search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coconut Water"

    • பொள்ளாச்சி இளநீரின் மொத்த பண்ணை விலை தற்போது அதிகரித்து உள்ளது.
    • ஆனைமலை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் செவ்விளநீர் அறுவடை அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் அதிகளவில் தென்னை விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். இங்குள்ள தென்னைகளில் உற்பத்தி யாகும் பச்சைநிற இளநீர் மற்றும் செவ்விளநீருக்கு மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு உண்டு.

    அதிலும் குறிப்பாக கோடைக்காலம் வரும் போது பொள்ளாச்சியில் இருந்து வெளிமாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு அதிகளவில் இளநீர் விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். மேலும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இளநீர் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும்.

    தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கி அனல் வெயில் கொளுத்தி வருவதால் பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் பச்சை இளநீர், செவ்விளநீர் ஆகியவற்றின் விற்பனை சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. மேலும் கர்நாடகா, மராட்டியம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் நேரடியாக வந்திருந்து, இளநீரை குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்து வாங்கி சென்று வருகின்றனர். இதுதவிர சென்னை, மதுரை, திண்டுக்கல், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் அதிகளவில் இளநீர் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. எனவே பொள்ளாச்சி இளநீரின் மொத்த பண்ணை விலை தற்போது அதிகரித்து உள்ளது.

    இங்கு கடந்த மாதம் தொடக்கத்தில் ஒரு இளநீரின் பண்ணை விற்பனை விலை ரூ.18 ஆக இருந்தது. ஆனால் நேற்றைய நிலவரப்படி ஒரு இளநீர் ரூ.25 என்ற விலைக்கு நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது. பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் செவ்விளநீர் அறுவடை அதிகரிக்க தொடங்கி உள்ளது. அவற்றை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பும் பணியில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர்.

    அங்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக சுமார் 2 லட்சம் வரையிலான செவ்விளநீர் ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர்.

    பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த ஆண்டு பருவமழை குறைவாக இருந்தாலும், தென்னையில் இளநீர் உற்பத்தி அதிகரித்து உள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் இளநீர் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் வெளிமாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் நேரடியாக வந்திருந்து, இளநீரை குறிப்பிட்ட விலைக்கு வாங்கி செல்கின்றனர். பெரும்பாலும் செவ்விளநீரே அதிகளவில் வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கோடைக்காலம் உச்சகட்டத்தை எட்டும்போது வெளியூர்களுக்கு லாரிகள் மூலம் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும் இளநீரின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சுமார் 60 அடி உயர தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறித்து கொண்டிருந்தார்.
    • உடலில் கயிற்றை கட்டி கீழே இறக்கி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள புங்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சின்னையன் (வயது 49) இளநீர் வியாபாரம் செய்து வந்தார்.

    இந்நிலையில் வழக்கம் போல் சின்னையன் சுமார் 60 அடி உயர தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறித்து கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மர பட்டையில் தொங்கி கொண்டிருந்தார்.

    தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மரத்தில் ஏறி சின்னையன் உடலில் கயிறை கட்டி கீழே இறக்கி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே சின்னையன் இறந்தார்.இது குறித்து வலங்கைமான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×