தார். அதனை பிரித்துப் பார்த்தபோது தைக்கால் பள்ளிவாசலில் இந்த மாதம் இறுதியில் வெடிகுண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கடிதத்தை அனுப்பியவர் முகவரியில் ஆச்சாள்புரத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பெயர் உள்ளது. மேலும் இந்த கடிதத்தில் 2 பேரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த கடிதத்தை ஜமாத் தலைவர் முகமது சுல்தான் கொள்ளிடம் போலீசில் ஒப்படைத்து புகார் செய்தார். இந்த மிரட்டல் கடிதம் வதந்தியை பரப்புவதற்காக எழுதப்பட்டதாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இந்த கடிதத்தை அனுப்பிய மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சீர்காழி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆர்.கே. நகர் 20 ரூபாய் டோக்கன் போல் சீர்காழியில் அ.தி.மு.க.வினர் வினியோகித்த பெட்ரோல் டோக்கன்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். #LSPolls #ADMK

    சீர்காழி:

    தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18-ந் தேதி பாரா ளுமன்ற தேர்தலும், 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

    இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டு 24 மணி நேர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களில் எடுத்து செல்லும் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகிறார்கள். மேலும் கட்சி தொண்டர்களுக்கு மது வாங்கி கொடுக்கிறார்களா? எனவும் கண்காணித்து வருகிறார்கள்.

    சென்னை ஆர்.கே. நகரில் நடந்த இடைத்தேர்தலின் போது வாக்காளர்களுக்கு 20 ரூபாய் டோக்கன் வழங்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் கட்சி தொண்டர்களுக்கு பெட்ரோல் போட டோக்கன் கொடுத்ததை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

    மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க வினர் சீர்காழியில் முதல்நாள் பிரச்சாரத்தை தொடங்கினர்.

    பிரச்சாரத்தை முன்னிட்டு அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளான பா.ம.க, தே.மு.தி.க, த.ம.கா, உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் 500-க்கும் மேற்பட்டோர் தங்களது இருசக்கர வாகனத்துடன் திரண்டிருந்தனர்.

    இதனிடையே சீர்காழி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் கட்சி கொடியுடன் இருசக்கர வாகனங்களில் தொண்டர்கள் பலர் பெட்ரோல் நிரப்பி கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த தேர்தல் பறக்கும் படை மண்டல துணை தாசில்தார் சுவாமி நாதன் தலைமையில் போலீசார் பெட்ரோல் பங்கில் திடீர் ஆய்வு நடத்தினர்.

    பறக்கும் படையினரை கண்ட கட்சியினர் பலர் அங்கிருந்து விரைந்து சென்றனர். தொடர்ந்து நடந்த ஆய்வின்போது கட்சி தொண்டர்கள் பலர் அ.தி.மு.க. பொறுப்பாளர் ஒருவரின் பெயருடன் கூடிய ரப்பர் ஸ்டாம்பு அச்சிட்ட டோக்கன் கொடுத்து ரூ.100 பெட்ரோல் நிரப்பியது தெரிய வந்தது.

    இதனை கண்ட தேர்தல் பறக்கும் படையினர் அதிர்ச்சி அடைந்து அடுத்த நிமிடம் பெட்ரோல் போட்ட பங்க் ஊழியர் கையில் வைத்திருந்த 100 டோக்கன்களையும், ரூ. 10 ஆயிரத்து 870 ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்து தாசில்தார் அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர்.

    இதுதொடர்பாக பெட்ரோல் பங்க் கணக்கரிடம் விசாரணை செய்து அறிக்கை பெற்றனர். அறிக்கை பெற்ற பின்பு இந்த பெட்ரோல் செலவு வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும் என தேர்தல் பறக்கும் படையினர் தெரிவித்தனர்.

    அ.தி.மு.க.வினர் மூலம் வழங்கப்பட்ட பெட்ரோல் டோக்கன் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  #LSPolls #ADMK

    சீர்காழியில் தொழிலதிபர்களை பிரபல ரவுடிகள் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சீர்காழி:

    சீர்காழி பகுதியை சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் ரமேஷ்பாபு கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிடாரி வடக்கு வீதியில் தனியார் பஸ் அதிபரை பார்ப்பதற்காக அவரது வீட்டுவாசலில் காரில் காத்துக்கொண்டிருந்த போது கூலிப்படையினர் நாட்டுவெடிகுண்டை வீசி அரிவாளால் வெட்டி அவரை கொலை செய்தனர்.

    இந்த வழக்கில் தொடர்புடைய சீர்காழியை அடுத்த புதுத்துறை ராமகிருஷ்ணன் மகன் பார்த்தீபன் (வயது 29). திருவாரூர் ஆதனூர் மண்டபம் பகுதியை சேர்ந்த கட்டபிரபு என்கிற அருண்பிரபு ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பார்த்தீபன், அருண்பிரபு ஆகியோர் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்நிலையில் சீர்காழி பகுதியில் உள்ள முக்கிய தொழில் அதிபர்களை மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார்.

    இதுகுறித்து சீர்காழி போலீசில் தொழிலதிபர்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் தொழிலதிபர்களுக்கு பணம் கேட்டு மிரட்டல் விடுத்தது அ.தி.மு.க பிரமுகர் கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த பார்த்தீபன் என தெரியவந்தது.

    அதனை தொடர்ந்து போலீசார் பார்த்தீபனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று இரவு தென்பாதி உப்பனார் பாலம் அருகே சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் போலீசார் வாகனதணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை கைகாட்டி தடுத்தனர்.

    அப்போது கார் நிற்காமல் சென்றுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை விரட்டி சென்று மடக்கினர். அப்போது காரில் பயங்கர ஆயுதங்களுடன் பிரபல ரவுடிகளான பார்த்தீபன் மற்றும் அருண்பிரபு ஆகியோர் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்து கார் மற்றும் அவர்களிடம் இருந்த பயங்கர ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சீர்காழியில் பிரியாணி கடையில் தகராறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி பிடாரி வடக்கு வீதியை சேர்ந்தவர் குமார். இவர் சீர்காழியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு மேல்பாதி ஆற்றங்கரை தெருவை சேர்ந்த கலியபெருமாள் (30) என்பவர் நேற்று இரவு சென்று பிரியாணி சாப்பிட்டு விட்டு பாதி தொகையை மட்டும் கொடுத்து விட்டு மீதி தொகையை பின்னர் தருவதாக கூறியுள்ளார்.

    இது தொடர்பாக குமாருக்கும், கலிய பெருமாளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து செத்த கோழியை வாங்கி குமார் பிரியாணி செய்வதாக வாடிக்கையாளர்களிடம் கலியபெருமாள் கூறியுள்ளார். இதுபற்றி குமார் சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் வழக்குப்பதிவு செய்து கலியபெருமாளை கைது செய்தார்.

    சீர்காழி அருகே பாக்கெட் சாராயம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி:

    நாகை எஸ்.பி. விஜயக்குமார் உத்தரவின் பேரில் திருவெண்காடு இன்ஸ்பெக்டர் வேலுதேவி, தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சீர்காழி அருகே ஆலங்காடு பகுதியில் வாகனசோதனை மேற்கொண்டனர். அப்போது காரைக்கால் பகுதியிலிருந்து வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் 200 லிட்டர் சாராயம் பாக்கெட்களில் அடைக்கப்பட்டு கடத்தி வருவது தெரிந்தது. இதையடுத்து சாராயத்தோடு காரையும் பறிமுதல் செய்து காரைக்கால் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 26) என்பவரை கைது செய்தனர்.

    இதேபோல் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் பெரம்பூர் அருகே வாகனதணிக்கை செய்தபோது மோட்டார் சைக்கிளில் 120லிட்டர் சாராயம் கடத்திவந்த மாங்கா.சண்முகம்(48) என்பவரை கைது செய்தனர்.

    சீர்காழி அருகே விபத்தில் வங்கி ஊழியர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே கீழதென்பாதி கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 42). இவர் மயிலாடுதுறையில் உள்ள ஒரு வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.மயிலாடுதுறை அடுத்த மூங்கில் தோப்பு பகுதியை சேர்ந்தவர் விஜயபாலன் (24).

    இந்த நிலையில் நேற்று மாலை கார்த்திகேயன் , மோட்டார் சைக்கிளில் சட்ட நாதபுரம் ஆற்றுப் பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே விஜயபாலன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    அப்போது திடீரென 2 மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன. இதில் பலத்த காயமடைந்த கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் காயம் அடைந்த விஜயபாலனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜயபாலன் இறந்தார்.

    இந்த விபத்து பற்றி சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விபத்தில் பலியான கார்த்திகேயனுக்கு திருமணமாகி மனைவியும் 8 வயதில் மகனும் உள்ளனர்.

    சீர்காழியில் கொல்லப்பட்ட அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கு தொடர்பாக சேலம் கோர்ட்டில் சரணடைந்த 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த எடமணல்கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்பாபு (வயது 47). இவர் கொள்ளிடம் ஒன்றிய அ.தி.மு.க. மாணவர் அணி துணை செயலாளராக இருந்து வந்தார். மேலும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆதரவாளராகவும் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் ரமேஷ் பாபுவை கடந்த 23-ந் தேதி பிடாரி வடக்கு வீதியில் 10 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்தனர்.

    அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் ஆதரவாளராகவும், நாகை மாவட்ட அ.தி.மு.க.வில் செல்வாக்கு மிக்கவராக விளங்கிய வந்த ரமேஷ் பாபு, கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த கொலை பற்றி விசாரிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் கொலையாளிகள் பயன்படுத்திய கார், திருக்கடையூர் பகுதியில் அனாதையாக நின்றது. இதை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வந்தனர்.

    அ.தி.மு.க. பிரமுகர் ரமேஷ்பாபு குறுகிய காலத்திலேயே பல்வேறு காண்டிராக்ட் பணிகளை எடுத்தார். இதன்மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்தார். அமைச்சரின் ஆதரவாளராகவும், செல்வாக்குமிக்கவராகவும் கட்சியில் விளங்கினார். இதனால் அவருக்கு தொழில் போட்டி, அரசியல் போட்டிகள் அதிகமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதை உணர்ந்த அவர் எப்போதும் தனது பாதுகாப்புக்கு துப்பாக்கியை வைத்திருந்தார். ஆனால் அவர் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று தெரிவிக்கவில்லை. இதுவே கூலிப்படைக்கு அவரை கொலை செய்ய வசதியாக போய்விட்டது.

    ரமேஷ்பாபுவை கொலை செய்ய திட்டம் தீட்டிய கொலை கும்பல், கடந்த 20-ந் தேதியே நாகை மாவட்டத்தில் திருக்கடையூர், சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் கார்களில் சுற்றி வந்துள்ளனர். ரமேஷ் பாபுவை தீவிரமாக நோட்டமிட்டே இந்த கொலை அரங்கேற்றியுள்ளனர்.

    இதன் பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா? என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த நிலையில் தஞ்சை, பகுதியை சேர்ந்த 3 ரவுடிகளிடம் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் ரமேஷ்பாபு கொலை தொடர்பாக சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் எண்.2-ல் நீதிபதி முன்னிலையில் சீர்காழி மதுத்துறை பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் பார்த்திபன் (வயது 28), திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த பாலு மகன் அருண்பிரபு(34) மற்றும் புதுச்சேரி, மேல்காத்த மங்கலம் தேனீநகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் பிரேம்குமார் (22) ஆகிய 3 பேர் சரண் அடைந்தனர். சரண் அடைந்த அவர்கள் 3 பேரையும் சேலம் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    இதற்கிடையே கோர்ட்டில் சரண் அடைந்த பார்த்திபன் உள்பட 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால் அவர்கள் நேற்று இரவே சேலத்தில் புறப்பட்டு சென்றனர்.

    சேலம் சிறையில் உள்ள 3 பேரையும் காவலில் எடுத்து விசாரித்தால் தான் ரமேஷ்பாபுவின் கொலைக்கான உண்மையான காரணம் மற்றும் பின்னணியில் யார் இருந்தனர் என்றும் தெரிய வரும் என தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.
    சீர்காழி நகரில் சட்டம் ஒழுங்கை தீவிரமாக கண்காணிக்கவும் குற்றங்களை தடுக்கவும் 38 கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்க உள்ளதாக எஸ்.பி. கூறியுள்ளார்.
    சீர்காழி:

    சீர்காழி காவல் நிலையத்தில் நாகப்பட்டிணம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக்சஞ்சய்சேகர் அலுவல் ஆய்வு பணி மேற்கொண்டார்.அப்போது காவல்நிலையத்தில் உள்ள பதிவேடுகள், குற்றபதிவேடுகள், ஆவணங்கள் ஆகியவற்றை ஆய்வுசெய்தார். வழக்கு விவரங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது நிருபர்களிடம் எஸ்.பி. தேஷ்முக்சஞ்சய் கூறுகையில், சீர்காழியில் போக்குவரத்தை சீரமைக்கும் வகையிலும், குற்ற நடவடிக்கைகளை தடுத்திடும் வகையிலும், சட்டம் ஒழுங்கை தீவிரமாக கண்காணிக்கவும் 38 இடங்களில் உயர் அதி நவீன கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்படவுள்ளது. அதன் கன்ட்ரோல்யூனிட் மற்றும் கண்காணிப்பு மானிட்டர்கள் என அனைத்து கணினி சேவைகளும் மகளிர் காவல்நிலையத்தில் அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்படவுள்ளது.

    தேர்வு பெற்ற காவலர்களுக்கு பயிற்சி காலம் முடிந்தவுடன் உயர் காவல் அதிகாரிகளின் உத்தரவின்படி போதிய காவலர்கள் பணியமர்த்தப்படவுள்ளனர். போக்குவரத்து நெருக்கடியை சீரமைக்கும் வகையில் சைரன் வைத்த இருசக்கரவாகனத்தில் ரோந்து போலீசார் நகர் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுப்படுத்தப்படுகின்றனர் என்றார். ஆய்வின்போது டி.எஸ்.பி சேகர், இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு ஆகியோர் உடனிருந்தனர்.#tamilnews
    ×