என் மலர்
நீங்கள் தேடியது "Bill passed"
- மத்திய அரசின் நிதியில் இருந்து ஒதுக்கீட்டை இவ்வளவு குறைக்கும்போது, மாநிலங்களால் அதைச் சமாளிக்க முடியாது.
- இதன் பொருள், அந்தத் திட்டம் செயலிழந்துவிடும் என்பதே.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA) பெயரை மாற்றம் செய்து புதிய விதிகளை அறிமுகம் செய்யும் மசோதா நேற்று பாராளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறைவேதப்பட்டது. இது ஜனாதிபதி ஒப்புதலுக்கு பின் இது அமலுக்கு வரும்.
மசோதாவின்படி இந்தத் திட்டத்திற்கு விக்சித் பாரத் ரோஜ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமின்) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது சுருக்கமாக VB G RAM G என அழைக்கப்படுகிறது.
திட்டத்தின் பெயரிலிருந்து மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டதற்கும், புதிய திட்டத்தில் ஏழைகளுக்கு பாதகமாக உள்ள அம்சங்களுக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. நேற்று மசோதா தாக்கலின்போது எதிர்கட்சி எம்.பிக்கள் மசோதா நகலை கிழித்து எறிந்தனர். மேலும் நேற்று இரவு முழுவதும் பல எம்.பிக்கள் பாராளுமன்ற வளாகத்தில் தர்ணா நடத்தினர்.
இந்நிலையில் குளிர்கால கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்றும் பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய எதிர்காட்சி எம்.பிக்கள் பங்கேற்றுள்ளனர்.
இதன்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, "இந்த மசோதா மிகவும் ஏழ்மையான மக்களுக்குப் பெரும் தீங்கு விளைவிக்கப் போகிறது. ஏனென்றால், அசல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், அது வடிவமைக்கப்பட்ட விதத்தின்படி அதில் 90% நிதியை மத்திய அரசு வழங்கியது.
கிராமப்புறப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும், மிகவும் ஏழைகளாக இருந்து வேலைவாய்ப்பு பெறுவதில் சிரமப்பட்ட மக்களுக்கு மிகப்பெரிய ஆதரவாகவும் இருந்தது.
கடந்த 20 ஆண்டுகளாக, இது ஏழை மக்களுக்கு, குறிப்பாக எதுவுமற்றவர்களுக்கு உதவிய ஒரு நல்ல திட்டமாகச் செயல்பட்டு வருகிறது. இப்போது, இந்த மசோதாவின் புதிய வடிவத்தில், மத்திய அரசின் நிதியில் இருந்து ஒதுக்கீட்டை இவ்வளவு குறைக்கும்போது, மாநிலங்களால் அதைச் சமாளிக்க முடியாது. இதன் பொருள், அந்தத் திட்டம் செயலிழந்துவிடும், அது மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பதே" என்று தெரிவித்தார்.
- விக்சித் பாரத் ரோஜ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமின்) என்று பெயரிடப்பட்டுள்ளது.
- புதிய திட்டம் ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் அம்சங்களை கொண்டுள்ளதாகவும் கூறி மசோதா நகலை கிழித்தெறிந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA) பெயரை மாற்றம் செய்து புதிய விதிகளை அறிமுகம் செய்யும் புதிய மசோதா நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
மசோதாவின்படி இந்தத் திட்டத்திற்கு விக்சித் பாரத் ரோஜ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமின்) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது சுருக்கமாக VB G RAM G என அழைக்கப்படுகிறது. புதிய மசோதாவின் கீழ் வேலைவாய்ப்பு உறுதி 100 நாட்களில் இருந்து 125 நாட்களாக உயர்த்துதல் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதிய திட்டம் ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் அம்சங்களை கொண்டுள்ளதாகவும் கூறி மசோதா நகலை கிழித்தெறிந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் மசோதா நிறைவேறியது.
இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் பாராளுமன்றத்தில் அமர்ந்து பதாகைகளை ஏந்தியபடி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- மசோதா நகலை அமைச்சருக்கு எதிரே கிழித்து வீசி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
- மத்திய அரசின் பங்கு 60 சதவீதம் எஞ்சிய 40 சதவீதம் மாநில அரசின் பங்கு என மாறுகிறது.
பாராளுமன்ற மக்களவையில் இன்று 100 நாள் வேலை திட்டத்துக்கு மாற்றாக புதிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.
எதிர்க்கட்சி எம்.பி.க்களின் குற்றச்சாட்டிற்கு மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் விளக்கம் அளித்தார். எதிர்க்கட்சி எம்.பி.க்களின் எதிர்ப்புக்கு இடையே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
மக்களவையில் ஜி ராம் ஜி மசோதா நகலை அமைச்சருக்கு எதிரே கிழித்து வீசி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
அதன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் பெயர் விக்சித் பாரத்-ரோஜ்கர் வாழ்வாதார திட்ட உத்தரவாதம் என மாற்றம் செய்யப்படுகிறது.
விபி-ஜி ராம் ஜி திட்டத்தின்படி 100 நாள் வேலை உறுதித்திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்பட உள்ளது.புதிய ஜி ராம் ஜி திட்டத்தின் செலவில் மத்திய அரசின் பங்கு 60 சதவீதம் எஞ்சிய 40 சதவீதம் மாநில அரசின் பங்கு என மாறுகிறது.
மகாதாமா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட செலவில் 10 சதவீதம் மாநில அரசின் பங்காக இருந்த நிலையில் தற்போது 40 சதவீதமாக உயர்ந்துள்ளது.
முன்னதாக பத்திரங்கள் சந்தை குறியீடு மசோதாவை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்தினார்.
டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசு மிக மோசமாக இருக்கிறது. இதுகுறித்து மக்களவையில் இன்று பிற்பகலில் விவாதிக்கப்பட இருந்தது. தற்போது அதற்கான விவாதம் நடத்தப்படமாட்டாது என்று தெரிய வந்துள்ளது.
- அப்படி எனில், இது ஏன் முஸ்லிம்களுக்கு பொருந்தாது?
- இந்திய வாரிசுரிமைச் சட்டம் 1925, பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 ஆகியவை திருத்தப்படும்.
காலாவதியான 71 சட்டங்களை ரத்து செய்வது மற்றும் திருத்தம் செய்யக் கோரும் மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று நிறைவேற்றப்பட்டது.
'சட்ட ரத்து மற்றும் திருத்த மசோதா, 2025' மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தி, குரல் வாக்கெடுப்பு மூலம் அவையால் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, மக்களவை இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருந்தது.
மாநிலங்களவையில் மசோதா மீதான விவாதத்திற்கு பதிலளித்த மேக்வால், "சாமானிய மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கு நாங்கள் முன்னுரிமை அளித்து வருகிறோம்.
1925-ம் ஆண்டு இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ் அப்போதைய சென்னை, பம்பாய், கல்கத்தா மாகாணங்களில் இந்து, பவுத்தர், சீக்கியர், சமணர் அல்லது பார்சி இனத்தவர் உயில் எழுதினால், அது சட்டப்படி உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
ஆனால், இந்த விதி முஸ்லிம்களுக்குப் பொருந்தாது. சாதி, மதம் மற்றும் பாலின பாகுபாடுகள் அரசியலமைப்பில் தடுக்கப்பட்டுள்ளன. அப்படி எனில், இது ஏன் முஸ்லிம்களுக்கு பொருந்தாது? இந்த சீர்திருத்தங்கள் காலனித்துவ மனநிலையில் இருந்து விடுதலையை நோக்கிய ஒரு படி" என்று தெரிவித்தார்.
மேலும் இந்த மசோதா சட்டமானால், இந்திய டிராம்வேஸ் சட்டம், 1886, லெவி சர்க்கரை விலை சமநிலை நிதி சட்டம், 1976, மற்றும் பாரத் பெட்ரோல் கார்ப்பரேஷன் லிமிடெட் சட்டம், 1888 உள்ளிட்ட 71 சட்டங்கள் ரத்து செய்யப்படும்.
மேலும், பொது ஆணைகள் சட்டம் 1897, சிவில் நடைமுறைச் சட்டம் 1908, பதிவு செய்யப்பட்ட அஞ்சல் அமைப்பில் சொற்களஞ்சியத்தைப் புதுப்பித்தல் மற்றும் இந்திய வாரிசுரிமைச் சட்டம் 1925, பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 ஆகியவை திருத்தப்படும்.
- புதிய மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதற்கான சட்ட மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டன.
- மக்கள்தொகை, ஆண்டு வருமானத்தை தளர்த்தி திருத்தப்பட்ட மசோதா நிறைவேற்றம்.
தமிழகத்தில் புதிதாக திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை மாநகராட்சிகள் உதயமாகின்றன.
சட்டசபையில் புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சி, திருவண்ணாமலை நகராட்சி மற்றும் 18 ஊராட்சிகள், அடி அண்ணாமலையில் உள்ள பகுதிகள் ஆகிவற்றை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சி உதயமாகிறது.
இதேபோல், நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை ஒன்றிணைத்து நாமக்கல் மாநகராட்சி, காரைக்குடி நகராட்சி மற்றும் இரண்டு பேரூராட்சிகள், ஐந்து ஊராட்சிகளை ஒன்றிணைத்து காரைக்குடி மாநகராட்சி என மொத்தம் 4 புதிய மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதற்கான சட்ட மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில் மாநகராட்சியை தரம் உயர்த்த தடையாக இருந்த மக்கள்தொகை, ஆண்டு வருமானத்தை தளர்த்தி திருத்தப்பட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சி சட்டப்பிரிவில் மக்கள் தொகை 3 லட்சத்தில் இருந்து 2 லட்சமாகவும், ஆண்டு வருமானம் ரூ.30 கோடியில் இருந்து ரூ.20 கோடியாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
செக் (காசோலை) மோசடி வழக்குகள் நீண்ட காலம் இழுத்தடிக்காமல் விரைவில் முடிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக செலாவணி மசோதா 1881-ல் திருத்தம் செய்து புதிய மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா நேற்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
இதன் மூலம் செக் மோசடி வழக்குகளில் இருக்கும் தேவையற்ற சட்ட நடைமுறைகள் களையப்படுகின்றன. அத்துடன் சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில், இந்த மோசடியில் ஈடுபட்டவரிடம் இருந்து பாதிக்கப்பட்டவருக்கு 20 சதவீதத்துக்கு மிகாமல் நிவாரணம் பெற்று தரப்படும். அதேநேரம் குற்றம் சாட்டப்பட்டவர் இறுதியில் விடுவிக்கப்பட்டால், அவர் வழங்கிய நிவாரணம் வட்டியுடன் திரும்ப கிடைக்கவும் வசதி செய்யப்பட்டு உள்ளது.
முன்னதாக இந்த மசோதாவை தாக்கல் செய்த நிதித்துறை இணை மந்திரி சிவ் பிரசாத் சுக்லா, காசோலைகள் மற்றும் வங்கி நடைமுறைகள் மீதான நம்பகத்தன்மையை இந்த மசோதா காக்கும் என்று கூறினார். #LokSabha #FraudCase #BillPassed #tamilnews






