search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி விவகாரத்தில் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய கர்நாடகா திட்டம்
    X

    காவிரி விவகாரத்தில் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய கர்நாடகா திட்டம்

    காவிரி விவகார ஆலோசனை கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய கர்நாடகா அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. #Kumaraswamy #KarnatakaAllparty #CauveryIssue
    பெங்களூரு:

    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தலைவர், உறுப்பினர்கள், பகுதி நேர உறுப்பினர்கள் 9 பேர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஆணையத்தின் முதல் கூட்டம் வரும் ஜூலை 2-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்களும், மத்திய அரசு பிரதிநிதிகளும் பங்கேற்கிறார்கள். இதில் பல்வேறு அம்சங்கள் பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது.

    இந்நிலையில், கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதல்வர் குமாரசாமி அழைப்பு விடுத்தார். அதன்படி  பெங்களூரு விதான சவுதாவில் குமாரசாமி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா, மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, அமைச்சர்கள், நீர்வளத்துறை சார்ந்த அதிகாரிகள், எம்.பி.க்கள், காவிரி படுகையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள், கர்நாடக மூத்த வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய கர்நாடகா அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

    இதுமட்டுமில்லாமல் ஜூலை 2-ம் தேதி நடைபெற உள்ள காவிரி மேலாண்மை ஆணைய முதல் கூட்டத்தில் கர்நாடகா தரப்பு கோரிக்கைகள் முன்வைக்கப்படும். காவிரி ஆணையம் அமைக்கவும், மாற்றவும் நாடாளுமன்றத்திற்கு உரிமை உள்ளது என கர்நாடகா அரசின் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

    மேலும், வரவுள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கர்நாடகாவின் அனைத்து எம்.பி.க்களும் காவிரி விவகாரம் குறித்து பிரச்சனை எழுப்பவும் திட்டமிட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக முதல் மந்திரி குமாரசாமி கூறுகையில், காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகத்திற்கு பாதகமான விதிமுறைகளுக்கு எதிராக போராடுவோம் என தெரிவித்தார்.

    இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வரும், கூட்டணி கட்சியின் முக்கிய தலைவருமான சித்தராமைய்யா கலந்து கொள்ளாதது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. #Kumaraswamy #KarnatakaAllparty #CauveryIssue
    Next Story
    ×