என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sirkazhi"

    • 2 பேர் மட்டும் மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
    • போடப்பட்ட மருந்து மற்றும் ஊசி உள்ளிட்டவைகளை ஆய்வு செய்த பிறகு சரியான காரணம் தெரியவரும்.

    சீர்காழி:

    சீர்காழி அரசு மருத்துவமனையில் தாய்சேய் நல மையம் இயங்கி வருகிறது.

    இங்கு மகப்பேறு மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக கர்ப்பிணி பெண்கள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் இங்கு சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு டாக்டர்கள் ஊசி போட்டுள்ளனர்.

    இதையடுத்து அவர்களுக்கு திடீரென நடுக்கம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தலைமை டாக்டர் மற்றும் மகப்பேறு டாக்டர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த டாக்டர்கள் கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களுக்கு நடுக்கம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் டாக்டர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

    அதைத்தொடர்ந்து அவர்களுக்கு உடல்நிலை சீரானது. இவர்களில் 2 பேர் மட்டும் மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து சீர்காழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து சீர்காழி அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் அருண்ராஜ்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை பெற்று வந்த 27 பேரில் 16 கர்ப்பிணிகள், 11 குழந்தை பெற்ற தாய்ய்மார்களுக்கு ஆண்டிபயாடிக் ஊசி வழக்கம் போல் போடப்பட்டது.

    அப்போது திடீரென அவர்களுக்கு நடுக்கம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக அனைவருக்கும் மாற்று மருந்து கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் சீரான இயல்பு நிலைக்கு திரும்பினர். எனவே அவர்களுக்கு போடப்பட்ட மருந்து மற்றும் ஊசி உள்ளிட்டவைகளை ஆய்வு செய்த பிறகு சரியான காரணம் தெரியவரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த சம்பவத்தால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. 

    • திருச்சாந்துருண்டை பிரசாதத்தை உட்கொண்டால் 4,448 வியாதிகள் குணமாகும்.
    • வேண்டுதல்கள் நிறைவேற வீட்டில் மஞ்சள் தடவிய குச்சியை வைத்து பூஜிப்பர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் பிரசித்தி பெற்ற தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவிலில் நவகிரகங்களில் முதன்மையான செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், செல்வமுத்துக்குமார சுவாமி, தன்வந்திரி சித்தர் ஆகிய சுவாமிகள் தனி சன்னிதியில் அருள்பாலித்து வருகின்றனர்.

    இங்குள்ள சித்தாமிர்த தீர்த்தத்தில் நீராடி கோவிலில் வழங்கப்படும் 'திருச்சாந்துருண்டை' எனும் பிரசாதத்தை உட்கொண்டால் 4,448 வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம்.

    மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நகரத்தார் மக்களின் குலதெய்வ வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    அதாவது, பண்டைய காலத்தில் பூம்புகார் பகுதியில் இருந்து பல்வேறு பகுதிகளில் குடியேறிய நகரத்தார் மக்கள் பல தலைமுறைகளாக ஆண்டுதோறும் சித்திரை மாதம் 2-வது செவ்வாய்க்கிழமை பாத யாத்திரையாக கோவிலுக்கு வந்து தங்கள் குலதெய்வமான தையல் நாயகியை வழிபடுவது வழக்கம்.

    இதற்காக அவர்கள் சித்திரை மாத முதல் செவ்வாய்க்கிழமை தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற வீட்டில் மஞ்சள் தடவிய குச்சியை வைத்து பூஜிப்பர். பின்னர், பாதயாத்திரை தொடங்கும் மக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதற்கு காணிக்கையாக அந்த குச்சியை கோவிலின் கொடிமரம் முன்பு செலுத்துகின்றனர்.

    பின்னர், அம்பாள் மற்றும் சுவாமியை தரிசனம் செய்து விட்டு தங்களது புதிய வேண்டுதலுக்காக கொடிமரத்தில் இருந்து மாற்று குச்சியை எடுத்து செல்வது வழக்கம்.

    அதன்படி, இன்று சித்திரை மாத 2-வது செவ்வாய்க் கிழமையை யொட்டி காரைக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், பரமக்குடி, திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான நகரத்தார் மக்கள் கோவிலில் குவிந்தனர். பின்னர், அவர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி விட்டு குலதெய்வ வழிபாடு மேற்கொண்டனர்.

    இந்நிகழ்வை யொட்டி பாதுகாப்பு பணிக்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மேற்பார்வையில், துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர்கள் புயல் பாலசந்திரன், செல்வி, ராஜா, விசித்திரா மேரி உள்பட 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    பக்தர்கள் வசதிக்காக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் 4 வீதிகளிலும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்டவைகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    பக்தர்கள் சிரமமின்றி கோவிலுக்கு வருவதற்காக சீர்காழி, மயிலாடுதுறை, சிதம்பரம், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வைத்தீஸ்வரன் கோவிலில் குவிந்ததால் அப்பகுதியே விழாக்கோலம் பூண்டது.

    • சீர்காழி, பொறையாறு பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • பழையாறு, பழைய பாளையம், திருமுல்லைவாசல், பூம்புகார்மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, ஆச்சாள்புரம், அரசூர், எடமணல், பொறையாறு, கிடாரம் கொண்டான் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை 24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

    எனவே இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, ஆச்சாள்புரம், அரசூர், எடமணல், பொறையாறு, கிடாரம் கொண்டான், கொள்ளிடம், புத்தூர், கொண்டல், பழையாறு, பழைய பாளையம், திருமுல்லைவாசல், பூம்புகார்மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

    இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் லதா மகேஸ்வரி தெரிவித்தார்.

    • நாட்டு நலப்பணித் திட்ட இயக்கம் மாணவர்களுடன் ஒன்றிணைந்து தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
    • நகர்மன்ற உறுப்பினர் ஜெயந்தி பாபு தலைமையில் நடை பெற்றது

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளிலும் மத்திய அரசின் தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் நகரில் ஒட்டுமொத்தமாக தூய்மை பணி நடைபெற்றது. 18-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் புதிய பஸ் நிலையம், அம்பேத்கார் சிலை, அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மற்றும்

    எல்.எம்.சி. மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட இயக்கம் மாணவர்களுடன் ஒன்றிணைந்து தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

    நகர் மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன்,துணை தலைவர் சுப்பராயன் ஆகியோர் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர் இதே போல் 13-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் நகர் மன்ற உறுப்பினர் முபாரக் தலைமையில் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து தூய்மை சேவா இயக்கத்தின் படி தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது இதில் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பொறுப்பா ளர்கள் பலர் பங்கேற்றனர். 14-வது வார்டு பிடாரி வடக்கு வீதி உள்ளிட்ட பகுதிகளில் நகர்மன்ற உறுப்பினர் ஜெயந்தி பாபு தலைமையில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் தூய்மை பணியில் ஈடுபட்டு குப்பைகளை அகற்றினர்.

    • பஞ்சவனேசுவர ஆலயங்களில் இதுவும் ஒன்று.
    • பிரம்ம தீர்த்தம், சக்கர தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் உள்ளன.

    கோவில் தோற்றம்


    திருமுல்லைவாயில் என்ற பெயரில் இரு பாடல்பெற்ற தலங்கள் உண்டு. ஒன்று சென்னை திருவள்ளூர் அருகிலும், மற்றொன்று சீர்காழிக்கு அருகிலும் உள்ளது. எனவே திருவள்ளூர் அருகில் இருப்பதை 'வடதிருமுல்லைவாயில்' என்றும், சீர்காழி அருகில் உள்ளதை 'தென்திருமுல்லைவாயில்' என்றும் குறிப்பிடுவர்.

    தேவாரப் பாடல் பெற்ற 276 தலங்களில் தென்திருமுல்லைவாயில் திருத்தலமானது, சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் 7-வது தலமாகும். இத்தல இறைவன் 'முல்லைவனநாதர்', இறைவி 'அணிகொண்ட கோதையம்மை' என்றும் அழைக்கப்படுகின்றனர். ஆலயத்தின் தல விருட்சமாக முல்லைக்கொடி உள்ளது. இங்கே பிரம்ம தீர்த்தம், சக்கர தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் உள்ளன.


    தலவரலாறு

    கரிகால்சோழனின் பாட்டன் முதலாம் கிள்ளி வளவன், சரும நோயால் மிகவும் வேதனையுற்றான். நோய் தீர அரண்மனை வைத்தியர்கள் தீர்த்த யாத்திரையுடன் கூடிய இறை வழிபாட்டை மேற்கொள்ளுமாறு ஆலோசனை கூறினர்.

    அதன்படி இவ்வாலயத்திற்கு கடல் நீராடுவதற்காக மன்னன் வந்தான். அக்காலகட்டத்தில் இந்த பகுதி முழுவதும் முல்லை கொடிகள் நிறைந்திருந்தது. மன்னனும் பரிவாரங்களும் வந்த குதிரையின் குளம்பில் முல்லை கொடிகள் சுற்றிக்கொண்டன. இதனால் குதிரைகளால் நகர முடியவில்லை. முல்லைக் கொடிகளை வெட்டி அப்புறப்படுத்தும்படி மன்னன் உத்தரவிட்டான்.

    இதையடுத்து காவலர்கள் அந்தப் பணியில் ஈடுபட்டனர். மன்னனும் தன் வாளால் சில முல்லைக்கொடிகளை வெட்டினான். அப்போது ஓரிடத்தில் வாள் பட்டு, ரத்தம் பெருக்கெடுத்தது. இதனால் மன்னனும், மற்றவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

    ரத்தம் வந்த இடத்தில் முல்லைக் கொடிகளை அகற்றி பார்த்தபோது, அங்கே சிவலிங்கம் ஒன்று இருப்பதையும், அதில் இருந்து ரத்தம் கசிவதையும் கண்டு மன்னன் அதிர்ந்தான். ஏற்கனவே சரும நோயால் அவதிப்படும் நிலையில், சிவலிங்கத்தை வேறு வாளால் வெட்டி விட்டோமே என்று மன்னன் கலக்கம் கொண்டான்.

    இதற்கு பரிகாரமாக தன்னைத் தானே வாளால் வெட்டிக்கொள்ள முயன்றான், மன்னன். அப்போது சிவபெருமான் ரிஷப வாகனத்தில் அவனுக்கு காட்சி கொடுத்து அருளினார். மன்னனின் சரும நோயும் அகன்றது.

    இதையடுத்து அவ்விடத்தில் சுயம்பு லிங்கத்தைக் கொண்டே ஒரு ஆலயத்தை அமைக்க மன்னன் முடிவெடுத்து, அந்தப் பணியை சிறப்பாக முடித்தான். அதுவே சீர்காழி அருகே உள்ள தென்திருமுல்லைவாயில் முல்லைவனநாதர் திருக்கோவிலாகும்.

    சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த ஆலயத்தில், பல்வேறு மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஆலயத்தைப் பற்றி திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தேவாரம் பாடியிருக்கிறார்கள்.


    ஆலய அமைப்பு

    இந்த கோவில் முகப்பில் ஏற்கனவே இருந்த கல்ஹாரத்தின் மீது, சமீப குடமுழுக்கின்போது கட்டப்பட்ட ஒரு சிறிய நிலை கோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோபுரத்தில் சிவசக்தி சமேதராய் ரிஷபாரூடரும், அவரின் இருபுறங்களிலும் விநாயகர் மற்றும் வள்ளி - தெய்வானை உடனாய முருகப்பெருமானும் இருந்து அருள்பாலிக்கின்றனர்.

    ஆலயத்திற்குள் நுழைய கொடி மரத்து மண்டபம் உள்ளது. மிகப்பெரிய அந்த மண்டபத்துள் பலிபீடம், கொடிமரம் மற்றும் நந்தியம்பெருமான் இடம்பெற்றுள்ளனர். அதனை அடுத்து மகாமண்டபம், அதற்கு செல்லும் வழியின் அருகில் இருபுறமும் விநாயகரும், முருகரும் உள்ளனர்.

    மகாமண்டபத்தில் இருந்து அர்த்த மண்டபம் செல்லும் வழியில் துவாரபாலகர்கள் காவல்புரிய, அர்த்த மண்டபத்தை அடுத்த கருவறையில் மிகப்பெரிய திருமேனியினராய் முல்லைவன நாதர் சுயம்புலிங்கமாக அமர்ந்து அருள்பாலிக்கிறார். இவரின் மீது வாள் பட்ட அடையாளம் காணப்படுகிறது.

    சுவாமி சன்னிதிக்கு வடபுறத்தில் தனி சன்னிதியில், அணிகொண்ட கோதை அம்மன் அருள்கிறார். சுவாமியின் கருவறை கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, சண்டிகேசுவரரும், அம்பாள் கருவறை கோட்டத்தில் துர்க்கா பரமேஸ்வரியும் உள்ளனர்.

    பிரகாரச் சுற்றின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள எட்டு சன்னிதிகளில் முறையே விநாயகர், நால்வர், அப்பூதி அடிகள், பெருமாள், மதுரபாஷினி, தல வரலாற்று சிற்பம், வள்ளி தெய்வானை உடனாய முருகப்பெருமான், கஜலட்சுமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    பிரகார வடக்குச்சுற்றில் வசந்த மண்டபமும், கிணறும், ஈசானிய திக்கில் நவக்கிரகங்கள் மற்றும் பைரவரும், ஆலய வாசலின் உட்புறம் சூரியன் மற்றும் சந்திரனும் உள்ளனர்.

    இக்கோவிலின் கிணற்றில் கங்கை ஊற்றெடுப்பதாக நம்பப்படுகிறது. பஞ்சவனேசுவர ஆலயங்களில் இதுவும் ஒன்று. சிதம்பரம், திருச்சாய்க்காடு, திருவெண்காடு, பல்லவனேசுவரம் ஆகியவை மற்ற நான்கு தலங்கள் ஆகும்.

    சூரிய கிரகண நாள், அமாவாசை ஆகிய தினங்களில் இத்தல இறைவனை, முன்னோர்களை நினைத்து மோட்ச தீபம் ஏற்றி பஞ்சாட்சர மந்திரம் உச்சரித்து வழிபட்டால், செல்வச் செழிப்பும், நிம்மதியும் வந்துசேரும். அதோடு முக்தியும் கிடைக்கப்பெறும் என்பது ஐதீகம்.

    சிவாலயங்களுக்கு உரிய அனைத்து வார, பட்ச, மாதாந்திர பூஜைகளும் இங்கு நடைபெறுகின்றன. அதோடு சித்திரை புத்தாண்டு, வைகாசி விசாகம், ஆனி திருமஞ்சனம், ஆடிப்பூரம், விநாயகர் சதுர்த்தி, சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை சோமவாரம், திருக்கார்த்திகை, மார்கழி நடராஜர் வழிபாடு, தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற நிகழ்வுகளும் விமரிசையாக நடக்கின்றன.

    இரண்டு காலை பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயமானது, தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில், கிழக்கு கடற்கரை ஓரத்தில் தென்திருமுல்லைவாயில் இருக்கிறது.

    • மாவட்ட மாற்றுத்தி றனாளிகள் அலுவலக உதவியாளர் பரத்குமார் தலைமை வகித்தார்.
    • வருவாய் கோட்டாட்சி யரின் நேர்முக உதவியாளர் சண்முகம் வரவேற்று பேசினார்.

    சீர்காழி:

    சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி களு க்கான சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது.

    மாவட்ட மாற்றுத்தி றனாளிகள் அலுவலக உதவியாளர் பரத்குமார் தலைமை வகித்தார்.

    சீர்காழி குடிமை ப்பொருள் வழங்கல் தாசில்தார் சபிதாதேவி, சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார்கள் இந்துமதி, சாந்தி, வட்ட வழங்கல் தனி தாசில்தார் பாபு, மண்டல துணை தாசில்தார் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வருவாய் கோட்டாட்சி யரின் நேர்முக உதவியாளர் சண்முகம் வரவேற்று பேசினார். சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா மாற்றுத் திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவி தையல் எந்திரம், ஊன்றுகோல் ஆகியவற்றை வழங்கி மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்றுக்கொ ண்டார். இதில் டாக்டர் அருண்ராஜ்குமார், சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன், மேலாளர்கள் சங்கர், சுமதி கலந்து கொண்டனர்.

    • கடல் சாகச பயணத்தின் ஐந்தாம் நாளான நேற்று பூம்புகார் துறைமுகத்தில் இருந்து காரைக்கால் நோக்கிச் செல்லும் பயணம் தொடங்கி உள்ளது.
    • இந்தப் பயணத்தில் மூன்று கடற்படை அதிகாரிகளும் 4 தேசிய மாணவர் படை இணை அலுவலர்களும் பங்கேற்றுள்ளனர்

    சீர்காழி:

    ஜனவரி 2023 அன்று நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு நடத்தப்படும் போட்டிகளில் ஒன்றான கடல் சாகச பயணம் குறித்த போட்டிக்கான நிகழ்வாக சமுத்திரகமன் 2022 கடல் சாகச பயணம் புதுவையில் இருந்து காரைக்கால் சென்று மீண்டும் புதுவை திரும்புதல் நிகழ்வு அமைக்கப்பட்டுள்ளது.

    கடலூர் 5 தமிழ்நாடு தேசிய மாணவர் படை, கப்பல் படை பிரிவு மற்றும் 1 புதுவை தேசிய மாணவர் கப்பல் படை மாணவர்கள் இணைந்து நடத்தும் கடல் சாகச பயணம் கடந்த 6-ந் தேதி காலை புதுவையில் துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைக்க நடைபெற்றது. இதில் 25 மாணவிகள் உள்பட 60 தேசிய மாணவர் படை மாணவர்கள் கடல் சாகச பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த கடல் சாகச பயணத்தின் ஐந்தாம் நாளான நேற்று பூம்புகார் துறைமுகத்தில் இருந்து காரைக்கால் நோக்கிச் செல்லும் பயணம் தொடங்கி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா கொடியசைத்து இந்த கடல் சாகச பயணத்தைத் பூம்புகாரில் தொடங்கி வைத்தார்.

    இந்தக் குழுவினருடன் இந்தப் பயணத்தில் மூன்று கடற்படை அதிகாரிகளும் 4 தேசிய மாணவர் படை இணை அலுவலர்களும் பங்கேற்றுள்ளனர் இப்பய ணத்தில் மூன்று பாய்மரப் படகுகளில் மாணவர்கள் பயணிக்கின்றனர்.

    இந்த குழுவினர் தாங்கள் செல்லும் இடங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் ரத்த தான முகாம் மரம் நடுதல் தூய்மைப்பணி திட்டம் எனப் பல சமூக சேவை சார்ந்த நிகழ்வுகளை நடத்த உள்ளனர்.

    இதன் ஒரு பகுதியாக டி.பி.எம்.எல் கல்லூரியில் தேசிய மாணவர் படை சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது. அதை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா தொடக்கி வைத்தார். தேசிய மாணவர் படை மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ரத்த தானம் அளித்தனர்.

    சீர்காழி அருகே வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தை அனுப்பிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சீர்காழி:

    இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் தீவிரவாதிகள் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்துள்ள ஒரு பள்ளிவாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதுபற்றிய விபரம் வருமாறு:

    நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம், தைக்கால் பகுதியில் காதர்ரியா பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளிவாசலுக்கு கடந்த 23-ந்தேதி ஒரு கடிதம் வந்தது. அதனை தபால்காரர் அருகில் உள்ள பிரம்பு விற்பனை கடையில் கொடுத்து விட்டு சென்றுவிட்டார்.

    அதனை கடை உரிமையாளர் ஜமாத் தலைவர் முகமது சுல்தானிடம் நேற்று இரவு கொடுத்தார். அதனை பிரித்துப் பார்த்தபோது தைக்கால் பள்ளிவாசலில் இந்த மாதம் இறுதியில் வெடிகுண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கடிதத்தை அனுப்பியவர் முகவரியில் ஆச்சாள்புரத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பெயர் உள்ளது. மேலும் இந்த கடிதத்தில் 2 பேரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த கடிதத்தை ஜமாத் தலைவர் முகமது சுல்தான் கொள்ளிடம் போலீசில் ஒப்படைத்து புகார் செய்தார். இந்த மிரட்டல் கடிதம் வதந்தியை பரப்புவதற்காக எழுதப்பட்டதாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இந்த கடிதத்தை அனுப்பிய மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சீர்காழி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆர்.கே. நகர் 20 ரூபாய் டோக்கன் போல் சீர்காழியில் அ.தி.மு.க.வினர் வினியோகித்த பெட்ரோல் டோக்கன்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். #LSPolls #ADMK

    சீர்காழி:

    தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18-ந் தேதி பாரா ளுமன்ற தேர்தலும், 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

    இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டு 24 மணி நேர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களில் எடுத்து செல்லும் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகிறார்கள். மேலும் கட்சி தொண்டர்களுக்கு மது வாங்கி கொடுக்கிறார்களா? எனவும் கண்காணித்து வருகிறார்கள்.

    சென்னை ஆர்.கே. நகரில் நடந்த இடைத்தேர்தலின் போது வாக்காளர்களுக்கு 20 ரூபாய் டோக்கன் வழங்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் கட்சி தொண்டர்களுக்கு பெட்ரோல் போட டோக்கன் கொடுத்ததை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

    மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க வினர் சீர்காழியில் முதல்நாள் பிரச்சாரத்தை தொடங்கினர்.

    பிரச்சாரத்தை முன்னிட்டு அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளான பா.ம.க, தே.மு.தி.க, த.ம.கா, உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் 500-க்கும் மேற்பட்டோர் தங்களது இருசக்கர வாகனத்துடன் திரண்டிருந்தனர்.

    இதனிடையே சீர்காழி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் கட்சி கொடியுடன் இருசக்கர வாகனங்களில் தொண்டர்கள் பலர் பெட்ரோல் நிரப்பி கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த தேர்தல் பறக்கும் படை மண்டல துணை தாசில்தார் சுவாமி நாதன் தலைமையில் போலீசார் பெட்ரோல் பங்கில் திடீர் ஆய்வு நடத்தினர்.

    பறக்கும் படையினரை கண்ட கட்சியினர் பலர் அங்கிருந்து விரைந்து சென்றனர். தொடர்ந்து நடந்த ஆய்வின்போது கட்சி தொண்டர்கள் பலர் அ.தி.மு.க. பொறுப்பாளர் ஒருவரின் பெயருடன் கூடிய ரப்பர் ஸ்டாம்பு அச்சிட்ட டோக்கன் கொடுத்து ரூ.100 பெட்ரோல் நிரப்பியது தெரிய வந்தது.

    இதனை கண்ட தேர்தல் பறக்கும் படையினர் அதிர்ச்சி அடைந்து அடுத்த நிமிடம் பெட்ரோல் போட்ட பங்க் ஊழியர் கையில் வைத்திருந்த 100 டோக்கன்களையும், ரூ. 10 ஆயிரத்து 870 ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்து தாசில்தார் அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர்.

    இதுதொடர்பாக பெட்ரோல் பங்க் கணக்கரிடம் விசாரணை செய்து அறிக்கை பெற்றனர். அறிக்கை பெற்ற பின்பு இந்த பெட்ரோல் செலவு வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும் என தேர்தல் பறக்கும் படையினர் தெரிவித்தனர்.

    அ.தி.மு.க.வினர் மூலம் வழங்கப்பட்ட பெட்ரோல் டோக்கன் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  #LSPolls #ADMK

    சீர்காழியில் தொழிலதிபர்களை பிரபல ரவுடிகள் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சீர்காழி:

    சீர்காழி பகுதியை சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் ரமேஷ்பாபு கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிடாரி வடக்கு வீதியில் தனியார் பஸ் அதிபரை பார்ப்பதற்காக அவரது வீட்டுவாசலில் காரில் காத்துக்கொண்டிருந்த போது கூலிப்படையினர் நாட்டுவெடிகுண்டை வீசி அரிவாளால் வெட்டி அவரை கொலை செய்தனர்.

    இந்த வழக்கில் தொடர்புடைய சீர்காழியை அடுத்த புதுத்துறை ராமகிருஷ்ணன் மகன் பார்த்தீபன் (வயது 29). திருவாரூர் ஆதனூர் மண்டபம் பகுதியை சேர்ந்த கட்டபிரபு என்கிற அருண்பிரபு ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பார்த்தீபன், அருண்பிரபு ஆகியோர் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்நிலையில் சீர்காழி பகுதியில் உள்ள முக்கிய தொழில் அதிபர்களை மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார்.

    இதுகுறித்து சீர்காழி போலீசில் தொழிலதிபர்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் தொழிலதிபர்களுக்கு பணம் கேட்டு மிரட்டல் விடுத்தது அ.தி.மு.க பிரமுகர் கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த பார்த்தீபன் என தெரியவந்தது.

    அதனை தொடர்ந்து போலீசார் பார்த்தீபனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று இரவு தென்பாதி உப்பனார் பாலம் அருகே சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் போலீசார் வாகனதணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை கைகாட்டி தடுத்தனர்.

    அப்போது கார் நிற்காமல் சென்றுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை விரட்டி சென்று மடக்கினர். அப்போது காரில் பயங்கர ஆயுதங்களுடன் பிரபல ரவுடிகளான பார்த்தீபன் மற்றும் அருண்பிரபு ஆகியோர் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்து கார் மற்றும் அவர்களிடம் இருந்த பயங்கர ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சீர்காழியில் பிரியாணி கடையில் தகராறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி பிடாரி வடக்கு வீதியை சேர்ந்தவர் குமார். இவர் சீர்காழியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு மேல்பாதி ஆற்றங்கரை தெருவை சேர்ந்த கலியபெருமாள் (30) என்பவர் நேற்று இரவு சென்று பிரியாணி சாப்பிட்டு விட்டு பாதி தொகையை மட்டும் கொடுத்து விட்டு மீதி தொகையை பின்னர் தருவதாக கூறியுள்ளார்.

    இது தொடர்பாக குமாருக்கும், கலிய பெருமாளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து செத்த கோழியை வாங்கி குமார் பிரியாணி செய்வதாக வாடிக்கையாளர்களிடம் கலியபெருமாள் கூறியுள்ளார். இதுபற்றி குமார் சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் வழக்குப்பதிவு செய்து கலியபெருமாளை கைது செய்தார்.

    சீர்காழி அருகே பாக்கெட் சாராயம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி:

    நாகை எஸ்.பி. விஜயக்குமார் உத்தரவின் பேரில் திருவெண்காடு இன்ஸ்பெக்டர் வேலுதேவி, தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சீர்காழி அருகே ஆலங்காடு பகுதியில் வாகனசோதனை மேற்கொண்டனர். அப்போது காரைக்கால் பகுதியிலிருந்து வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் 200 லிட்டர் சாராயம் பாக்கெட்களில் அடைக்கப்பட்டு கடத்தி வருவது தெரிந்தது. இதையடுத்து சாராயத்தோடு காரையும் பறிமுதல் செய்து காரைக்கால் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 26) என்பவரை கைது செய்தனர்.

    இதேபோல் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் பெரம்பூர் அருகே வாகனதணிக்கை செய்தபோது மோட்டார் சைக்கிளில் 120லிட்டர் சாராயம் கடத்திவந்த மாங்கா.சண்முகம்(48) என்பவரை கைது செய்தனர்.

    ×