என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஆங்கிலம் குறித்து மத்திய மந்திரி அமித்ஷாவின் கருத்து இந்தியையும், வடமொழியையும் திணிப்பதற்கான வழிதான்- அமைச்சர்
- மொழிக் கொள்கையில் பல்வேறு மாநிலங்கள் இருமொழி கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளன.
- கீழடி தொடர்பான ஆராய்ச்சி அறிக்கையை மத்திய அரசு ஏற்காதது கண்டிக்கத்தக்கது.
திருவிடைமருதூர்:
கும்பகோணம் அருகே ஆடுதுறையில் செய்தியாளர்களை அமைச்சர் கோவி.செழியன் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆங்கிலம் குறித்து மத்திய மந்திரி அமித்ஷாவின் கருத்து இந்தியையும், வட மொழியையும் திணிப்பதற்கான வழிதான்.
அவரது கருத்தை என்றும் தமிழகம் ஏற்காது. மொழிக் கொள்கையில் பல்வேறு மாநிலங்கள் இருமொழி கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளன.
ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு கூட மாநில மொழி பிரச்சினையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டியாக இருக்கிறார் என கூறியுள்ளார்.
கீழடி தொடர்பான ஆராய்ச்சி அறிக்கையை மத்திய அரசு ஏற்காதது கண்டிக்கத்தக்கது.
5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை தமிழர்கள் கண்டுபிடித்து பயன்படுத்தினர் என்பது உலகினரை அதிசயித்து பார்க்க வைத்து உள்ளது.
இந்தியாவில் பல்வேறு தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு தான்.
இவ்வாறு அவர் கூறினார்.






