search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tablets"

    • ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு சேலத்திற்கு அருகாமையில் கிழக்கு தொடர்ச்சி மலை சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள மலைத்தளமாகும்.
    • ஏற்காடு மலைப்பாதை, வனப்பகுதியில் நேற்று இரவு காலாவதியான மாத்திரை, மருந்து உள்ளிட்ட கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டிவிட்டு சென்றுள்ளனர். இது குறித்து வனத்துறை பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.

    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு சேலத்திற்கு அருகாமையில் கிழக்கு தொடர்ச்சி மலை சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள மலைத்தளமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 4969 அடி உயர்த்தில் உள்ளது. இதன் பரப்பளவு 382.67 ச.கிமீ. ஆகும்.

    ஏற்காட்டில் அண்ணா பூங்கா, தோட்டக்கலைதுறை பண்ணை, தாவரவியல் பூங்கா, மணிப்பாறை, கிள்ளியூர் நீர்வீழ்ச்சி, லேடீஸ் சீட், ஜென்ஸ், சில்ரன்ஸ் சீட், சேர்வராயன் கோவில், பட்டு பண்ணை, ரோஜா தோட்டம், மான்பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன.

    இந்த சுற்றுலா தலங்களை குடும்பத்துடன் கண்டுகளிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் தினமும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    இந்த நிலையில் ஏற்காடு மலைப்பாதை, வனப்பகுதியில் நேற்று இரவு காலாவதியான மாத்திரை, மருந்து உள்ளிட்ட கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டிவிட்டு சென்றுள்ளனர். இது குறித்து வனத்துறை பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து வன விலங்குகள், கால்நடைகள் சாப்பிடும் முன் காலாவதியான மருத்துவ கழிவுகளை சேகரித்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தினார்கள். மேலும் காலாவதியான மருந்து, மாத்திரைகளின் நிறுவனம் தயாரிப்பு தேதியை ஆய்வு செய்தனர்.

    இந்த மருத்துவ கழிவுகள் எந்த வண்டியில் எடுத்து வரப்பட்டது? கழிவுகளை வனப்பகுதியில் கொட்டிய மர்ம நபர்கள் யார்? என பறக்கும் படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஒரு பகுதியாக, நலவழித்துறையினர் காரைக்கால் மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து வருகின்றனர்.
    • தண்ணீர் தேங்காமல் கொசு உற்பத்தி ஆகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் டெங்குவிற்கு இருவர் பலியானதை தொடர்ந்து, காரைக்கால் மாவட்டத்தில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் ஒழிப்பு நடவடிக்கையில் மாவட்ட நல வழித்துறை தீவிரமாக இறங்கி உள்ளது. அதன் ஒரு பகுதியாக, நலவழித்துறையினர் காரைக்கால் மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து வருகின்றனர்.இது குறித்து சுகாதாரத் துறை துணை இயக்குனர் கூறியதாவது;-

    காரைக்கால் மாவட்டத்தில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இன்று வரை 80 நபர்களுக்கு டெங்கு கண்டறிய ப்பட்டுள்ளது. இதில் சுமார் 32 நபர்கள் அண்டை மாநி லங்களை சேர்ந்தவர்கள். காரைக்காலை சேர்ந்தவர்கள் 50 நபர்கள். இந்த மாதம் இன்றுவரை 6 நபர்கள் காரைக்காலை சேர்ந்தவர்களுக்கும், அண்டை மாநிலத்தில் உள்ளவர்கள் 4 நபர்கள் என்று மொத்தம் 10 நபர்களுக்கு டெங்கு கண்டறியப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. மழைக்காலம் என்பதால் டெங்கு கொசு உற்பத்தியாகி டெங்கு காய்ச்சலை பரப்பும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் வீட்டையும் சுற்றுபுறத்தையும் சுத்தமாக வைத்துக் கொண்டு தண்ணீர் தேங்காமல் கொசு உற்பத்தி ஆகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் உள்ளோர் கண்டிப்பாக டெங்கு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சலை ஆரம்பத்தில் கண்டறிந்து விட்டால் குணமாக்கி விடலாம். காலம் கடத்துவதும் சுயமாக மாத்திரைகள் வாங்கி பயன்படுத்துவதும் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும். கொசு ஒழிப்பு பணியிலும் டெங்கு விழிப்புணர்வு பணியிலும் அரசுடன் சேர்ந்து பொதுமக்களும் முழு ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    • இலவச மருத்துவ காப்பீடு திட்டம் தொடர்பானவைகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
    • சுமார் 1000 பேருக்கு மேல் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா, மருதூர்தெற்கு ஊராட்சி ஒன்றியத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவதுறை சார்பில் வட்டார அளவிலான சுகாதார விழா மற்றும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு நாகை செல்வராஜ் எம்.பி. தலைமை தாங்கினார்.

    சுகாதாரத்துறை துணை இயக்குனர் விஜயகுமார், இணை இயக்குனர் அமுதா, கூட்டுறவு சங்க இயக்குனர் உதயம் முருகையன், ஒன்றிய குழு உறுப்பினர் மாலதி, ஊராட்சி மன்ற தலைவர்கள் மணிமேகலை, சிவகுரு பாண்டியன், பழனிச்சாமி மற்றும் வருவாய் துறை, சுகாதார துறையினர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக, முகாம் அரங்கில் காய்கறி பழங்கள் மற்றும் முதல்-அமைச்சரின் இலவச மருத்துவ காப்பீடு திட்டம் தொடர்பானவைகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

    முகாமில், சுமார் 1000 பேருக்கு மேல் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. மேலும், மேல் சிகிச்சைக்கான அறிவுரையும் வழங்கப்பட்டது. முடிவில் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தர்ராஜன் நன்றி கூறினார்.

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
    • இதில் அனைவருக்கும் மருந்து-மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ராஜபாளையம் அரவிந்த் ஹெர்பல்ஸ் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டரி சங்கம் இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தியது. ரோட்டரி சங்க தலைவர் ஜெயகண்ணன், செயலாளர் ராம்குமார், முத்துராமலிங்க குமார், உறுப்பினர்கள் லட்சுமணன், சுப்புராம், பொருளாளர் ஸ்ரீராம், கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் 200-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயனடைந்தனர். அனைவருக்கும் மருந்து மற்றும் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

    • பரிசோதனைகள் செய்யப்பட்டு கால்நடைகளுக்கு தாது உப்பு உள்ளிட்ட மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.
    • முகாமில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட கால்நடைகள் கலந்து கொண்டு பயனடைந்தன.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் அருகே உள்ள சருக்கை ஊராட்சி புதுக்குடி கிராமத்தில் நிலவள, நீர்வளத்திட்ட கால்நடை சிறப்பு முகாம் தஞ்சாவூர் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் தமிழ்ச்செல்வன் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது. முகாமை கும்பகோணம் கால்நடை கோட்ட்ட உதவி இயக்குனர் டாக்டர் கண்ணன் துவக்கி வைத்தார்.

    முகாமில், கணபதி அக்ரஹாரம் கால்நடை மருத்துவர் சங்கமித்ரா, திருவைகாவூர் கால்நடை உதவி மருத்துவர் அபிமதி மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு சினை பரிசோதனை, சினை ஆய்வு, குடல் புழுநீக்கம் மலடு நீக்கம் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு கால்நடைகளுக்கு தாது உப்பு உள்ளிட்ட மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

    முகாமில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 200 -க்கும் மேற்பட்ட கால்நடைகள் கலந்து கொண்டு பயனடைந்தன. முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சருக்கை ஊராட்சி மன்ற தலைவர் ஜெகநாதன், துணைத்தலைவர் காயத்திரி கேசவன், ஊராட்சி உறுப்பினர் ராதிகா பாலசுப்ரமணியன், ஊராட்சி செயலாளர் குணசேகரன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • பயன்பாடு, உட்கொள்ளும் முறை, பலன்கள் குறித்து விளக்கவுரையாற்றினாா்.
    • வட்டார சுகாதார ஆய்வாளா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    அவிநாசி:

    குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு குடற்புழு நீக்கும் மாத்திரைகள் (அல்பெண்டசோல்) குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி அவிநாசி அரசு கலைக்கல்லூரி அரசு மேல் நிலைப் பள்ளி உள்ளிட்டவற்றில் நடைபெற்றது.

    பொது சுகாதாரத்துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுகாதாரப்பணிகள் இயக்குநரின் நோ்முக உதவியாளா் செல்வராஜ் குடற்புழு நீக்கும் மாத்திரைகள்(அல்பெண்டசோல்) பயன்பாடு, உட்கொள்ளும் முறை, பலன்கள் குறித்து விளக்கவுரையாற்றினாா். இரு இடங்களில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட நலக் கல்வியாளா் ஜெயபிரகாஷ், வட்டார மருத்துவ அலுவலா் சக்திவேல், அரசு கல்லூரி முதல்வா் நளதம், அவிநாசி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா்கள் புனிதவதி(மகளிா்), ஆனந்தன்(ஆண்கள்), மருத்துவா்கள் ஜெயப்பிரியா, யசோதா, சண்முகப்பிரியா, கீதா, யாகசுந்தரம், வட்டார சுகாதார ஆய்வாளா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மேலும் செப்டம்பா் 16ந்தேதி வரை அவிநாசி வட்டாரத்தில் தொடக்கப்பள்ளி முதல் பிளஸ்2 வரை உள்ள 131 பள்ளிகளை சோ்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாத்திரைகள் மாணவா்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.

    • நகர்மன்ற தலைவர் புகழேந்தி தலைமை வகித்து முகாமை தொடக்கி வைத்தார்.
    • சக்கரை நோய் மற்றும் பொதுமருத்துவ பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கினார்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் நகராட்சி சார்பில் பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது. முகாமை நகர்மன்ற தலைவர் புகழேந்தி தலைமை வகித்து தொடக்கி வைத்தார். மருத்துவர் ராஜசேகர் தலைமையில் மருத்துவ குழுவினர், நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு இரத்த பரிசோதனை, சக்கரை நோய் மற்றும் பொதுமருத்துவ பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராகிம், துணைத்தலைவர் மங்களநாயகி, நகர்மன்ற உறுப்பினர்கள் உமா நடராஜன், மயில்வாகனம், அனிஸ் பாத்திமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    தமிழகத்தில் பன்றி காய்ச்சலை தடுக்க 5 லட்சம் மாத்திரைகள் வினியோகிக்கப்பட்டு உள்ளன என சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்தார். #Swineflu
    நெல்லை:

    நெல்லையில் நேற்று பொது சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடந்த டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் தடுப்பு பணிகளை சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி தொடங்கி வைத்து பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் டெங்கு, பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மாநிலம் முழுவதும் இதுவரை பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 17 பேர் இறந்துள்ளனர். 268 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.



    பன்றி காய்ச்சலை தடுக்க தமிழகம் முழுவதும் 5 லட்சம் மாத்திரைகள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது.

    தற்போது 20 லட்சம் மாத்திரைகள் கையிருப்பு உள்ளன. அரசு ஆஸ்பத்திரிகளை தவிர, தனியார் ஆஸ்பத்திரிகளிலும் பன்றி காய்ச்சல் தடுப்பு மாத்திரை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    டெங்கு காய்ச்சலுக்கு நில வேம்பு கசாயம் வழங்குவதை போல், பன்றி காய்ச்சலுக்கு இந்திய மருத்துவம் ஹோமியோபதி கழகம் அறிவுறுத்தலின் படி, கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    15 வகையான மூலிகை அடங்கிய இந்த குடிநீர் அரசு சித்த மருத்துவ ஆஸ்பத்திரி, அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Swineflu

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பயோமெட்ரிக் வருகை பதிவுக்காக அரசு பள்ளிகளுக்கு வழங்கிய டேப்லெட்களில் ஆபாச படங்கள் தோன்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #ChhattisgarhGovt
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் ‘டேப்-லெட்’ வழங்கப்பட்டு இருக்கிறது. அதில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வருகை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படும்.

    இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு இதுவரை 51 ஆயிரம் பள்ளிகளுக்கு ‘டேப்-லெட்’டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ‘டேப்-லெட்’டுகள் இணைய தள வசதியுடன் செயல்படும்.

    துர்க், சுர்குஜா, பாஸ்டர் ஆகிய மாவட்டங்களில் வழங்கிய ‘டேப்- லெட்’டுகளை ஓப்பன் செய்தவுடனேயே ஆபாச படங்கள் திரையில் தோன்றி ஓடுகின்றன.

    இதுபற்றி தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. எனவே, மறு உத்தரவு வரும் வரை இந்த ‘டேப்-லெட்’டுகளை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அரசு வழங்கிய ‘டேப்- லெட்’டில் எப்படி ஆபாச படங்கள் வந்தது? என்பது தெரியவில்லை.

    இது சம்பந்தமாக சத்தீஸ்கர் மாநில தகவல் தொழில்நுட்ப துறை திட்ட மேலாளர் நிலேஷ் சோனி கூறும் போது, குறிப்பிட்ட ‘டேப்-லெட்’டுகளில் யாராவது ஆபாச படம் பார்த்திருக்க வேண்டும். அல்லது டவுன் லோடு செய்திருக்க வேண்டும்.

    அதை பார்த்து கொண்டு இருக்கும் போதே சில விளம்பரங்கள் தோன்றும். அதை ‘கிளிக்’ செய்தால் இவ்வாறு ‘டேப்-லெட்’டுகளையே ஆக்கிரமித்து ஆபாச படம் தானாகவே தோன்ற ஆரம்பித்து விடும்.

    இப்படித்தான ‘டேப்- லெட்’டில் ஆபாச படம் வந்துள்ளது. இவற்றை நீக்குவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இதற்காக சென்னையில் இருந்து நிபுணர் குழு அழைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் சரி செய்தபிறகு பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என்று கூறினார்.
    ×