என் மலர்tooltip icon

    விளையாட்டு

    உலகக் கோப்பை செஸ்: 5வது சுற்றுக்கு முன்னேறினார் அர்ஜூன் எரிகைசி
    X

    உலகக் கோப்பை செஸ்: 5வது சுற்றுக்கு முன்னேறினார் அர்ஜூன் எரிகைசி

    • கோவாவில் செஸ் உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது.
    • இந்தியாவின் பிரக்ஞானந்தா இந்த தடவை 4-வது சுற்றுடன் நடையை கட்டியிருக்கிறார்.

    பனாஜி:

    கோவாவில் செஸ் உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது. அதன் நான்காவது சுற்றுப் போட்டிகள் நேற்று நடந்தன.

    இந்நிலையில், 4வது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி டைபிரேக்கரில் 2 ஆட்டங்களிலும் ஹங்கேரியின் பீட்டர் லெகோவை பதம் பார்த்து (3-1) காலிறுதிக்கு முந்தைய 5-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.

    இதேபோல் இந்தியாவின் ஹரிகிருஷ்ணா சுவீடனின் நில்ஸ் கிரான்ட்லிசை வீழ்த்தினார்.

    மற்றொரு இந்திய வீரர் பிரக்ஞானந்தா 4வது சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    Next Story
    ×