search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் லட்டு வழங்கி கிராம மக்கள் நூதன போராட்டம்
    X

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.

    நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் லட்டு வழங்கி கிராம மக்கள் நூதன போராட்டம்

    • கூட்டத்திற்கு கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
    • கலெக்டர் அலுவலகத்தில் கிராமிய கலைஞர்களும் மனு அளித்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

    சீவலப்பேரி அருகே உள்ள பாலாமடை இந்திரா நகரை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவனர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு ரேஷன் கார்டுகளுடன் வந்தனர்.

    அப்போது அவர்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் பால்பண்ணை கட்டி டத்தை இடிப்பது குறித்து அதே ஊரைச் சேர்ந்த இரு தரப்பினர் இடையே மோதல் இருந்து வருகிறது. இதற்கிடையே அப்பகுதியை சேர்ந்த சிலர், 25 குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர்.

    இவர்கள் பொது குழாயில் தண்ணீர் பிடிக்கவும், அங்குள்ள கடைகளில் பொருட்கள் வாங்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் போலீஸ் நிலையம், கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. ஓராண்டு ஆகிய நிலையில் இதுதொடர்பாக இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை கண்டித்து நாங்கள் எங்களது ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க வந்துள்ளோம் என்றனர்.

    அவர்களுடன் அதி காரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து இந்த விவ காரத்தில் நடவடிக்கை எடுக்காத போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து அவர்கள் பொதுமக்களுக்கு லட்டு வழங்கி நூதன முறையில் தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

    இதேபோல் கிராமிய கலைஞர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை, பாளை வட்டத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் கிராமிய கலையில் நையாண்டி மேளம், கரகாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு சொந்த வீடு இல்லை . எனவே அவர்களுக்கு இலவசமாக வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    Next Story
    ×