search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
    X

    மருத்துவ முகாம் நடந்தது.

    வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்

    • இலவச மருத்துவ காப்பீடு திட்டம் தொடர்பானவைகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
    • சுமார் 1000 பேருக்கு மேல் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா, மருதூர்தெற்கு ஊராட்சி ஒன்றியத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவதுறை சார்பில் வட்டார அளவிலான சுகாதார விழா மற்றும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு நாகை செல்வராஜ் எம்.பி. தலைமை தாங்கினார்.

    சுகாதாரத்துறை துணை இயக்குனர் விஜயகுமார், இணை இயக்குனர் அமுதா, கூட்டுறவு சங்க இயக்குனர் உதயம் முருகையன், ஒன்றிய குழு உறுப்பினர் மாலதி, ஊராட்சி மன்ற தலைவர்கள் மணிமேகலை, சிவகுரு பாண்டியன், பழனிச்சாமி மற்றும் வருவாய் துறை, சுகாதார துறையினர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக, முகாம் அரங்கில் காய்கறி பழங்கள் மற்றும் முதல்-அமைச்சரின் இலவச மருத்துவ காப்பீடு திட்டம் தொடர்பானவைகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

    முகாமில், சுமார் 1000 பேருக்கு மேல் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. மேலும், மேல் சிகிச்சைக்கான அறிவுரையும் வழங்கப்பட்டது. முடிவில் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தர்ராஜன் நன்றி கூறினார்.

    Next Story
    ×