என் மலர்
இந்தியா

வங்கதேசம்: கலிதா ஜியா இறுதிச்சடங்கில் பங்கேற்கிறார் ஜெய்சங்கர்
- வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா இன்று காலமானார்.
- அவரது மறைவுக்கு அவாமி லீக் கட்சி தலைவரான ஷேக் ஹசீனா இரங்கல் தெரிவித்தார்.
புதுடெல்லி:
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா (80), இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 13-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறப்பு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இதற்கிடையே, கலிதா ஜியா சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். கலிதா ஜியா கடந்த 1991-96 மற்றும் 2001-06 என இரு முறை வங்கதேச பிரதமராக இருந்தவர். கலிதா ஜியாவின் இறுதிச்சடங்கு டாக்காவில் நாளை நடைபெற உள்ளது.
இந்நிலையில், கலிதா ஜியாவின் இறுதிச்சடங்கில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்கிறார். இதற்காக ஜெய்சங்கர் நாளை வங்கதேச தலைநகர் டாக்கா செல்கிறார்.
வங்கதேசம் உடனான உறவில் விரிசல் நிலவி வரும் சூழ்நிலையில், வெளியுறவுத்துறை மந்திரியின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.






