ஸ்ரீவில்லிபுத்தூரில் இலவச மருத்துவ முகாம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதில் அனைவருக்கும் மருந்து-மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் இலவச மருத்துவ முகாம்
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்

ராஜபாளையம் அரவிந்த் ஹெர்பல்ஸ் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டரி சங்கம் இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தியது. ரோட்டரி சங்க தலைவர் ஜெயகண்ணன், செயலாளர் ராம்குமார், முத்துராமலிங்க குமார், உறுப்பினர்கள் லட்சுமணன், சுப்புராம், பொருளாளர் ஸ்ரீராம், கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் 200-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயனடைந்தனர். அனைவருக்கும் மருந்து மற்றும் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com