லண்டனில் இருந்து 102 டன் தங்கம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது- ரிசர்வ் வங்கி தகவல்

நாட்டின் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை உள்ளடக்கிய ரகசிய பணியை மேற்கொண்டனர்.
லண்டனில் இருந்து 102 டன் தங்கம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது- ரிசர்வ் வங்கி தகவல்
Published on

புதுடெல்லி:

லண்டனில் உள்ள பாங்க் ஆப் இங்கிலாந்தின் பெட்டகத்தில் இருந்து மேலும் 102 டன் தங்கம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த தகவலை ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த முறையை போலவே ரிசர்வ் வங்கியும், அரசும் சிறப்பு விமானங்களில் தங்கத்தை கொண்டு செல்ல விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை உள்ளடக்கிய ரகசிய பணியை மேற்கொண்டனர்.

செப்டம்பர் மாத இறுதியில் உள்ளூர் பெட்டகங்களில் சேமிக்கப்பட்ட தங்கத்தின் மொத்த அளவு 510.46 டன்னாக இருந்தது. மார்ச் இறுதி நிலவரப்படி 408 டன்னாக இருந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com