என் மலர்
நீங்கள் தேடியது "rbi"
- புதிய நடைமுறையை மத்திய ரிசர்வ் வங்கி உடனடியாக கைவிட வேண்டும்.
- நகையின் மதிப்பில் முன்பை விட 5 சதவீதம் குறைத்து, 75 சதவீதம் தான் கடன் வழங்கப்படும்
சென்னை:
அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-
தங்க நகை அடமானம் வைப்பதில் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி இருக்கிறது ரிசர்வ் வங்கி.
ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களே பெரும் பாலும் தங்களது அவசர தேவைகளுக்கு தங்க நகைக் கடன் போன்றவற்றைச் சார்ந்திருக்கும் சூழலில் அதன் மீது மத்திய ரிசர்வ் வங்கி விதித்திருக்கும் புதிய விதிமுறைகள் சாமானிய மக்களை பாதிக்கும் செயலாக அமைந்துள்ளது.
குறிப்பாக நகையின் மதிப்பில் முன்பை விட 5 சதவீதம் குறைத்து, 75 சதவீதம் தான் கடன் வழங்கப்படும் என்ற புதிய விதிமுறை அவசர தேவைக்காக வங்கிகளை நாடிவரும் மக்களை நேரடியாகப் பாதிக்கும் முடிவாகும்.
அவசரம் என்று வரும் மக்களை அத்தியாவசியமற்ற விவரங்களையும், ஆதாரங்களையும் கேட்டு அலைக்கழிக்கும் இந்த புதிய நடைமுறையை மத்திய ரிசர்வ் வங்கி உடனடியாக கைவிட வேண்டும்.
அடமானம் வைத்த நகையை முழுவதுமாக மீட்ட பிறகே மீண்டும் அந்த நகையை அடமானம் வைக்க முடியும் என்ற புதிய விதி முறையைக் கடந்த மாதம் ஆர்.பி.ஐ. கொண்டு வந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், தற்போது மேலும் புதிய 9 விதிமுறைகள் என்ற பெயரில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது, நேரடியாக ஏழை எளிய மக்களைப் பாதிக்கும் செயலாகும். ஆர்.பி.ஐ. உடனே இத்தகைய கட்டுப்பாடுகளைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நாட்டின் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
- விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை உள்ளடக்கிய ரகசிய பணியை மேற்கொண்டனர்.
புதுடெல்லி:
லண்டனில் உள்ள பாங்க் ஆப் இங்கிலாந்தின் பெட்டகத்தில் இருந்து மேலும் 102 டன் தங்கம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த தகவலை ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த முறையை போலவே ரிசர்வ் வங்கியும், அரசும் சிறப்பு விமானங்களில் தங்கத்தை கொண்டு செல்ல விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை உள்ளடக்கிய ரகசிய பணியை மேற்கொண்டனர்.
செப்டம்பர் மாத இறுதியில் உள்ளூர் பெட்டகங்களில் சேமிக்கப்பட்ட தங்கத்தின் மொத்த அளவு 510.46 டன்னாக இருந்தது. மார்ச் இறுதி நிலவரப்படி 408 டன்னாக இருந்தது.






