என் மலர்
நீங்கள் தேடியது "தொழிலதிபர்கள்"
- 19,650 கோடி செலவில் இந்த விமான நிலையத்தைக் கட்டியெழுப்ப 20 ஆண்டுகள் ஆகியுள்ளது.
- அதானி குழும பங்குச்சந்தை முறைகேடுகள் குறித்தான ஹிண்டன்பெர்க் அறிக்கையை அரசின் செபி அமைப்பு நிராகரித்தது
மகாரஷ்டிர மாநிலம் மும்பையில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தின் கடுமையான போக்குவரத்துச் சுமையைக் குறைக்க நவி மும்பையில் புதிய சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது.
குன்றுகளை தரைமட்டமாக்கி, ஆறுகளை மடைமாற்றிவிட்டு, நிலப்பரப்புகளை இணைக்க பாலங்கள் அமைத்து 1,160 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.19,650 கோடி செலவில் இந்த விமான நிலையத்தைக் கட்டியெழுப்ப 20 ஆண்டுகள் ஆகியுள்ளது.
அதானி ஏர்போர்ட்ஸ் மற்றும் பொது-தனியார் கூட்டு முயற்சியில் இந்த விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த விமான நிலையம் நேற்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், தொழிலதிபர் அதானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் பிரதமர் மோடி அதானிக்கு ஷீல்ட் கொடுக்கும் புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து காங்கிரஸ் கிண்டலடித்துள்ளது.
அந்த புகைப்படத்தில், மோடிக்கு அதானி ஷீல்ட் கொடுப்பதுபோல் சித்தரிக்கப்பட்டு, அதானி குழுமத்தின் சிறந்த ஊழியருக்கான வாழ்நாள் விருது மோடிக்கு கொடுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் மோடியின் அர்ப்பணிப்பு அதானி குழுமத்தை மென்மேலும் வளர செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் பெரும்பாலான அரசு திட்டங்களின் டெண்டர்கள் அதானிக்கு வழங்கப்படுவது குறித்து காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்து வருவது தெரிந்ததே. தாராவி மறுக்கட்டுமான திட்டம், பழங்குடியினர் மற்றும் சுற்றுசூலை பாதிக்கும் என விமர்சனத்துக்குள்ளாகும் கிரேட்டர் நிகோபார் திட்டம் உள்ளிட்டவை அதானி குழுமம் வசம் செல்வதை காங்கிரஸ் சுட்டிக்காட்டி வருகிறது.
மேலும் அண்மையில் அதானி குழும பங்குச்சந்தை முறைகேடுகள் குறித்தான ஹிண்டன்பெர்க் அறிக்கையை அரசின் செபி அமைப்பு நிராகரித்தது அதானிக்கு நிவாரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
- பொருளாதாரத்தின் முதுகெலும்பான சிறு குறு தொழில்துறை முன்னெப்போதும் இல்லாத அழுத்தத்தில் உள்ளது.
- பொருளாதார அதிகாரம் ஒரு சிலரின் கைகளில் குவிந்ததால், அரசியல் முடிவுகளும் அவர்களுக்கு சாதகமாகத் இருக்கின்றன.
மோடி அரசின் பொருளாதார கொள்கைகள் அவரது தொழிலதிபர் நண்பர்களின் நலன்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்தியாவில் செல்வம் ஒரு சிலரிடம் குவிந்து கிடப்பது குறித்து ஒன்றன்பின் ஒன்றாக அறிக்கைகள் எச்சரிக்கின்றன.
மில்லியன் கணக்கான இந்தியர்கள் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போராடும் அதே வேளையில், நாட்டின் பாதி செல்வத்தை வெறும் 1,687 பேர் மட்டுமே வைத்துள்ளனர்.
மோடி அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளால் இயக்கப்படும் இந்த மிகப்பெரிய செல்வக் குவிப்பு, நம் நாட்டில் மிகப்பெரிய பொருளாதார சமத்துவமின்மையை உருவாக்குகிறது.
இந்த சமத்துவமின்மை பரவலான சமூக பாதுகாப்பின்மை மற்றும் அதிருப்தியை உருவாக்குகிறது.
மற்ற நாடுகளில் சமீபத்திய நிகழ்வுகள், இதே தீவிர பொருளாதார சமத்துவமின்மையும், முடக்கப்பட்ட ஜனநாயக அமைப்புகளும் அரசியல் குழப்பத்திற்கு ஊக்கியாக மாறிவிட்டன என்பதைக் காட்டுகின்றன.
இந்த அரசாங்கம் இந்தியாவை அதே பாதையில் தள்ளுகிறது. அதிகார உறவு காரணமாக ஒரு சில தொழிலதிபர்கள் மேலும் மேலும் பணக்காரர்களாகி வருகின்றனர். பிரதமரின் கொள்கைகள் அவரது சில தொழிலதிபர் நண்பர்களின் நன்மைகளில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன.
இந்தியாவின் பொருளாதாரத்தின் முதுகெலும்பான சிறு குறு தொழில்துறை முன்னெப்போதும் இல்லாத அழுத்தத்தில் உள்ளது.
இந்த அழுத்தம் உள்நாட்டுக் கொள்கைகள் மட்டுமல்ல, வெளியுறவுக் கொள்கை தோல்விகளின் விளைவாகும்.
சாதாரண மக்களுக்கு சம்பாதிக்கும் வாய்ப்புகள் சுருங்கி வருகின்றன. பணவீக்கம் மிக அதிகமாக உயர்ந்து, வேலை செய்பவர்கள் கூட சேமிப்பிற்குப் பதிலாக கடனில் அதிகளவில் சுமையாக உள்ளனர்.
கல்வி மற்றும் சுகாதாரத்தில் முதலீடுகள் படிப்படியாகக் குறைந்து வருகின்றன, மேலும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் பலவீனமடைந்து வருகின்றன.
மில்லியன் கணக்கான மக்களுக்கு சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பு வலையை வழங்கிய மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் போன்ற வெற்றிகரமான திட்டங்கள் இப்போது ஊதிய நெருக்கடிகளைச் சந்திக்கின்றன. தொழிலாளர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியம் கூட கிடைப்பதில்லை.
செல்வத்தின் இத்தகைய தீவிர மையப்படுத்தல் பொருளாதாரத்திற்கு ஒரு பிரச்சனை மட்டுமல்ல, ஜனநாயகத்தின் ஆன்மாவின் மீதான நேரடித் தாக்குதலாகும். பொருளாதார அதிகாரம் ஒரு சிலரின் கைகளில் குவிந்ததால், அரசியல் முடிவுகளும் அவர்களுக்கு சாதகமாகத் இருக்கின்றன.
இது வளர்ந்து வரும் சமூக மற்றும் பொருளாதார சமத்துவமின்மைக்கு வழிவகுக்கிறது. இதன் விளைவாக, மில்லியன் கணக்கான குடிமக்கள் ஜனநாயகம் மற்றும் வளர்ச்சியின் செயல்முறையிலிருந்து படிப்படியாக ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள்." என்று தெரிவித்துள்ளார்.
- உலகம் முழுவதும் செமிகண்டக்டர்களுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது
- இந்தியாவில் திறமைக்கு பஞ்சம் கிடையாது.
நவீன மின்னணுவியலில், செமிகண்டக்டர்கள் ஒரு முக்கியமான பாகம்.
ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், வாகனங்கள் மற்றும் மருத்துவ சாதனங்கள் வரை பரந்த அளவிலான தயாரிப்புகளில் இவை பயன்படுத்தப்படுகின்றன. உலகம் முழுவதும் இவற்றிற்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளதால் இத்தயாரிப்பிற்கு பல நாடுகள் போட்டி போடுகின்றன.
மின்னணு சிப் தயாரிப்பில் இந்தியாவை உலகின் ஒரு முக்கியமான மையமாக உருவாக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார்.
இந்நிலையில், குஜராத் தலைநகர் காந்திநகரில், நூற்றுக்கணக்கான செமிகண்டக்டர் தொழில்துறை நிர்வாகிகள் பங்கேற்ற "செமிகான்இந்தியா 2023" கூட்டத்தில் மோடி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
செமிகண்டக்டர் உற்பத்தி செய்ய விரும்புபவர்களுக்கு இந்தியா சிவப்புக் கம்பளம் விரிக்கிறது. முன்பு 'ஏன் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும்?' என்று கேட்டனர். இப்போது, 'ஏன் இந்தியாவில் முதலீடு செய்யக்கூடாது?' என்று கேட்கின்றனர்.
யார் வேகமாகச் செயல்படுகிறார்களோ அவர்களுக்கு பெரும் நன்மை கிடைக்கும். இந்தியாவில் வாய்ப்புகள் ஏராளம். இந்தியாவில் திகழும் ஜனநாயகமும், மக்கள்தொகையும் வணிகத்தை பல மடங்காக்கும் சக்தி படைத்தது. மின்னணு சிப் வினியோகத்தில் உலகிற்கு நம்பகமான பங்குதாரராக இந்தியா விளங்கும். இந்தியாவில் திறமைக்கு பஞ்சம் கிடையாது. 2028ஆம் ஆண்டிற்குள் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட திறமையான சிப் டிசைன் இன்ஜினியர்களை இந்தியா உருவாக்கும். மின்னணு துறையில் இந்தியாவின் வளர்ச்சி பல மடங்கு அதிகரித்துள்ளது. 2014ல் உற்பத்தி ரூ.2 லட்சம் கோடிக்கும் ($30 பில்லியன்) குறைவாக இருந்தது. இன்று அது ரூ.8 லட்சம் கோடிக்கும் ($100 பில்லியன்) அதிகமாக வளர்ந்துள்ளது.
இவ்வாறு பிரதமர் பேசினார்.
- அது ஒரு முட்டாள்தனமான செயல் என்று கணேஷ் தெரிவித்துள்ளார்.
- இந்த சம்பவம் எப்போது அல்லது எங்கு நடந்தது என்பதை கணேஷ் பகிரவில்லை.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வேட்டி கட்டிக்கொண்டு வந்ததால் முதியவர் ஒருவர் ஷாப்பிங் மாலில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தயது.
இந்நிலையில் இதுபோன்ற சம்பவம் ஒன்று தங்களுக்கும் நடந்துள்ளதாக ஃபிரிடோ நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கணேஷ் சோனாவனே தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த கணேஷ்,"உண்மைக் கதை: ஸ்வப்னில் [ஜெயின்], ஏதர் இணை நிறுவனர் மற்றும் நானும் ஒருமுறை பெங்களூருவில் உள்ள ஒரு உணவகத்திற்குச் சென்று, ஷூஸ்-க்கு பதிலாக செருப்புகளை அணிந்து சென்றதால் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டோம்" என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், அது ஒரு முட்டாள்தனமான செயல் என்று கணேஷ் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் எப்போது அல்லது எங்கு நடந்தது என்பதை கணேஷ் பகிரவில்லை என்றாலும், உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்ட பிறகு அவர்கள் வேறு உணவகத்திற்குச் சென்றதாகக் கூறினார்.






