வேட்டியை போன்று செருப்பு.. Frido நிறுவன சிஇஓ பகிர்ந்த அனுபவம்

அது ஒரு முட்டாள்தனமான செயல் என்று கணேஷ் தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் எப்போது அல்லது எங்கு நடந்தது என்பதை கணேஷ் பகிரவில்லை.
வேட்டியை போன்று செருப்பு.. Frido நிறுவன சிஇஓ பகிர்ந்த அனுபவம்
Published on

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வேட்டி கட்டிக்கொண்டு வந்ததால் முதியவர் ஒருவர் ஷாப்பிங் மாலில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தயது.

இந்நிலையில் இதுபோன்ற சம்பவம் ஒன்று தங்களுக்கும் நடந்துள்ளதாக ஃபிரிடோ நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கணேஷ் சோனாவனே தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த கணேஷ்,"உண்மைக் கதை: ஸ்வப்னில் [ஜெயின்], ஏதர் இணை நிறுவனர் மற்றும் நானும் ஒருமுறை பெங்களூருவில் உள்ள ஒரு உணவகத்திற்குச் சென்று, ஷூஸ்-க்கு பதிலாக செருப்புகளை அணிந்து சென்றதால் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டோம்" என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இருப்பினும், அது ஒரு முட்டாள்தனமான செயல் என்று கணேஷ் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் எப்போது அல்லது எங்கு நடந்தது என்பதை கணேஷ் பகிரவில்லை என்றாலும், உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்ட பிறகு அவர்கள் வேறு உணவகத்திற்குச் சென்றதாகக் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com