search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "feeling emotional outburst"

    விவசாயிகள் கடன் தள்ளுபடி தொடர்பான பாராட்டு விழாவில் பங்கேற்ற முதல் மந்திரி குமாரசாமி, ஆலகால விஷத்தை விழுங்கிய சிவபெருமானை போல் தவிக்கிறேன் என கண் கலங்கியப்டி பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. #Kumaraswamy
    பெங்களூரு:

    சமீபத்தில் நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து, பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதால் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை அளித்தது.

    இதையடுத்து, மதச்சார்பற்ற கட்சி தலைவர் குமாரசாமி காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.

    இந்நிலையில், பெங்களூருவில் நடைபெற்ற விவசாயிகள் கடன் தள்ளுபடி தொடர்பான பாராட்டு விழாவில் பங்கேற்ற முதல் மந்திரி குமாரசாமி, ஆலகால விஷத்தை விழுங்கிய சிவபெருமானை போல் தவிக்கிறேன் என கண் கலங்கியப்டி பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் விவசாய கடன் தள்ளுபடி செய்வது தொடர்பாக பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல் மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    சிவபெருமான் ஆலகால விஷத்தை விழுங்கி விட்டு தவிப்பது போல் நானும் தவித்து வருகிறேன். நான் முதல் மந்திரியாக இருப்பதில் தொண்டர்களும் மக்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். ஆனால் நான் மகிழ்ச்சியாக இல்லை.

    முதல் மந்திரி பதவியால் எனக்கு நெருக்கடிகள் அதிகமானால் எந்த நேரத்திலும் பதவி விலக நான் தயாராக உள்ளேன். ஆட்சி, அதிகாரத்துக்காக நானில்லை. விவசாயிகளையும் அவர்களது கடனையும் தள்ளுபடி செய்யவே முதல்வர் பதவியில் அமர்ந்துள்ளேன்.

    விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வதில் எந்த மாநிலத்துக்கும் விருப்பம் இல்லை, அக்கறை இல்லை. ஆனால் நான் அளித்த வாக்குறுதியை காப்பாற்றி விட்டேன் என தெரிவித்துள்ளார்.

    குமாரசாமி பேசியபோது அவரது கண்கள் கலங்கியது. அடிக்கடி அவர் கண்ணீரைத் துடைத்து விட்டுக் கொண்டு பேசியதை கண்ட கூட்டத்தினர், உங்களுடன் நாங்கள் இருக்கிறோம் என கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
    ×