search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவிநாசியில் குடற்புழு நீக்கும் மாத்திரைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி
    X

    கோப்புபடம். 

    அவிநாசியில் குடற்புழு நீக்கும் மாத்திரைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி

    • பயன்பாடு, உட்கொள்ளும் முறை, பலன்கள் குறித்து விளக்கவுரையாற்றினாா்.
    • வட்டார சுகாதார ஆய்வாளா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    அவிநாசி:

    குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு குடற்புழு நீக்கும் மாத்திரைகள் (அல்பெண்டசோல்) குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி அவிநாசி அரசு கலைக்கல்லூரி அரசு மேல் நிலைப் பள்ளி உள்ளிட்டவற்றில் நடைபெற்றது.

    பொது சுகாதாரத்துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுகாதாரப்பணிகள் இயக்குநரின் நோ்முக உதவியாளா் செல்வராஜ் குடற்புழு நீக்கும் மாத்திரைகள்(அல்பெண்டசோல்) பயன்பாடு, உட்கொள்ளும் முறை, பலன்கள் குறித்து விளக்கவுரையாற்றினாா். இரு இடங்களில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட நலக் கல்வியாளா் ஜெயபிரகாஷ், வட்டார மருத்துவ அலுவலா் சக்திவேல், அரசு கல்லூரி முதல்வா் நளதம், அவிநாசி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா்கள் புனிதவதி(மகளிா்), ஆனந்தன்(ஆண்கள்), மருத்துவா்கள் ஜெயப்பிரியா, யசோதா, சண்முகப்பிரியா, கீதா, யாகசுந்தரம், வட்டார சுகாதார ஆய்வாளா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மேலும் செப்டம்பா் 16ந்தேதி வரை அவிநாசி வட்டாரத்தில் தொடக்கப்பள்ளி முதல் பிளஸ்2 வரை உள்ள 131 பள்ளிகளை சோ்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாத்திரைகள் மாணவா்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.

    Next Story
    ×