search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chatbot"

    • ஏஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் ஜெமினி சாட்பாட் கருவியை கூகுள் உருவாக்கியது
    • ஜெமினி எல்லா நேரங்களிலும் நம்பத்தகுந்த ஒரு கருவி அல்ல என்கிறது கூகுள்

    இணையதள தேடலில் உலகின் பெரும்பான்மையான பயனர்களின் தேடல் இயந்திரமாக (search engine) இருப்பது அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் கூகுள் (Google) நிறுவனத்தின் கூகுள் தேடல் இயந்திரம்.

    கூகுள், செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence) மையமாக கொண்டு இயங்கும் ஜெமினி (Gemini) எனும் சாட்பாட் கருவியை உருவாக்கியது.

    இந்நிலையில், ஒரு பயனர், இந்த சாட்பாட்டிடம், "பிரதமர் நரேந்திர மோடி ஒரு ஃபாசிசவாதியா?" என கேள்வி கேட்டதற்கு "ஃபாசிச கொள்கைகள் உடைய சில திட்டங்களை செயல்படுத்தியவராக பிரதமர் மோடி குற்றம் சாட்டப்பட்டுள்ளார்" என பதிலளித்தது.

    தொடர்ந்து அந்த சாட்பாட் அளித்த விரிவான பதிலில் பிரதமர் குறித்து ஆட்சேபகரமான பல கருத்துகள் இருந்தன.

    அதே சமயம், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் குறித்த கேள்விகளுக்கு ஜெமினி சரியான பதில் அளிக்கவில்லை.

    இதை தொடர்ந்து உரையாடலின் "ஸ்க்ரீன் ஷாட்டை" ஒரு பத்திரிகையாளர் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜிவ் சந்திரசேகருக்கு அனுப்பினார்.

    இது குறித்து அமைச்சர் கூகுள் நிறுவனத்திடம் ராஜிவ் சந்திரசேகர் விளக்கம் கேட்டிருந்தார்.

    செயற்கை நுண்ணறிவு சார்ந்த மென்பொருள் கருவிகளும் செயலிகளும் முழுமையாக நம்பத்தகுந்தவை இல்லை என்பதை காரணம் காட்டி கிரிமினல் குற்றச்சாட்டிலிருந்து தப்பித்து கொள்ள முடியாது என அவர் கூகுளை எச்சரித்திருந்தார்.


    இந்நிலையில், இந்த குறைபாடு குறித்து கூகுள் விளக்கம் அளித்துள்ளது.

    அதன் பதிலில் கூகுள் தெரிவித்திருப்பதாவது:

    ஜெமினி எல்லா நேரங்களிலும் நம்பத்தகுந்த ஒரு சாதனம் அல்ல.

    அதிலும், சமகால நாட்டு நடப்புகள், அரசியல் மற்றும் உடனடி செய்திகள் ஆகியவற்றில் அதன் திறன் இன்னும் முழுமை பெறவில்லை.

    இந்நிலையை மாற்ற எங்கள் வல்லுனர்கள் செயலாற்றி வருகின்றனர்.

    எந்த நாட்டின் சட்டதிட்டங்களையும் மீறாத வகையில் அதன் உருவாக்கத்தில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.

    இவ்வாறு அந்நிறுவனம் பதிலளித்துள்ளது.

    ஐ.ஆர்.சி.டி.சி. வலைதளம் பயன்படுத்துவோருக்கு எழும் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு இனி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் சாட்பாட் உடனுக்குடன் பதில் சொல்லும். #irctc #chatbot



    ஐ.ஆர்.சி.டி.சி. ஆன்லைன் சேவை ஆரம்பத்தில் இருந்ததை விட தற்சமயம் அதிகளவு மேம்பட்டு இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்திய ரயில்வேயின் ஆன்லைன் சேவை பலமுறை மாற்றம் செய்யப்பட்டு பல்வேறு புது வசதிகள் அவ்வப்போது சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

    சமீபத்தில் ஐ.ஆர்.சி.டி.சி. வலைதளம் மேம்படுத்தப்பட்டு புது இன்டர்ஃபேஸ் மற்றும் புது அம்சங்கள் சேர்க்கப்பட்டன. புது இன்டர்ஃபேஸ் மற்றும் அம்சங்களுடன் ஐ.ஆர்.சி.டி.சி. சேவையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த சாட்பாட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 



    ஆஸ்க்திஷா (AskDisha) என அழைக்கப்படும் இந்த சேவை ஐ.ஆர்.சி.டி.சி.யின் வாடிக்கையாளர் சேவை மைய உதவியாள் போன்று செயல்படும். ஆஸ்க்திஷா மூலம் பயனர்கள் எந்நேரமும் தங்களது சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை கேட்டு அதற்கு உடனடியாக பதில் பெற்றுக் கொள்ளலாம்.

    பொதுவாக ஐ.ஆர்.சி.டி.சி.யின் வாடிக்கையாளர் சேவை மையம் பற்றி அதிகளவு குற்றச்சாட்டுகள் இருந்து வந்த நிலையில், இந்த சாட்பாட் ஐ.ஆர்.சி.டி.சி. வாடிக்கையாளர் சேவை மைய அனுபவத்தை மேம்படுத்தும். வாடிக்கைாயளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஏ.ஐ. சாட்பாட் உடனடியாக பதில் அளிக்கிறது.



    தற்சமயம் குறுந்தகவல் வகையில் பதில் அளிக்கும் ஆஸ்க்திஷா சாட்பாட் விரைவில் குரல் வடிவில் பதில் அளிக்கும் என ஐ.ஆர்.சி.டி.சி. தெரிவித்து இருக்கிறது. ஆஸ்க்திஷா குரல் வடிவம் ஐ.ஆர்.சி.டி.சி. ஆன்ட்ராய்டு செயலியில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோரோவர் எனும் நிறுவனம் மூலம் இயங்கும் சாட்பாட், முடிந்த வரை பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது. இத்துடன் பயனர்கள் பொதுவாக கேட்க நினைத்து டைப் செய்ய துவங்கும் கேள்விகளை சரியாக பரிந்துரை செய்யும். பயனர்கள் வித்தியாசமான கேள்வியை கேட்கும் போது வாடிக்கையாளர் சேவை மைய மின்னஞ்சல் அல்லது தொடர்பு எண் வழங்கும்.

    ஐ.ஆர்.சி.டி.சி.யின் ஆஸ்க்திஷா சாட்பாட் சேவையை பயன்படுத்துவோர், தங்களின் சேவை அனுபவத்தை எமோஜி வடிவில் மதிப்பீடு செய்யவும் முடியும். #irctc #chatbot
    ×