என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Navy chief"

    • 1971 இந்திய-பாகிஸ்தான் போரில் ஆற்றிய பங்கிற்காக வீர சக்ரா விருது பெற்றவர் அருண் பிரகாஷ்
    • அருண் பிரகாஷ் 2004 முதல் 2006 வரை கடற்படைத் தளபதியாகப் பணியாற்றினார்

    பீகாரை தொடர்ந்து 2 ஆம் கட்டமாக தமிழ்நாடு, கேரளா, சத்தீஷ்கர், கோவா, குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய 9 மாநிலங்களிலும், அந்தமான் நிக்பார் தீவுகள், லட்சத்தீவுகள், புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களிலும் அக்டோபர் 27 முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடந்து வருகிறது.

    இந்நிலையில் தேர்தல் ஆணையம் தனித்தனியே வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் இருந்து சுமார் 6.5 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

    இதனால் 9 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 50.90 கோடியாக இருந்த நிலையில் அந்த எண்ணிக்கை தற்போது 44.40 கோடியாக குறைந்துள்ளது.

    இந்நிலையில் கோவாவின் SIR திருத்தத்தின் ஒரு பகுதியாக ஓய்வுபெற்ற முன்னாள் கடற்படை தலைவர் அருண் பிரகாஷ் நேரில் ஆஜராகி தனது அடையாளத்தை நிரூபிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கடந்த 12 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    கணினி பிழை காரணமாக முன்னாள் கடற்படை தலைவர் அருண் பிரகாஷுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைகள் குறித்து அருண் பிரகாஷ் அதிருப்தி தெரிவித்தார்.

    1971 இந்திய-பாகிஸ்தான் போரில் ஆற்றிய பங்கிற்காக வீர சக்ரா விருது பெற்ற அருண் பிரகாஷ், ஜூலை 31, 2004 முதல் அக்டோபர் 31, 2006 வரை கடற்படைத் தளபதியாகப் பணியாற்றினார். பின்னர், அவர் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு மற்றும் தேசிய கடல்சார் அறக்கட்டளை ஆகியவற்றில் பதவிகளை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பாலகோட் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானின் அட்டகாசம் குறைந்துள்ளது என்று இந்திய கடற்படை தளபதி சுனில் லன்பா தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14-ந்தேதி பாதுகாப்பு படை வீரர்கள் 74 வாகனங்களில் சென்றபோது தற்கொலை படை தீவிரவாதி வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி வெடிக்க செய்தான்.



    இதில் 40 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இது இந்தியாவை கொதிப்படைய செய்தது. இந்த தாக்குதலை பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு நடத்தியது தெரிய வந்தது.

    இதையடுத்து ஜெய்ஷ்- இ-முகமது தீவிரவாத அமைப்பு முகாம்களை அழிக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி பிப்ரவரி 26-ந்தேதி பாகிஸ்தானின் பாலகோட் பகுதிக்குள் இந்திய ராணுவ விமானங்கள் புகுந்து வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் தீவிரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டது. 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் பாலகோட் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானின் அட்டகாசம் குறைந்துள்ளது என்று இந்திய கடற்படை தளபதி சுனில் லன்பா தெரிவித்துள்ளார்.

    இந்திய ராணுவத்தின் பாலகோட் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

    பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று பாகிஸ்தான் கூறி வருகிறது. தீவிரவாத தாக்குதலுக்கு கொடுத்த பதிலடியால் புதிய அணுகுமுறை உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இதனால் எங்களது விரோதியின் நடவடிக்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

    பாலகோட் தாக்குதல் மூலம் பாகிஸ்தானுக்கு ஒரு தெளிவான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்தியா தனக்கு தானே விதித்துள்ள கட்டுப்பாட்டை எந்த ஆபத்து வந்தாலும் மீறுவதற்கு தயாராக உள்ளது என்று தெரிவித்தது. மேலும் வட அரேபிய கடலில் இந்தியாவின் போர்க்கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள், பாகிஸ்தானின் அடாவடியை முறியடித்து நிறுத்தப்பட்டது. இதற்கு நல்ல பலன் அளித்தது. இதனால் பாகிஸ்தானின் அட்டகாசம் குறைந்துள்ளது.

    சீனா கடற்படை இந்திய பெருங்கடலில் தனது கப்பல்களை நிலை நிறுத்தி உள்ளது. நமது கடற்படையும் தற்போது போதுமான பலத்துடன் உள்ளது.

    ஆனால் சீன கடற்படை தனது பலத்தை அதிகரித்து அதிக முதலீடுகளை செய்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 80 போர்க்கப்பல்கள், மற்றும் நீர் மூழ்கி கப்பல்கள் கடல் பகுதியில் நிலை நிறுத்தி உள்ளது. தற்போது சீன கடற்படை, அமெரிக்க கடற்படைக்கே சவாலாக விளங்குகிறது.

    நாங்கள் தனி கடற்படையுடன் சமன்படுத்த முயற்சிக்கவில்லை. ஆனால் இயற்கையாகவே ஒவ்வொரு ஆண்டும் அதிக கப்பல்களை கையாள விரும்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    இந்திய கடற்படையின் தளபதியாக கரம்பிர் சிங் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கை துணை தளபதி பிமல் வர்மா இன்று திரும்பப் பெற்றார். #IndianNavy #KarambirSingh #BimalVerma #ViceAdmiral #Navychief
    புதுடெல்லி:

    உலகில் சிறப்பு வாய்ந்த கடற்படைகளில் ஒன்றாக இடம்பெற்றுள்ள இந்திய கடற்படை தளபதி சுனில் லான்பா-வின் பதவிக்காலம் 31-5-2019 அன்று முடிவடைகிறது. இந்நிலையில், புதிய தளபதியாக கரம்பிர் சிங் நியமிக்கப்படுவதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

    இந்த நியமனத்தை எதிர்த்து ஆயுதப்படைகள் நிர்வாக தீர்ப்பாயத்தில் கடற்படை துணை தளபதி பிமல் வர்மா வழக்கு தொடர்ந்துள்ளார்.

    கரம்பிர் சிங்


    பணிமூப்பு அடிப்படையில் தளபதி பதவிக்கு தனது பெயரை பரிசீலிக்காமல் கரம்பிர் சிங்-கை நியமனம் செய்தது தவறு என தனது முறையீட்டில் பிமல் வர்மா குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கிடையில், பிமல் வர்மா தனது முறையீட்டை துறைசார்ந்த குறைகேட்பு முகாம் மூலம் தீர்த்துக் கொண்டிருக்க வேண்டும் என கடற்படை உயரதிகாரிகள் கருத்து தெரிவித்தனர். இதனையேற்று, கடற்படையின் தளபதியாக  கரம்பிர் சிங் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கை துணை தளபதி பிமல் வர்மா இன்று திரும்பப் பெற்றார். #IndianNavy #KarambirSingh #BimalVerma #ViceAdmiral  #Navychief
    ×