search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    மழையால் ஆட்டம் பாதிப்பு - 2ம் நாள் முடிவில் பாகிஸ்தான் 178/2
    X

    மழையால் ஆட்டம் பாதிப்பு - 2ம் நாள் முடிவில் பாகிஸ்தான் 178/2

    • முதலில் ஆடிய இலங்கை 166 ரன்களில் ஆல் அவுட்டானது.
    • 2ம் நாள் முடிவில் பாகிஸ்தான் 2 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்துள்ளது.

    கொழும்பு:

    இலங்கை, பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை அணி 166 ரன்னில் சுருண்டது. தனஞ்செய டி சில்வா ஓரளவு தாக்குப் பிடித்து 57 ரன்கள் எடுத்தார்.

    அதன்பின், பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் நாள் முடிவில் 28.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், இரண்டாவது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 38.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்து இருந்தது.

    அப்போது பலத்த மழை பெய்ததால் அத்துடன் ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது. அப்துல்லா ஷபீக் 87 ரன்னும், பாபர் அசாம் 28 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.

    Next Story
    ×