என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![பறிமுதல் செய்யப்பட்ட காலாவதியான பூச்சி மருந்துகளை படத்தில் காணலாம் பறிமுதல் செய்யப்பட்ட காலாவதியான பூச்சி மருந்துகளை படத்தில் காணலாம்](https://img.maalaimalar.com/Articles/2019/Feb/201902051511402459_Two-arrested-in-Ponneri-for-selling-expired-medicine_SECVPF.gif)
X
பறிமுதல் செய்யப்பட்ட காலாவதியான பூச்சி மருந்துகளை படத்தில் காணலாம்
காலாவதியான பூச்சிகொல்லி மருந்து விற்ற 2 பேர் கைது - குடோனுக்கு ‘சீல்’ வைப்பு
By
மாலை மலர்5 Feb 2019 9:41 AM GMT (Updated: 5 Feb 2019 9:41 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
பொன்னேரி குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.10 கோடி மதிப்பிலான காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் குடோனுக்கு சீல் வைத்தனர்.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த நாலூர் ஏரிக்கரையில் பழைய குடோன் உள்ளது.
இங்கிருந்து கடந்த சில நாட்களாக திடீரென பூச்சிகொல்லி மருந்து வாசனை வீசியது. இதனால் அப்பகுதி மக்கள் மூச்சுவிட முடியாமலும், உடல் நல பாதிப்பாலும் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் நந்தகுமாருக்கு தகவல் கொடுத்தனர். அவரது தலைமையில் அதிகாரிகள் குடோனில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
அங்கு குவியல் குவியலாக ஏராளமான காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகள், உரங்கள் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. மேலும் அதன் மீது புதிதாக லேபிள் ஒட்டி மறு விற்பனைக்காக சந்தைக்கு அனுப்புவதும் தெரிய வந்தது.
இதையடுத்து குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.10 கோடி மதிப்பிலான காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை பறிமுதல் செய்தனர். குடோனுக்கும் சீல் வைத்தனர்.
இது தொடர்பாக குடோன் மேற்பார்வையாளர் ஜஸ்வந்த் சிங், காவலாளி ரஹீமின் ஆகியோரை மீஞ்சூர் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான குடோன் உரிமையாளர் ராகுல் சஞ்சயை தேடி வருகின்றனர்.
பொன்னேரியை அடுத்த நாலூர் ஏரிக்கரையில் பழைய குடோன் உள்ளது.
இங்கிருந்து கடந்த சில நாட்களாக திடீரென பூச்சிகொல்லி மருந்து வாசனை வீசியது. இதனால் அப்பகுதி மக்கள் மூச்சுவிட முடியாமலும், உடல் நல பாதிப்பாலும் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் நந்தகுமாருக்கு தகவல் கொடுத்தனர். அவரது தலைமையில் அதிகாரிகள் குடோனில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
அங்கு குவியல் குவியலாக ஏராளமான காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகள், உரங்கள் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. மேலும் அதன் மீது புதிதாக லேபிள் ஒட்டி மறு விற்பனைக்காக சந்தைக்கு அனுப்புவதும் தெரிய வந்தது.
இதையடுத்து குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.10 கோடி மதிப்பிலான காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை பறிமுதல் செய்தனர். குடோனுக்கும் சீல் வைத்தனர்.
இது தொடர்பாக குடோன் மேற்பார்வையாளர் ஜஸ்வந்த் சிங், காவலாளி ரஹீமின் ஆகியோரை மீஞ்சூர் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான குடோன் உரிமையாளர் ராகுல் சஞ்சயை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)