என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாராளுமன்ற குளிர்கால கூட்டம்"

    • மாநிலங்களவைத் தலைவராக ஜெகதீப் தன்கர் பொறுப்பேற்றார்
    • ஜெகதீப் தன்கருக்கு, பிரதமர் மோடி பாராட்டு

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், மக்களவையில் மறைந்த  உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவை மதியம் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

    மாநிலங்களவை இன்று தொடங்கியதும் அதன் தலைவராக குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பதவியேற்றார். இதையடுத்து அவருக்கு பாராட்டு தெரிவித்து பிரதமர் மோடி மாநிலங்களவையில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: 


    இந்த அவையின் சார்பாகவும், தேசத்தின் சார்பாகவும் மாநிலங்களவைத் தலைவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல போராட்டங்களுக்கு மத்தியில் வாழ்க்கையில் முன்னேறி இந்த நிலையை அடைந்துள்ளீர்கள்.இது நாட்டில் உள்ள பலருக்கு உத்வேகம் அளிக்கும்.

    நமது மதிப்பிற்குரிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர். அவருக்கு முன், நமது முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சமூகத்தின் விளிம்பு நிலைப் பிரிவைச் சேர்ந்தவர், தற்போது நமது துணைக் குடியரசுத் தலைவர் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர். அவருக்கு சட்ட விஷயங்களில் அறிவு அதிகம்.

    நாடு 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் தருணத்தில் இந்தியா ஜி-20 அமைப்பின் தலைமை பதவியை ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த தருணத்திலும் பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இவ்வாறு பிரதமர் குறிப்பிட்டார்.

    • பாராளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைக்க சில கட்சிகள் முயற்சிக்கின்றன.
    • மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்தான் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுகிறார்கள்.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று கூடியது. பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி பாராளுமன்ற வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    2025-ம் ஆண்டுக்காக நாடு தயாராகும் நிலையில் 2024-ம் ஆண்டின் கடைசி கூட்டம் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தொடர் பல வழிகளில் சிறப்பு வாய்ந்தது. நாளை அரசியலமைப்பின் 75-வது ஆண்டு கொண்டாடப்படுகிறது.

    பாராளுமன்றத்தை ஆக்கப்பூர்வமாக நடத்த எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை. பாராளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடக்கும் என்று நம்புகிறேன். அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக்கள் பலமுறை தோற்கடித்து இருக்கிறார்கள். பாராளுமன்றத்தில் மக்களுக்காக காங்கிரஸ் எப்போதும் பேசியது இல்லை.

    பாராளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைக்க சில கட்சிகள் முயற்சிக்கின்றன. மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்தான் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுகிறார்கள்.

    மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் தங்கள் சொந்த அரசியல் ஆதாயங்களுக்காக அமளியில் ஈடுபட்டு பாராளுமன்றத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சிக்கிறார்கள். இடையூறுகள் மற்றும் குழப்பங்களை ஏற்படுத்துகிறார்கள்.

    இதுபோன்ற ஒரு சிலரின் எண்ணம் வெற்றியடையவில்லை. நாட்டு மக்கள் அவர்களின் செயல்களை கவனித்து தகுந்த நேரத்தில் தண்டித்தனர். அவர்களின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து நேரம் வரும்போது நீதியை வழங்குகிறார்கள்.

    பாராளுமன்ற கூட்டத்தை சுமூகமாக நடத்த நான் பலமுறை எதிர்க்கட்சியினரை வற்புறுத்தி வருகிறேன். எதிர்க்கட்சி உறுப்பினர்களில் சிலர் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்கிறார்கள். அவை நடவடிக்கைகள் சுமூகமாக நடைபெற வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் பொதுமக்களால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டவர்கள் தான் தங்கள் சக உறுப்பினர்களின் வார்த்தைகளை புறக்க ணித்து அவர்களின் உணர்வு களையும் ஜனநாயகத்தையும் மதிக்கவில்லை.

    உலகமே இன்று இந்தியாவை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கிறது. பாராளுமன்ற நேரத்தை பயன்படுத்துவது, அவையில் நமது நடத்தையும் உலக அரங்கில் இந்தியா பெற்றுள்ள மரியாதையை வலுப்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டும்.

    இந்திய வாக்காளர்கள் ஜனநாயகத்திற்காக அர்ப்பணிப்புடன் உள்ளனர். அரசியலமைப்பின் மீதான அவர்களின் அர்ப்பணிப்பு காரணமாக பாராளுமன்ற அமைப்பு முறையின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

    பாராளுமன்றத்தில் அமர்ந்திருக்கும் நாம் அனைவரும் மக்களின் உணர்வுகளுக்கு ஏற்ப வாழ வேண்டும். இது காலத்தின் தேவை.

    ஒவ்வொரு விவாதத்தின் அம்சங்களும் ஆரோக்கியமாக அவையில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். வரவிருக்கும் தலை முறையினர் அதிலிருந்து உத்வேகம் பெறுவார்கள்.

    இந்த அமர்வு பயனுள்ள தாக அமையும் என்பது உண்மை. இந்த அமர்வை ஆர்வத்துடன் முன்னெடுத்து செல்ல மரியாதைக்குரிய எம்.பி.க்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசிய அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளி.
    • காங்கிரஸ் கட்சிதான் அம்பேத்கரை அவமதித்தது என பா.ஜ.க. பதிலுக்கு கடும் அமளியில் ஈடுபட்டதால் அவைகள் முடங்கின.

    பாராளுமன்ற மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது "அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்' என முழக்கமிடுவது இப்போது FASHION ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால் சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்" எனப் பேசினார்.

    இதனால் அரசியலமைப்பை உருவாக்கிய அம்பேத்கரை அவமதித்தாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பான நேற்று இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. அம்பேத்கர் குறித்து பேசியது தொடர்பாக அமித் ஷா நேற்று விளக்கம் அளித்தார்.

    இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு இரு அவைகள் கூடியதும் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோஷமிட்டனர். மேலும் அமித் ஷாவுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கினார். அதேவேளையில் காங்கிரஸ் கட்சி அம்பேத்கரை அவமதித்ததாக பா.ஜ.க. குற்றம்சாட்டியது. எதிர்க்கட்சிகளும், ஆளும் பா.ஜ.க-வும் பரஸ்பர குற்றம்சாட்டை முன்வைத்து இரு அவைகளிலும் அமளியில் ஈடுட்டன.

    இதனால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு மக்களவை கூடியதும் மீண்டும் அதே பிரச்சனை இரு பக்கத்தில் இருந்தும் எழுப்பப்பட்டது. இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதனால் மக்களவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

    மாநிலங்களவையில் ராகுல் காந்திக்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டு வரப்போவதாக பா.ஜ.க. எம்.பி. ஜே.பி. நட்டா தெரிவித்தார். அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதற்கு பா.ஜ.க. எம்.பி.க்களும் பதிலுக்கு அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவையில் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

    நாளை காலை 11 மணிக்கு இரு அவைகளும் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை பாராளுமன்ற வளாகத்தில் தன்னை பா.ஜ.க. எம்.பி.க்கள் தடுத்து நிறுத்த முயன்றதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். அதேவேளையில் ராகுல் காந்தி தள்ளிவிட்டதால் இரண்டு பா.ஜ.க. எம்.பி.க்கள் காயம் அடைந்ததாக பா.ஜ.க.-வினர் குற்றம்சாட்டினர்.

    ×