என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லட்டு பிரசாதம்"

    • 2024-ம் ஆண்டில் 2.55 கோடியாக இருந்த பக்தர்களின் வருகை, 2025ம் ஆண்டில் 2.70 கோடியாக அதிகரிப்பு.
    • ஒரே நாளில் மட்டும் 5.13 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

    2025-ஆம் ஆண்டில் திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு விற்பனை குறித்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2025-ஆம் ஆண்டில் மொத்தம் 13.52 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டுகளை விட மிகப்பெரிய வளர்ச்சியாகக் கருதப்படுகிறது.

    2024ம் ஆண்டில் மொத்த லட்டு விற்பனை 12.15 கோடியாகவும், 2025-ல் 13.52 கோடியாகவும் உள்ளது. இது, 1.37 கோடி அதாவது 10 சதவீதம் அதிகளவு விற்பனையாகும்.

    இதேபோல், 2024-ம் ஆண்டில் 2.55 கோடியாக இருந்த பக்தர்களின் வருகை, 2025ம் ஆண்டில் 2.70 கோடியாக அதிகரித்துள்ளது.

    கடந்த டிசம்பர் 27, 2025 அன்று ஒரே நாளில் மட்டும் 5.13 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத ஒரு நாள் சாதனையாகும்.

    பக்தர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய, ஒரு நாளைக்குச் சராசரியாக 4 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. விசேஷ நாட்களில் இது 8 முதல் 10 லட்சம் வரை அதிகரிக்கப்படுகிறது.

    2024-ல் எழுந்த நெய் கலப்பட சர்ச்சைகளுக்குப் பிறகு, 2025-ல் தரக் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. புதிய ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு, லட்டுகளின் தரம் உறுதி செய்யப்பட்டதால் பக்தர்களின் நம்பிக்கை மற்றும் வரவேற்பு அதிகரித்துள்ளதாகத் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    • முதலில் அனுமன் கோட்டைக்கு சென்று அனுமரை வழிபட வேண்டும்.
    • அதிகளவில் குரங்குகள் இருக்கின்றன.

    அயோத்தி நகரை ராம ராஜ்ஜியம் என்று சொன்னாலும் கூட, அங்கு கடவுள் அனுமனுக்கு தான் எப்போதும் முதல் மரியாதை. அயோத்தி ராமரை வழிபடுவதற்கு முன்பு அனைவரும் ஸ்ரீ அனுமன் கர்கி மந்திர் என்று அழைக்கப்படும் அனுமன் கோட்டைக்கு சென்று அனுமரை வழிபட வேண்டும். இந்த அனுமன் கோட்டை 76 படிக்கட்டுகளை கொண்டது.

    இந்த கோவிலில் அனுமனின் தாயார் அஞ்சைனயும், மடியில் இளம் அனுமனும் வீற்றிருக்கின்றனர். ராவணனை வென்று ராமர் அயோத்தி திரும்பிய போது, அனுமன் இங்கு தான் வசித்தார் என்ற அடிப்படையில் இந்த அனுமன் கோவில் கடந்த 10-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

    பொதுவாக கோவில்களுக்கு சென்றால் அங்கு பக்தர்களுக்கு பிரசாதம் தருவார்கள். ஆனால் அனுமன் கோட்டைக்கு செல்பவர்கள் அங்குள்ள கடைகளில் லட்டு பிரசாதத்தை வாங்கி கோவிலில் உள்ள அனுமனுக்கு கொண்டு போய் கொடுப்பார்கள்.

    அயோத்தியை பொறுத்தவரை அதிகளவில் குரங்குகள் இருக்கின்றன. இந்த குரங்குகளால் பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்படுகின்றன. இருப்பினும் அயோத்தி மக்கள் குரங்குகளை, அனுமன் வடிவில் பார்ப்பதால் அதனை விரட்டுவது இல்லை. மாறாக அயோத்தியை காக்கும் கடவுள் என்று அதனை வணங்குகின்றனர்.

    கடந்த 1998-ம் ஆண்டு கூட அயோத்தி அனுமன் கோவிலில் ஒரு வெடிகுண்டு வைக்கப்பட்டது. அப்போது அங்கிருந்த ஒரு குரங்கு வெடிகுண்டு வயரை கடித்து கீழே துப்பி விட்டது. அந்த வெடிகுண்டை கண்டுபிடிக்க உதவியதும், நகர மக்களை காப்பாற்றியதும் குரங்கு வடிவில் வந்த அனுமன்தான் என்று அயோத்தி மக்கள் நம்புகிறார்கள்.

    • 2 பெரிய லட்டுகள் விநாயகருக்கு படைக்கப்பட்டன.
    • லட்டுகள் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் கம்மம் நகர பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை யொட்டி ஏராளமான விநாயகர் சிலைகள் பரிதிஷ்டை செய்யப்பட்டிருந்தன.

    33-வது வார்டு காந்திநகர் பகுதியில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு 2 பெரிய லட்டுகள் விநாயகருக்கு படைக்கப்பட்டன. இந்த லட்டுகள் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இந்த ஏலத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் வியாபாரி ஷேக் லத்தீப் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். விநாயகர் லட்டுக்களை அவர்கள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.

    கடைசியில் 2 லட்டுகளையும் ரூ.20,016 மற்றும் 11,016-க்கு லத்தீப் குடும்பத்தினர் ஏலம் எடுத்தனர். லட்டு கிடைத்த மகிழ்ச்சியில் அவர்கள் உற்சாகமடைந்தனர்.

    விநாயகர் சிலை வைத்த விழா குழுவினர் லத்தீப் குடும்பத்தினரிடம் லட்டுக்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் நடந்த இந்த விநாயகர் லட்டு ஏலம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×