என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Winter Session Of Parliament"

    • மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
    • பொதுப் பிரச்சினைகள் குறித்த ஜனநாயக விவாதங்களை அனுமதிக்காதது தான் நாடகம்

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கூட்டத்திற்கு முன் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் மோடி கூட்டத்தொடரை நாடகத்திற்கான மேடையாக மாற்றாதீர்கள் என்று எதிர்கட்சிகளை விமர்சித்தார்.

    இந்த கருத்து குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

    இந்நிலையில் மோடிக்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் எம்.பி.பிரியங்கா காந்தி, கூட்டத்தொடரின் போது SIR மற்றும் டெல்லி மாசுபாடு போன்ற முக்கியமான பிரச்சினைகளை எழுப்புவது எப்படி நாடகமாகும்.

    பொது நலன் சார்ந்த விஷயங்கள். இந்தப் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும். இந்தப் பிரச்சினைகள் குறித்து எந்த விவாதமும் இல்லாதபோது பாராளுமன்றத்தின் பயன் என்ன?

    கடந்த 11 ஆண்டுகளாக பாராளுமன்ற அமைப்பையே மத்திய அரசு சீர்குலைத்துள்ளது.

    கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் மட்டுமே குறைந்தது 12 மசோதாக்கள் அவசரமாக நிறைவேற்றப்பட்டன.

    சில மசோதாக்கள் வெறும் 15 நிமிடங்களிலும், சில மசோதாக்கள் எந்த விவாதமும் இல்லாமலும் நிறைவேற்றப்பட்டன.

    விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள், ஜிஎஸ்டி போன்ற மசோதாக்களை பாராளுமன்றத்தில் புல்டோசர் மூலம் நீங்கள் எப்படி கொண்டு வந்தீர்கள் என்பதை முழு நாடும் பார்த்தது.

    பணிச்சுமையால் SIR பணிகளில் ஈடுபடும் பிஎல்ஓக்கள் தொடர்ந்து பலியாகி வருகின்றனர்.

    அவையில் இவற்றை பற்றி பேசுவதையோ அல்லது பொதுப் பிரச்சினைகளை எழுப்புவதையோ நாடகம் என்று அழைப்பது சரியல்ல. பொதுப் பிரச்சினைகள் குறித்த ஜனநாயக விவாதங்களை அனுமதிக்காதது தான் நாடகம்" என்று தெரிவித்தார். இதற்கிடையே எதிர்கட்சிகள் அமளியால் பாராளுமன்றம் இன்று 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. 

    • டிசம்பர் 1ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருப்பப் பணிகளுக்கு மத்தியில் நாடாளுமன்றம் கூடுகிறது.

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் இந்த பரிந்துரைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நடைபெறும் இந்த குளிர்கால கூட்டத் தொடரில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கூட்டத் தொடரின்போது, ஜனநாயகத்தை வலுப்படுத்தும் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் தேவை என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருப்பப் பணிகளுக்கு மத்தியில் நாடாளுமன்றம் கூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாநிலங்களவைத் தலைவராக ஜெகதீப் தன்கர் பொறுப்பேற்றார்
    • ஜெகதீப் தன்கருக்கு, பிரதமர் மோடி பாராட்டு

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், மக்களவையில் மறைந்த  உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவை மதியம் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

    மாநிலங்களவை இன்று தொடங்கியதும் அதன் தலைவராக குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பதவியேற்றார். இதையடுத்து அவருக்கு பாராட்டு தெரிவித்து பிரதமர் மோடி மாநிலங்களவையில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: 


    இந்த அவையின் சார்பாகவும், தேசத்தின் சார்பாகவும் மாநிலங்களவைத் தலைவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல போராட்டங்களுக்கு மத்தியில் வாழ்க்கையில் முன்னேறி இந்த நிலையை அடைந்துள்ளீர்கள்.இது நாட்டில் உள்ள பலருக்கு உத்வேகம் அளிக்கும்.

    நமது மதிப்பிற்குரிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர். அவருக்கு முன், நமது முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சமூகத்தின் விளிம்பு நிலைப் பிரிவைச் சேர்ந்தவர், தற்போது நமது துணைக் குடியரசுத் தலைவர் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர். அவருக்கு சட்ட விஷயங்களில் அறிவு அதிகம்.

    நாடு 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் தருணத்தில் இந்தியா ஜி-20 அமைப்பின் தலைமை பதவியை ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த தருணத்திலும் பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இவ்வாறு பிரதமர் குறிப்பிட்டார்.

    • நாளைக்கான நிகழ்ச்சி நிரலிலும் இந்த 2 மசோதாக்கள் இல்லை.
    • சபா நாயகர் அனுமதியுடன் கடைசி நிமிடத்தில் மாற்றி அமைக்கவும் முடியும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மோடி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இது குறித்து ஆராய்ந்து மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கு வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலைக் குழுவை அமைத்தது. மார்ச் மாதத்தில் குழுவின் அறிக்கை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் அளிக்கப் பட்டது.

    ஒரே நேரத்தில் தேர்தல் என்பதை, பல கட்டங்களாக செயல்படுத்தலாம். அதற்காக பல சட்ட திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை மத்திய மந்திரி சபை ஏற்றுக்கொண்டது.

    அதன் அடிப்படையில் மசோதா தயாரிக்கப்பட்டது. மசோதாவுக்கு கடந்த 12-ந்தேதி மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

    இதையடுத்து அரசிய லமைப்பு சட்ட திருத்த மசோதா, 2024 மற்றும் யூனியன் பிரதேச சட்ட திருத்த மசோதா, 2024 ஆகிய இரண்டையும் சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பாராளுமன்றம் மக்களவையில் நாளை தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக பட்டியலிடப்பட்டு இருந்தது.

    3 சட்டப் பிரிவுகளில் திருத்தம், 12 புதிய சட்டப் பிரிவுகள் சேர்ப்பு மற்றும் யூனியன் பிரதேசங்களான புதுடெல்லி, ஜம்மு-காஷ்மீர், புதுச்சேரி ஆகியவற்றுக்கான சட்டங்களில் திருத்தம் என, மொத்தம் 18 சட்ட திருத்தங்கள் செய்ய வேண்டும்.

    இந்த நிலையில் பாராளுமன்ற லோக்சபாவில் நாளை தாக்கல் செய்வதற்காக அறிவிக்கப்பட்டு இருந்த ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நாளை பட்டியலிடப்பட்ட மானியங்களுக்கான துணை கோரிக்கைகளின் முதல் தொகுதியை அவையில் முதலில் நிறைவேற்றப்படுகிறது. இதற்கு பின்னர் இந்த வார இறுதியில் ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான சட்ட மசோதாக்கள் கொண்டு வரப்படலாம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

    பாராளுமன்ற செயலகத்தால் வெளியிடப்பட்ட திருத்தப் பட்டியலில் நாளைக்கான நிகழ்ச்சி நிரலிலும் இந்த 2 மசோதாக்கள் இல்லை. அதேநேரத்தில் சபா நாயகர் அனுமதியுடன் நிகழ்ச்சி நிரலை கடைசி நிமிடத்தில் மாற்றி அமைக்கவும் முடியும். பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 20-ந்தேதியுடன் முடிகிறது.

    • மக்களவையின் 20 அமர்வுகள், மாநிலங்களவையில் 19 அமர்வுகள் நடைபெற்றன
    • மூன்றாவது அமர்வில், விவாத நேரம் வெறும் 62 மணிநேரமாக சரிந்தது.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி தொடங்கியது. தொடக்கத்தில் அதானி விவகாரத்தாலும், இறுதியில் அம்பேத்கர் குறித்த அமித் ஷா பேச்சாலும் கூட்டத்தொடர் குழப்பத்துக்கு மத்தியில் நேற்று (டிசம்பர் 20) ஒத்திவைப்பு அறிவிப்போடு முடிவடைந்தது.

    மக்களவையின் 20 அமர்வுகள், மாநிலங்களவையில் 19 அமர்வுகள் நடைபெற்றன. மக்களவை அதன் திட்டமிடப்பட்ட நேரத்தில் 52 சதவீதமும், மாநிலங்களவை அதன் திட்டமிடப்பட்ட நேரத்தில் 39 சதவீதமும் மட்டுமே செயல்பட்டது என PRS அறிக்கை கூறுகிறது.

    முதல் வாரத்தில், இரு அவைகளும் திட்டமிட்ட நேரத்தில் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே செயல்பட்டன. கூட்டத் தொடர் முழுவதும் தொடர் இடையூறுகளால் 70 மணி நேரத்துக்கும் அதிகமான திட்டமிடப்பட்ட நேரத்தை பாராளுமன்றம் இழந்துள்ளது.

     

    முதல் அமர்வில் மக்களவை 5 மணி நேரம் 37 நிமிடங்களையும், இரண்டாவது அமர்வில் 1 மணி நேரம் 53 நிமிடங்களையும் இழந்தது. மூன்றாவது அமர்வு அமித் ஷா- அம்பேத்கர் சர்ச்சையால், தடங்கல்கள் காரணமாக 65 மணிநேரம் மற்றும் 15 நிமிடங்களை இழந்தது

    இடையூறுகள் விவாதங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தையும் கணிசமாக பாதித்தன. முதல் அமர்வில், மக்களவையில் 34.16 மணி நேரம் விவாதம் நடைபெற்றது.

    இரண்டாவது அமர்வின் போது இந்த நேரம் 115.21 மணிநேரமாக உயர்ந்தது. ஆனால் மூன்றாவது அமர்வில், விவாத நேரம் வெறும் 62 மணிநேரமாக சரிந்தது.

     இடையூறுகள் இருந்தபோதிலும், அதனால் வீணான நேரத்தை ஈடுசெய் எம்.பி.க்கள், 7 மணி நேரம் 33 நிமிடங்கள் கூடுதலாக வேலை செய்துள்ளனர். மூன்றாவது அமர்வின் போது, திட்டமிடப்பட்ட அலுவல்களை நிறைவு செய்யும் முயற்சியில் சபை நடவடிக்கைகள் 21.7 மணிநேரம் நீடித்தது.

    முதல் அமர்வில் மசோதாக்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. இரண்டாவது கூட்டத்தொடரில், அரசாங்கம் 12 மசோதாக்களை அறிமுகப்படுத்தியது, அவற்றில் நான்கு மக்களவையில் நிறைவேற்றப்பட்டன. மூன்றாவது அமர்வில் ஐந்து மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன, அவற்றில் நான்கு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டன.

     

    மூன்றாவது அமர்வில், கடலோர கப்பல் மசோதா வணிக கப்பல் மசோதா,  ஒரே நாடு ஒரே தேர்தல் (129 வது சட்டத்திருத்தம்) மசோதா யூனியன் பிரதேச சட்டங்கள் திருத்த மசோதா, 2024 ஒதுக்கீடு (எண் 3) மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

    வங்கிச் சட்டங்கள் திருத்த மசோதா, ரயில்வே திருத்த மசோதா,பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா, 2024 ஒதுக்கீடு (எண். 3) மசோதாஉள்ளிட்டவை அமர்வில் நிறைவேற்றப்பட்டன.

    ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அரசியலமைப்பை நாடு ஏற்றுக்கொண்ட 75 வது ஆண்டை குறிக்கும் விதமாக சிறப்பு உரைகளும் இரு அவைகளிலும் நடந்தன. 

    தெலுங்கானா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்களால் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 3-வது வாரத்தில் தாமதமாக கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Parliament
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் மாத இறுதியில் தொடங்கும்.

    ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது தேர்தல் பிரசாரத்தில் தலைவர்கள் ஈடுபட்டு இருப்பார்கள்.



    தேர்தல் பிரசாரத்துக்கு வசதியாக பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை தள்ளிப் போடுவது பற்றி டெல்லியில் இன்று பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சகத்தில் ஆலோசனை நடந்தது.

    இதில் நவம்பர் மாத இறுதிக்குப் பதிலாக டிசம்பர் மாதம் 3-வது வாரத்தில் பாராளுமன்ற கூட்டத்தொடரை கூட்டுவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

    இதுபற்றி மத்திய அமைச்சரவைக்கு பரிந்துரை செய்யப்பட்டு அதன் பிறகு குளிர்கால கூட்டம் தொடங்கும் தேதி அறிவிக்கப்படும். #Parliament

    ×