search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amit sha"

    தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சி தலைவர்களுக்கு டெல்லியில் நாளை பாஜக தலைவர் அமித் ஷா ஏற்பாடு செய்துள்ள விருந்தில் தமிழக முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதியை தவிர்த்து 542 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகளின்படி, மத்தியில் ஆளும் பாஜக 300 இடங்களுக்கு மேல் வெற்றிப்பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறப்படுகிறது.

    இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அரசியல் கட்சி தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித் ஷா நாளை இரவு 7 மணியளவில் டெல்லியில் உள்ள அசோகா ஓட்டலில் விருந்து அளிக்கிறார்.



    பிரதமர் மோடி மற்றும் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கட்சி தலைவர்கள் பங்கேற்கும் இந்த விருந்தில் கலந்துகொள்ள வருமாறு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், தேசிய முற்போக்கு திராவிட கழகம் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ், ஜி.கே.வாசன், டாக்டர் கிருஷ்ணசாமி, பெஸ்ட் ராமசாமி, நடிகர் சரத்குமார், டாக்டர் வே.தேவநாதன் யாதவ், ஜான் பாண்டியன், பூவை.ஜெகன் மூர்த்தி உள்ளிட்டவர்களுக்கு அமித்ஷா சார்பில் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
    உத்தரபிரதேசம் மாநிலத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரப்பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசிய பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, உத்தரபிரதேசத்தில் இனி பாகுபலிகளுக்கு இடமில்லை என கூறியுள்ளார். #AmitShah #LSElections2019
    லக்னோ:

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல், 3 கட்டங்களாக முடிவடந்த நிலையில், இன்று 4வது கட்டமாக நடைபெற்று வருகிறது. மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் மே 6,12,19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

    இதையடுத்து காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகளின் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று சித்ராகூட்டில் நடைபெற்ற பிரசாரப்பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    உத்தரபிரதேசம் மாநிலம் எந்த அளவிற்கு மாற்றம் கண்டுள்ளது என்பதை மெகா கூட்டணியால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. பாகுபலிகளுக்கு அவர்கள் சீட் கொடுத்துள்ளனர்.  தற்போது உத்தரபிரதேசத்தில் யோகியின் தலைமையில் நடைபெறும் ஆட்சியில், எந்த பாகுபலிகளுக்கும் இடமில்லை. ஏனென்றால், பாஜக அரசு அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.



    மெகா கூட்டணியின் தலைவர் ராகுல் காந்தி தான். நாட்டில் வெப்பம் கொஞ்சம் அதிகரித்தால் விடுப்பு எடுத்துக் கொண்டு வெளிநாடுகளுக்கு சென்று விடுகிறார். அவரது தாய் கூட ராகுல் எங்கு இருக்கிறார் என கண்டறிய இயலவில்லை.  நிரந்தரமாக மோடி தான் மீண்டும் பிரதமராக வேண்டும் என்பது எனக்கு மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்து மக்களின் ஒருமித்த குரலாகும்.  

    இவ்வாறு அவர் பேசினார்.  #AmitShah #LSElections2019

    வாரணாசியில் உள்ள மெகமூர்கஞ்ச் பகுதியில் பாஜக ஊடக மையத்தை திறந்து வைத்த பின்னர் பேசிய பாஜக தேசிய தலைவரான அமித் ஷா, பாஜக தனி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறியுள்ளார். #AmitSha #BJP
    வாரணாசி:

    குஜராத் மாநிலத்தில் நேற்று ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இம்மாநிலத்தின் அகமதாபாத் பகுதியில் தனது குடும்பத்தினருடன் பாஜக தேசிய தலைவரான அமித் ஷா வாக்களித்தார்.

    அதன் பின்னர் பிரதமர் மோடி போட்டியிடும்  வாரணாசி தொகுதியில் உள்ள மெகமூர்கஞ்ச் பகுதியில் பாஜகவுக்கான ஊடக மையம் மற்றும் பிரதமர் மோடிக்கான தேர்தல் அலுவலகம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

    இதையடுத்து செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் அமித் ஷா கூறியதாவது:

    நடந்து முடிந்த 3 கட்ட வாக்குப்பதிவினை காணும்போது, பாஜக மீண்டும் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என நம்புகிறேன். உத்தரபிரதேசத்தில் பகுஜன் - சமாஜ்வாடி கூட்டணியை விடவும், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். கடந்த 2014ம் ஆண்டு நடந்த தேர்தலில் இருந்த பாஜகவின் கணிப்பை விட தற்போது மிக தெளிவாக உள்ளது.



    வாரணாசி தொகுதியில் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளராக பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடவுள்ளார் என ஏற்கனவே அறிவித்திருந்தோம். வரும் 25ம் தேதி மாபெரும் ரோட்ஷோ நடைபெறும். அதன் பின்னர் பிரதமர் மோடி 26ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வார். வேட்புமனு தாக்கல் செய்யும் போது பீகார் முதல்வர் நிதீஷ் குமார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உடனிருப்பார்கள்.

    மேலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  ‘இந்து பயங்கரவாதி’,  ‘பகவா பயங்கரவாதி’ என பேசியுள்ளார். நிச்சயம் அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். ஒரு இந்து பயங்கரவாதியாக இருக்க முடியாது. இந்து மதத்தின் கலாச்சாரம் யாரையும் காயப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டதல்ல.

    இவ்வாறு அவர் கூறினார். #AmitSha #BJP 
     
    மேற்கு வங்காளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, அகதிகளுக்கு உறுதியாக இந்தியாவில் குடியுரிமை வழங்கப்படும் என கூறினார். #Amitshah #BJP
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி, 2 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்தது. மீதமுள்ள தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக வரும் ஏப்ரல் 23,29 மற்றும் மே 6,12,19 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

    இதையடுத்து பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் பிரசாரம், செய்தியாளர் சந்திப்பு ஆகியவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று கொல்கத்தாவில்  நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

    வங்காள தேசத்தில் இருந்து வரும் அகதிகள் இந்து, புத்தம், சீக்கியம், ஜெயின், கிறிஸ்துவர்கள் என எந்த மதத்தினை சேர்ந்தவராக இருந்தாலும் பாஜக சங்கல்ப பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளதைப்போல இந்திய நாட்டின் குடியுரிமை வழங்கப்படும்.



    முதலில் குடியுரிமை சட்ட மசோதாவில் திருத்தம் செய்யப்படும். பின்னர் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படும். அதன் பின்னர் இந்திய தேசிய குடிமக்கள்  பதிவு கொண்டு வரப்படும். எனவே அகதிகள் யாரும் கவலை கொள்ள தேவையில்லை.

    இந்தியாவில் சட்ட விரோதமாக ஊடுருவும் நபர்கள் தான் கவலை கொள்ள வேண்டும்.  இந்திய தேசிய குடிமக்கள்  பதிவு மேற்கு வங்காளத்திற்கு மட்டுமல்ல. நாட்டில் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Amitshah #BJP





    டெல்லியில் குர்ஜார் இனத்தின் தலைவர் மற்றும் அவரது மகன் ஆகியோர் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தனர். #Gurjarleader #BJP
    புது டெல்லி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும், முக்கிய அரசியல் தலைவர்களும் பிரசாரம், செய்தியாளர் சந்திப்பு போன்ற களப்பணிகளில்   ஈடுபட்டு வருகின்றனர்.  மேலும் பல்வேறு அமைப்பைச் சார்ந்தவர்களும் தேசிய கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.

    அந்த வகையில் குர்ஜார் இன அமைப்பின் தலைவரான கிரோரி சிங் பைன்ஸ்லா பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் ராஜஸ்தான் பாஜக தலைவர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார். அவரது மகன் விஜய் பைன்ஸ்லாவும் உடன் இணைந்தார்.



    இது குறித்து கிரோரி சிங் கூறுகையில், ‘காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளின் முதல் மந்திரிகளுடனும் பழகியுள்ளேன். இரு கட்சிகளின் கொள்கைகள் குறித்து நன்கு தெரிய வந்தது. அதன் பின்னர், பாஜக தலைவர்களிடமும், பிரதமர் மோடியிடம் அரிதான நல்ல குணங்கள் இருப்பதை உணர்ந்தேன். எனவே பாஜகவில் இணைந்துள்ளேன்’ என கூறினார்.

    இந்நிலையில் கிரோரி சிங் பைன்ஸ்லா இன்று  காலை பாஜக தலைவர் அமித் ஷாவை சந்தித்துப் பேசிய பின்னரே தற்போது தீர்க்கமான முடிவினை எடுத்துள்ளார் எனவும், ராஜஸ்தானில் 25 பாராளுமன்ற தொகுதிகளிலும் பாஜக வெல்லுவது உறுதி எனவும் ஜவடேகர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.  #Gurjarleader #BJP
    தமிழக பா.ஜ.க வாக்குச்சாவடி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசி வரும் அமித் ஷா, தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளார். #Amit sha
    சென்னை:

    பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா, 2019 பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இதன் முதற்கட்டமாக பா.ஜ.க சக்திகேந்திர பொறுப்பாளர்களை சந்தித்து வருகிறார். இதற்காக அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    அதன் ஒருபகுதியாக, தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமித் ஷா இன்று சென்னை வந்தடைந்தார்.

    சென்னை ஈஞ்சம்பாக்கம் வி.ஜி.பி. தங்க கடற்கரையில், பா.ஜ.க உயர்மட்ட நிர்வாகக்குழு மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் சுமார் 16 ஆயிரம் பேர் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசி வருகிறார்.

    வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க ஆட்சி அமைக்கும் என அமித் ஷா உணர்ச்சிப்பெருக்குடன் பேசிய போது, அங்கு திரண்டிருந்தவர்கள் தங்கள் கரங்களை மடித்து அமித் ஷாவுடன் தமிழகத்தில் ஆட்சியமைப்போம் என உறுதி அளித்தனர்.

    தனது பேச்சின் இடையே திருக்குறளை மேற்கோள் காட்டிய அமித் ஷா விருந்தினருக்காக யார் காத்திருக்கிறாரோ அவருக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என குறிப்பிட்டார். தமிழகத்துக்கு நான் வரும்போதெல்லாம் எதிர்ப்பாளர்கள் கிண்டலும் கேலியும் செய்தனர். எதிர்ப்பாளர்களே..! தமிழகத்தில் பா.ஜ.க எங்கே இருக்கிறது என்பதை வரும் 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நீங்கள் பார்ப்பீர்கள்.

    11 கோடி உறுப்பினர்களை பெற்று மிகப்பெரிய கட்சியாக பா.ஜ.க உள்ளது. பா.ஜ.க.வுக்கு 330-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து பொன் ராதாகிருஷ்ணனை தேர்வு செய்து அனுப்பிய மக்களுக்கு நன்றி.



    மத்திய அரசின் திட்டங்கள் மூலம் தமிழகத்துக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. தமிழத்துக்கு ஸ்மார் சிட்டி திட்டத்துக்கு 820 கோடி ரூபாயும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 1500 கோடி ரூபாயும் மத்திய அரசு வழங்கியுள்ளது. நீர்ப்பாசன திட்டம், சென்னை மெட்ரோ, மோனோ ரயில் திட்டங்களுக்கும் மத்திய அரசு நிதி அளித்துள்ளது.

    வறட்சிக்காக 1750 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியது. வர்தா புயல் நிவாரண நிதி தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் மத்திய அரசு தமிழகத்துக்கு 5 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாயை நிதியாக அளித்துள்ளது.

    மத்தியில் கடந்த 70 ஆண்டுகளாக எந்த அரசும் செய்யாத சாதனையை பா.ஜ.க செய்துள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வலிமை மிகுந்த கட்சியாக இருக்கும். 10 கோடி ஏழை மக்களின் ஆசையை பூர்த்தி செய்யும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

    பிரதமர் மோடிக்கு தெரிவித்து வரும் ஆதரவுக்காக தமிழகளுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனக்கூறிய அமித் ஷா தொடர்ந்து நிர்வாகிகள் மத்தியில் பேசி வருகிறார். அமித் ஷா இந்தியில் ஆற்றும் உரையை எச்.ராஜா தமிழில் மொழிப்பெயர்த்து வருகிறார். #Amit sha
    தமிழக பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். #Amitsha
    சென்னை :

    பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, 2019 பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இதன் முதல்கட்டமாக பாஜக சக்திகேந்திர பொறுப்பாளர்களை சந்தித்து வருகிறார். இதற்காக அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    அதன் ஒருபகுதியாக, தமிழக பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமித் ஷா தனி விமானத்தில் இன்று சென்னை வந்தடைந்தார். அவரை, சென்னை விமான நிலையத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர ராவ் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

    விமான நிலையத்தில் இருந்து வி.ஜி.பி. தங்க கடற்கரைக்கு செல்லும் அவர், பா.ஜ.க உயர்மட்ட நிர்வாகக்குழு கூட்டத்தில் பங்கேற்கிறார்.

    அதைத்தொடர்ந்து, பா.ஜ.க. பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் அமைப்பாளர்கள் கூட்டத்தில் மாலை 4 மணியளவில் பங்கேற்கும் அமித்ஷா, மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை கட்சியின் சக்தி மற்றும் மகா சக்தி கேந்திரா அமைப்பின் பொறுப்பாளர்களை சந்தித்து கலந்துரையாடுவார் என பா.ஜ.க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கர்நாடக மக்களின் எதிர்பார்ப்புகளை புதிதாக பதவியேற்றுள்ள எடியூரப்பா அரசு நிறைவேற்றும் என பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். #BSYeddyurappa #Amitsha
    புதுடெல்லி:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் திடீர் திருப்பமாக எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் வஜுபாய் வாலா நேற்று இரவு அழைப்பு விடுத்தார். ஆளுநரின் அழைப்பையடுத்து ராஜ்பவனில் இன்று காலை பதவியேற்பு விழா நடைபெற்றது. கர்நாடக மாநிலத்தின் 23-வது முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் வஜுபாய் வாலா பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

    இந்நிலையில், முதல்வராக பதவியேற்றுள்ள எடியூரப்பாவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக டுவிட்டரில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா பதிவிட்டுள்ளதாவது :-


    கர்நாடகா மாநில முதல்வராக பதவியேற்றுள்ள எடியூரப்பாவுக்கு எனது வாழ்த்துக்கள். எடியூரப்பா முதல்வரானதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் ஊழல் மற்றும் பிரிவினை அரசியலை எதிர்த்து வாக்களித்த அனைத்து கன்னடர்களுக்கும் வெற்றி கிடைத்துள்ளது. புதிதாக அமைந்துள்ள அரசு பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் படி கர்நாடகா மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். #BSYeddyurappa #Amitsha
    ×