search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sudha"

    • பிரதமர் மோடி தனது எக்ஸ்தள பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • சமூக சேவை மற்றும் கல்வியில் சிறந்த பங்களிப்பை கொடுத்தவர்.

    புதுடெல்லி:

    இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மேல்சபை எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரை ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்து இருப்பதாக குறிப்பிட்டு தனது எக்ஸ் வலைதள பதிவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    மேலும் அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்தார். சமூக சேவை மற்றும் கல்வியில் சிறந்த பங்களிப்பை கொடுத்தவர் என்று புகழாரம் சூட்டி உள்ளார். அவரது பாராளுமன்ற பதவிக்காலம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகள்.

    மேல்சபை எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ள சுதா, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியார் ஆவார்.

    • ஜெயம், எதிரி, வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, உன்னாலே உன்னாலே, திருப்பதி, போன்ற பல படங்களில் நடித்தவர் சதா.
    • இவர் நேரலையின் போது கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

    மராட்டிய மாநிலத்தை சேர்ந்த நடிகை சதா 2002 ஆம் ஆண்டு ஜெயம் ரவி ஹீரோவாக அறிமுகமான 'ஜெயம்' படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். தெலுங்கில் ஜெயம் ரவி நடித்த கதாபாத்திரத்தில் நித்தின் நடித்திருந்த நிலையில், கதாநாயகியாக சதா தான் நடித்திருந்தார். மேலும் முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருதையும் பெற்றார்.

    'ஜெயம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து எதிரி, வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, உன்னாலே உன்னாலே, திருப்பதி, போன்ற பல படங்களில் அஜீத், விக்ரம், ஜெயம் ரவி, மாதவன் என தமிழில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், போன்ற மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.


    சதா

    சதா

    அடுத்தடுத்து திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்த சதா, திடீர் என பட தயாரிப்பிலும் களமிறங்கினார். தனியார் வங்கியில் கடன் வாங்கி கடந்த 2018 ஆம் ஆண்டு இவர், தயாரித்து நடித்திருந்த திரைப்படம் 'டார்ச் லைட்'. இதில் ஒரு பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தார். தன்னுடைய கணவனை காப்பாற்ற பாலியல் தொழிலாளியாக மாறும் ஒரு பெண், பின்பு ஏன் கணவரையே கொலை செய்ய துணிகிறாள் என்பதை பரபரப்பான காட்சிகளுடன் படமாக்கப்பட்டிருந்தது 'டார்ச் லைட்' திரைப்படம்.

    அந்தப்பட்ம் தோல்வியை சந்தித்தது. தொடர்ந்து அவருக்கு படவாய்ப்புகளும் இல்லாமல் போனது. நீண்ட இடைவெளிக்கு பின் எலி படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்தார். 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள சதா, தான் சம்பாதித்த பணத்தை வைத்து மும்பையில் ஓட்டல் பிசினஸ் ஒன்றை துவங்கினார். எர்த்லிங்ஸ் கபே என்கிற பெயரில் சுமார் 4 வருடங்களுக்கு மேல் வெற்றிகரமாக இந்த ஓட்டல் இயங்கி வருகிறது.


    சதா

    சதா

    சதாவும் ஒரு நாளைக்கு சுமார் 12 மணிநேரம் இந்த கபே-வில் தான் நேரம் செலவழித்து, தன்னுடைய வியாபாரத்தை பார்த்து வந்தார். ஆனால் தற்போது திடீர் என, 'எர்த்லிங்ஸ் கபே' இயங்கி வரும் இடத்தின் உரிமையாளர். அந்த இடத்தை காலி செய்ய சொல்வதாகவும், எவ்வளவோ இந்த சூழலை மாற்ற முயற்சித்த போதும் அது முடியாமல் போய் விட்டது என நேரலையில் பேட்டி கொடுத்த போது சதா கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

    மும்பை மாரத்தானில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த சுதா சிங், நிதேந்திர சிங் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறார்கள். #SudhaSingh #NitendraSingh
    மும்பை:

    மும்பை மாரத்தான் ஓட்டப்பந்தயம் மும்பையில் நேற்று நடந்தது. இதில் பெண்கள் பிரிவில் எத்தியோப்பியா வீராங்கனை ஒர்க்னேஷ் அலெமு 2 மணி 25 நிமிடம் 45 வினாடிகளில் பந்தய தூரத்தை எட்டி முதலிடத்தை பிடித்தார். அவருக்கு ரூ.32 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது. இந்த போட்டியில் பங்கேற்ற இந்திய முன்னணி வீராங்கனை சுதா சிங் 2 மணி 34 நிமிடம் 56 வினாடிகளில் இலக்கை அடைந்து ஒட்டுமொத்தத்தில் 8-வது இடத்தையும், இந்திய அளவில் முதலிடத்தையும் பெற்றார். தனிப்பட்ட முறையில் இது அவரது சிறந்த செயல்பாடாகும். இதன் மூலம் டோகாவில் செப்டம்பர் மாதம் நடக்கும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு சுதாசிங் தகுதி பெற்று இருக்கிறார்.

    ஆண்கள் பிரிவில் கென்யா வீரர் காஸ்மாஸ் லாகட் முதலிடம் (2 மணி 9 நிமிடம் 15 வினாடி) பிடித்தார். இந்திய அளவில் முதலாவதாக வந்த நிதேந்திர சிங் ரவாத் (2 மணி 15 நிமிடம் 52 வினாடி) உலக தடகள போட்டிக்கு தகுதி பெற்றார். #SudhaSingh #NitendraSingh
    ×