search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ள பாதிப்புகள் குறித்து கர்நாடக முதல்வரிடம் தொலைபேசியில் கேட்டறிந்தேன் - பிரதமர் மோடி
    X

    வெள்ள பாதிப்புகள் குறித்து கர்நாடக முதல்வரிடம் தொலைபேசியில் கேட்டறிந்தேன் - பிரதமர் மோடி

    கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதல் மந்திரி குமாரசாமியிடம் தொலைபேசியில் கேட்டறிந்தேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். #KarnatakaFlood #PMModi #Kumaraswamy
    புதுடெல்லி:

    கர்நாடகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது குடகு மாவட்டம். இந்த மாவட்டத்தில் கனமழை இடைவிடாது கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த வெள்ளப்பெருக்கால், பல்வேறு கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    இங்குள்ள முக்கொட்லு, காட்டக்கேரி, ஆலேறி, மக்கந்தூர் ஆகிய கிராமங்களில் பயங்கர மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. மண்சரிவால் ஏற்கனவே குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

    இதற்கிடையே, ஜோடுபாலா பகுதியில் மழைவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 6 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

    குடகு மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவம், கடலோர காவல்படையினர் உள்பட பலர் ஈடுபட்டுள்ளனர். நேற்று முதல் மந்திரி குமாரசாமி ஹெலிகாப்டர் மூலம் குடகு மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதல் மந்திரி குமாரசாமியிடம் தொலைபேசியில் கேட்டறிந்தேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், வெள்ள பாதிப்புகள் குறித்து கர்நாடக முதல் மந்திரி குமாரசாமியிடம் தொலைபேசியில் கேட்டறிந்தேன். வெள்ளம் பாதித்த கர்நாடகாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும். வெள்ளம் பாதித்த பகுதிகளில் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க பிரார்த்தித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். #KarnatakaFlood #PMModi #Kumaraswamy
    Next Story
    ×