என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்வதேச பீடே செஸ் போட்டி"

    • பிடே பெண்கள் கிராண்ட்பிரி செஸ் போட்டி மகாராஷ்டிராவின் புனேயில் நடந்தது.
    • இந்தியாவின் கோனேரு ஹம்பி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.

    மும்பை:

    பிடே பெண்கள் கிராண்ட்பிரி செஸ் போட்டி மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடந்து வந்தது. இதன் 9-வது மற்றும் கடைசி சுற்று போட்டி நேற்று நடந்தது.

    வெள்ளை நிற காய்களுடன் களம் இறங்கிய இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி, 84-வது நகர்த்தலில் நுர்குல் சலிமோவாவை (பல்கேரியா) தோற்கடித்தார். மற்ற இந்திய வீராங்கனைகள் வைஷாலி, ஹரிகா, திவ்யா தேஷ்முக் தங்களது ஆட்டங்களில் டிரா கண்டனர்.

    ஒரு தோல்வியும் சந்திக்காத ஆந்திராவைச் சேர்ந்த 38 வயதான கோனேரு ஹம்பி 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தைச் சொந்தமாக்கினார்.

    சீனாவின் ஜூ ஜினெரும் 7 புள்ளிகளுடன் அவருடன் சமநிலையில் இருந்தார். ஆனால் போட்டி விதிப்படி கருப்பு நிற காயுடன் (5 முறை) விளையாடுகையில் சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில் ஹம்பி மகுடம் சூடினார். ஜினெர் 2-வது இடம் பெற்றார்.

    இந்தியாவின் திவ்யா தேஷ்முக் 5½ புள்ளிகளுடன் 3-வது இடத்தைப் பிடித்தார். தமிழகத்தின் வைஷாலி 4 புள்ளிகளுடன் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

    • அமெரிக்கா, கென்யா, கொரியா நாட்டில் இருந்தும் வீரர்கள் கலந்து கொண்டனர்.
    • வெற்றி பெற்றவர்களுக்கு சீயோன்-ஆல்வி பள்ளி குழும தலைவர் என்.விஜயன் பரிசுகளை வழங்கினார்.

    மவுண்ட் செஸ் அகாடமி சார்பில் சீயோன்-ஆல்வின் கல்வி குழுமம் சார்பில் 2-வது சர்வதேச ஓபன் பீடே ரேட்டிங் செஸ் போட்டி சென்னையில் உள்ள சீயோன் பள்ளியில் நடைபெற்றது. இதில் 534 பேர் பங்கேற்றனர். அமெரிக்கா, கென்யா, கொரியா நாட்டில் இருந்தும் வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டி முடிவில் 6 வீரர்கள் 7 புள்ளிகளுடன் இருந்தனர். டை பிரேக்கர் முறையில் தமிழக வீரர் ஆயுஷ் ரவிக்குமார் சாம்பியன் பட்டம் பெற்றார்.

    அவருக்கு ரூ.30 ஆயிரம் பரிசு தொகை கிடைத்தது. கோகுல் கிருஷ்ணா, ராமகிருஷ்ணன், ஹரிகணேஷ், யஷ்வந்த், ஆதித்யா ஆகியோர் 2 முதல் 6-வது இடங்களை பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு சீயோன்-ஆல்வி பள்ளி குழும தலைவர் என்.விஜயன் பரிசுகளை வழங்கினார். மொத்தம் ரூ.3 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

    • சாம்பியன் பட்டம் பெற்ற இளம்பர்திக்கு ரூ.1 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது.
    • 2 முதல் 5-வது இடத்திற்கு முறையே ரூ. 75 ஆயிரம், ரூ. 60 ஆயிரம், ரூ. 50 ஆயிரம், ரூ. 40 ஆயிரம் கிடைத்தது.

    சென்னை:

    வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் சர்வதேச பீடே ரேடட் செஸ் போட்டி நடைபெற்றது. 8 சுற்றுகளை கொண்ட இந்தப் போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மராட்டியம், ஒடிசா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த 350 வீரர்கள் பங்கேற்றனர்.

    இதில் தமிழக வீரர் ஏ.ஆர்.இளம்பர்தி சாம்பியன் பட்டம் பெற்றார். செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த சர்வதேச மாஸ்டரான (ஐ.எம்) அவர் 7.5 புள்ளிகள் பெற்றார். மற்ற தமிழக வீரர்களான பாலசுப்பிரமணியன், பிரவீன்குமார், லட்சுமண், விக்னேஷ் ஆகியோர் தலா 7 புள்ளிகள் பெற்று 2 முதல் 5-வது இடங்களை பிடித்தனர். சாம்பியன் பட்டம் பெற்ற இளம்பர்திக்கு ரூ.1 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது. 2 முதல் 5-வது இடத்திற்கு முறையே ரூ. 75 ஆயிரம், ரூ. 60 ஆயிரம், ரூ. 50 ஆயிரம், ரூ. 40 ஆயிரம் கிடைத்தது.

    பரிசளிப்பு விழாவில் கிராண்ட் மாஸ்டரும், இந்திய பெண்கள் செஸ் அணி பயிற்சியாளருமான எம்.ஷியாம் சுந்தர், குருநானக் ககல்லூரி, பொதுச்செயலாளரும், தாளாளருமான மஞ்சித் சிங் நாயர் ஆகியோர் பங்கேற்றனர்.

    ×