என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhopal Airport"

    • நாடு முழுவதும் 58 விமான நிலையங்களில் பயணிகளிடம் கருத்து கேட்கப்பட்டது.
    • அசாம் மாநிலத்தின் ருபாசி விமான நிலையம், 3 புள்ளிகள் மட்டுமே பெற்று கீழ்மட்டத்தில் உள்ளது.

    வாடிக்கையாளர்களுக்கு திருப்தியான சேவை அளிக்கும் விமான நிலையம் எது என்பது குறித்து இந்திய விமான நிலையங்கள் ஆணையம் சார்பில் நாடு தழுவிய ஆய்வு நடத்தப்பட்டது.

    நாடு முழுவதும் 58 விமான நிலையங்களில் பயணிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில், ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை நடத்தப்பட்ட முதல் சுற்று ஆய்வில், மத்தியபிரதேச மாநிலத்தின் போபால், கஜுராஹோ, ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூர் ஆகிய விமான நிலையங்கள், முழு மதிப்பெண்களான 5 பெற்று முதலிடம் பிடித்தன.

    கடந்த ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை நடத்தப்பட்ட 2-வது சுற்று ஆய்வில், போபால், கஜுராஹோ, மகாராஷ்டிரா மாநிலத்தின் சத்ரபதி சாம்பாஜிநகர் ஆகிய விமான நிலையங்கள் 5-க்கு 4.99 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தன.

    அசாம் மாநிலத்தின் ருபாசி விமான நிலையம், 3 புள்ளிகள் மட்டுமே பெற்று கீழ்மட்டத்தில் உள்ளது. சிம்லா (இமாச்சலபிரதேசம்), பாவ்நகர் (குஜராத்), தேஸ்பூர் (அசாம்), கலபுர்கி (கர்நாடகா) ஆகிய விமான நிலையங்கள் இந்த ஆய்வில் சேர்க்கப்படவில்லை.

    மத்தியபிரதேச மாநிலம் சாதர்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கஜுராஹோ, கோவில் சிற்பங்களுக்கு புகழ் பெற்றது. அங்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். உலகத்தரம் வாய்ந்த பயணியர் சேவைகள், சிறிய நகரங்களுக்கும் கிடைப்பதை இந்த ஆய்வு காட்டுகிறது. ''கஜுராஹோ விமான நிலையம், ஒரே ஆண்டில் 2 தடவை முதலிடம் பெற்றிருப்பது, ஒட்டுமொத்த குழுவின் அர்ப்பணிப்பு உணர்வை காட்டுவதாக கஜுராஹோ விமான நிலைய இயக்குனர் சந்தோஷ் சிங் தெரிவித்தார்.

    மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் விமான நிலையத்திற்கு மும்பையில் இருந்து 125 பேருடன் வந்த ஜெட் ஏர்வேஸ் விமானம் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்றது. #BhopalAirport #planeskidsonrunway

    போபால்:

    மும்பையில் இருந்து நேற்று இரவு மத்தியப்பிரதேச மாநிலம் போபாலுக்கு வந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான  விமானம், போபால் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

    அதில் 125 பயணிகளும், விமானிகள், பணிப்பெண்கள் இருந்தனர். ஓடுபாதையில் தரையிறங்கிய போது, நொடிப்பொழுதில் ஓடுபாதையை விட்டு விலகியது. இதை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கவனித்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக, விமானிகளின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீயணைப்பு படையினரும், முதலுதவி குழுவினரும் அந்த இடத்துக்கு விரைந்தனர். விமானத்தில் இருந்த பயணிகளை அவசரமாக இறக்கப்பட்டனர்.

    விமானத்தின் முன் சக்கரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என கூறப்பட்டுள்ளது.

    சேதமடைந்த ஓடுபாதையை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும் விமானத்தை சரிசெய்யும் பணிகளும் நடைபெற்று வருவதாகவும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #BhopalAirport #planeskidsonrunway
    ×