என் மலர்
நீங்கள் தேடியது "FIDE World Cup Chess"
- கோவாவில் செஸ் உலகக் கோப்பை நடைபெற்றது.
- இந்தத் தொடரில் வெற்றியாளரை தீர்மானிக்க டைபிரேக்கர் நடந்தது.
கோவா:
11-வது உலகக் கோப்பை செஸ் தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் சீனாவின் வெய் யீ, உஸ்பெகிஸ்தானின் ஜவோகிர் சிந்தரோவ் இடையிலான இறுதிச்சுற்றின் முதலாவது ஆட்டம் சமனில் முடிந்தது. இதன் 2-வது ஆட்டமும் சமனில் முடிந்தது.
இந்நிலையில், வெற்றியாளரை தீர்மானிக்க டைபிரேக்கர் நடந்தது.
இறுதிப்போட்டியின் டை பிரேக்கரில் சீன வீரர் வெய் யீயை உஸ்பெகிஸ்தான் வீரர் ஜவோகிர் வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார்.
ஜவோகிர் சிந்தரோவ் தனது 19 வயதில் உலக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.
ரஷியாவின் ஆந்த்ரே இசிபென்கோ 2-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் யாகுபோவை வீழ்த்தி 3-வது இடம் பிடித்தார்.
- கோவாவில் செஸ் உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது.
- இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி தோல்வி அடைந்தார்.
பனாஜி:
கோவாவில் செஸ் உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது. அதன் ஐந்தாவது சுற்றுப் போட்டிகள் நடந்தன. முதல் சுற்றில் அர்ஜூன் ஏரிகைசி, அமெரிக்காவின் லெவான் அரோனியன் உடனான ஆட்டம் டிரா ஆனது. 2-வது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி, லெவான் அரோனியனை வீழ்த்தி காலிறுதிக்கு சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.
இந்நிலையில், காலிறுதியில் சீனாவின் வெய் யீ, இந்தியாவின் அர்ஜூன் எரிகைசியை 2.5 -1.5 என்ற புள்ளியில் வென்றார். இதன்மூலம் இந்தியாவின் எரிகைசி தொடரில் இருந்து வெளியேறினார்.
- கோவாவில் செஸ் உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது.
- இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி காலிறுதிக்கு முன்னேறினார்.
பனாஜி:
பிடே 11-வது உலகக் கோப்பை செஸ் தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் ஹரிகிருஷ்ணா, மெக்சிகோவின் ஜோஸ் மார்ட்டினஸ் ஆகியோர் இடையிலான 5-வது சுற்றின் 2 ஆட்டங்களும் டிரா ஆனது.
இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க ஆட்டம் டைபிரேக்கருக்கு நகர்ந்தது. அதிவேகமாக காய்களை நகர்த்தக்கூடிய டைபிரேக்கரிலும் முதல் 2 ஆட்டங்கள் டிராவில் முடிந்தது. இதனால் மேலும் இரு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதில் ஒரு ஆட்டத்தில் வெள்ளை நிற காய்களுடன் ஆடிய ஹரி கிருஷ்ணா 59-வது நகர்த்தலில் தோல்வியை தழுவினார்.
மற்றொரு ஆட்டத்தில் 30-வது நகர்த்தலில் டிராவுக்கு ஒப்புக்கொண்டார். இறுதியில் ஹரி கிருஷ்ணா 2.5 - 3.5 என்ற புள்ளிக்கணக்கில் தோற்று வெளியேறினார்.
இன்று தொடங்கும் கால் இறுதியின் முதல் ஆட்டத்தில் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி சீனாவின் வெய் யிடம் மோதுகிறார்.
- கோவாவில் செஸ் உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது.
- இந்தியாவின் அரி கிருஷ்ணா 5-வது சுற்றுக்கு முன்னேறினார்.
பனாஜி:
கோவாவில் செஸ் உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது. அதன் ஐந்தாவது சுற்றுப் போட்டிகள் நடந்தன.
நேற்று நடந்த முதல் சுற்றில் அர்ஜூன் ஏரிகைசி, அமெரிக்காவின் லெவான் அரோனியன் உடனான ஆட்டம் டிரா ஆனது.
இந்நிலையில், இன்று நடந்த 5-வது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி, லெவான் அரோனியனை வீழ்த்தி காலிறுதிக்கு சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.
- கோவாவில் செஸ் உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது.
- இந்தியாவின் பிரக்ஞானந்தா இந்த தடவை 4-வது சுற்றுடன் நடையை கட்டியிருக்கிறார்.
பனாஜி:
கோவாவில் செஸ் உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது. அதன் நான்காவது சுற்றுப் போட்டிகள் நேற்று நடந்தன.
இந்நிலையில், 4வது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி டைபிரேக்கரில் 2 ஆட்டங்களிலும் ஹங்கேரியின் பீட்டர் லெகோவை பதம் பார்த்து (3-1) காலிறுதிக்கு முந்தைய 5-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.
இதேபோல் இந்தியாவின் ஹரிகிருஷ்ணா சுவீடனின் நில்ஸ் கிரான்ட்லிசை வீழ்த்தினார்.
மற்றொரு இந்திய வீரர் பிரக்ஞானந்தா 4வது சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- கோவாவில் செஸ் உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது.
- மூன்றாவது சுற்றில் குகேஷ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
பனாஜி:
கோவாவில் செஸ் உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது. அதன் மூன்றாவது சுற்றுப் போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன.
இந்நிலையில், 3வது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் குகேஷும், ஜெர்மனியின் ஃபிரெடிரிக் ஸ்வேனும் மோதிக்கொண்டனர்..
இருவருக்குமான முதல் போட்டி டிராவில் முடிந்தது. இரண்டாவது போட்டியில் ஃபிரெடிரிக் ஸ்வேனே குகேஷை வீழ்த்தினார் . இதனால் மூன்றாவது சுற்றிலேயே குகேஷ் தொடரிலிருந்து வெளியேறினார்.
கடந்த ஆண்டு சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் குகேஷ் உலக சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஒவ்வொரு சுற்றும் 2 ஆட்டங்களாக கிளாசிக் முறையில் நடக்கும்.
- இதில் அதிக புள்ளிகள் எடுப்பவர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார்கள்.
கோவா:
11-வது 'பிடே' உலகக் கோப்பை செஸ் போட்டி கோவாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி நவம்பர் 27-ந்தேதி வரை நடக்கிறது. 2002-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவுக்கு திரும்பும் இந்த செஸ் திருவிழாவில் உலக சாம்பியன்ஷிப்பை வென்றவரான இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, விதித் குஜராத்தி, நிஹல் சரின், அரவிந்த் சிதம்பரம் மற்றும் அனிஷ் கிரி (நெதர்லாந்து), வெஸ்லி சோ, லெவோன் ஆரோனியன் ( இருவரும் அமெரிக்கா), வின்சென்ட் கீமர் (ஜெர்மனி), வெய் யி (சீனா), நோடிர்பெக் அப்துசத்தோரோவ் (உஸ்பெகிஸ்தான்) உள்பட 82 நாடுகளைச் சேர்ந்த 206 வீரர்கள் பங்கேற்கிறாார்கள். பெண்கள் உலக சாம்பியனான இந்தியாவின் திவ்யா தேஷ்முக் 'வைல்டு கார்டு' மூலம் அழைக்கப்பட்டுள்ளார். இந்த போட்டியில் விளையாடும் ஒரே வீராங்கனை இவர் தான்.
அதே சமயம் 'நம்பர் ஒன்' வீரரும், நடப்பு சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்சென் (நார்வே), பாபியானோ கருனா, ஹிகரு நகமுரா (அமெரிக்கா) போட்டிக்கு தகுதி பெற்றும் விளையாட மறுத்து விட்டனர்.
இந்த போட்டியில் டாப்-3 இடங்களை பிடிக்கும் வீரர்கள், உலக சாம்பியனுடன் மோதும் வீரரை தேர்வு செய்வதற்காக நடத்தப்படும் கேண்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு தகுதி பெறுவார்கள். அந்த வகையில் இந்த போட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது.
'நாக்-அவுட்' போட்டியான இது 8 ரவுண்டுகளாக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு சுற்றும் 2 ஆட்டங்களாக கிளாசிக் முறையில் நடக்கும். இதில் அதிக புள்ளிகள் எடுப்பவர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார்கள். சமநிலை நீடித்தால் டைபிரேக்கர் கடைபிடிக்கப்படும். ஆட்டத்தில் முதல் 40 நகர்த்தலுக்கு இருவருக்கும் தலா 90 நிமிடங்களும், எஞ்சிய போட்டிக்கு 30 நிமிடங்களும் வழங்கப்படும். அத்துடன் ஒவ்வொரு நகர்த்தலுக்கும் 30 வினாடி அதிகரிக்கப்படும்.
ஒவ்வொரு ரவுண்டும் 3 நாட்கள் நடைபெறும். 7-வது ரவுண்டின் போது அரைஇறுதி நடத்தப்படும். கடைசி ரவுண்டில் இறுதி ஆட்டம் மற்றும் 3-வது இடத்துக்கான ஆட்டம் அரங்கேறும்.
இதில் டாப்-50 இடங்களை பெற்றுள்ள வீரர்கள் நேரடியாக 2-வது சுற்றில் ஆடுவார்கள். 'பை' சலுகை மூலம் நேரடியாக 2-வது சுற்றில் களம் காணும் தமிழகத்தை சேர்ந்த குகேஷ், கேசிபெஸ் நோகர்பெக் (கஜகஸ்தான்), ராஜா ரித்விக் (இந்தியா) ஆகியோரில் ஒருவரை சந்திப்பார். 19 வயதான குகேஷ் கூறுகையில், 'உலகக் கோப்பை செஸ் போட்டியில் ஆட இருப்பது உற்சாகம் அளிக்கிறது. இந்தியாவில் எந்த இடத்தில் விளையாடினாலும் சிறப்பானது. கோவாவில் எனக்கு சில மறக்க முடியாத நினைவுகள் உண்டு. இங்கு ஜூனியர் போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். அதனால் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்' என்றார். குகேஷ், கடந்த முறை 2-வது இடத்தை பிடித்தவரான பிரக்ஞானந்தா, அனிஷ் கிரி, வின்சென்ட் கீமர், வெஸ்லி சோ ஆகியோரில் ஒருவர் பட்டம் வெல்ல பிரகாசமான வாய்ப்புள்ளது.
பரிசு எவ்வளவு?
போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.17½ கோடியாகும். இதில் வாகை சூடும் வீரருக்கு ரூ.1 கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் வீரருக்கு ரூ.75 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.
முதல் நாளில் தொடக்க விழா மட்டுமே நடத்தப்படும். முதல் சுற்று ஆட்டம் நவ.1 முதல் 3-ந்தேதி வரை பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி நடைபெறும்.






