search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "expired medicine"

    • ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு சேலத்திற்கு அருகாமையில் கிழக்கு தொடர்ச்சி மலை சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள மலைத்தளமாகும்.
    • ஏற்காடு மலைப்பாதை, வனப்பகுதியில் நேற்று இரவு காலாவதியான மாத்திரை, மருந்து உள்ளிட்ட கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டிவிட்டு சென்றுள்ளனர். இது குறித்து வனத்துறை பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.

    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு சேலத்திற்கு அருகாமையில் கிழக்கு தொடர்ச்சி மலை சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள மலைத்தளமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 4969 அடி உயர்த்தில் உள்ளது. இதன் பரப்பளவு 382.67 ச.கிமீ. ஆகும்.

    ஏற்காட்டில் அண்ணா பூங்கா, தோட்டக்கலைதுறை பண்ணை, தாவரவியல் பூங்கா, மணிப்பாறை, கிள்ளியூர் நீர்வீழ்ச்சி, லேடீஸ் சீட், ஜென்ஸ், சில்ரன்ஸ் சீட், சேர்வராயன் கோவில், பட்டு பண்ணை, ரோஜா தோட்டம், மான்பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன.

    இந்த சுற்றுலா தலங்களை குடும்பத்துடன் கண்டுகளிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் தினமும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    இந்த நிலையில் ஏற்காடு மலைப்பாதை, வனப்பகுதியில் நேற்று இரவு காலாவதியான மாத்திரை, மருந்து உள்ளிட்ட கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டிவிட்டு சென்றுள்ளனர். இது குறித்து வனத்துறை பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து வன விலங்குகள், கால்நடைகள் சாப்பிடும் முன் காலாவதியான மருத்துவ கழிவுகளை சேகரித்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தினார்கள். மேலும் காலாவதியான மருந்து, மாத்திரைகளின் நிறுவனம் தயாரிப்பு தேதியை ஆய்வு செய்தனர்.

    இந்த மருத்துவ கழிவுகள் எந்த வண்டியில் எடுத்து வரப்பட்டது? கழிவுகளை வனப்பகுதியில் கொட்டிய மர்ம நபர்கள் யார்? என பறக்கும் படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரி குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.10 கோடி மதிப்பிலான காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் குடோனுக்கு சீல் வைத்தனர்.
    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த நாலூர் ஏரிக்கரையில் பழைய குடோன் உள்ளது.

    இங்கிருந்து கடந்த சில நாட்களாக திடீரென பூச்சிகொல்லி மருந்து வாசனை வீசியது. இதனால் அப்பகுதி மக்கள் மூச்சுவிட முடியாமலும், உடல் நல பாதிப்பாலும் அவதிப்பட்டனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் நந்தகுமாருக்கு தகவல் கொடுத்தனர். அவரது தலைமையில் அதிகாரிகள் குடோனில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

    அங்கு குவியல் குவியலாக ஏராளமான காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகள், உரங்கள் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. மேலும் அதன் மீது புதிதாக லேபிள் ஒட்டி மறு விற்பனைக்காக சந்தைக்கு அனுப்புவதும் தெரிய வந்தது.

    இதையடுத்து குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.10 கோடி மதிப்பிலான காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை பறிமுதல் செய்தனர். குடோனுக்கும் சீல் வைத்தனர்.

    இது தொடர்பாக குடோன் மேற்பார்வையாளர் ஜஸ்வந்த் சிங், காவலாளி ரஹீமின் ஆகியோரை மீஞ்சூர் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான குடோன் உரிமையாளர் ராகுல் சஞ்சயை தேடி வருகின்றனர்.

    ×