என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுகுறு தொழில்"

    • பொருளாதாரத்தின் முதுகெலும்பான சிறு குறு தொழில்துறை முன்னெப்போதும் இல்லாத அழுத்தத்தில் உள்ளது.
    • பொருளாதார அதிகாரம் ஒரு சிலரின் கைகளில் குவிந்ததால், அரசியல் முடிவுகளும் அவர்களுக்கு சாதகமாகத் இருக்கின்றன.

    மோடி அரசின் பொருளாதார கொள்கைகள் அவரது தொழிலதிபர் நண்பர்களின் நலன்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்தியாவில் செல்வம் ஒரு சிலரிடம் குவிந்து கிடப்பது குறித்து ஒன்றன்பின் ஒன்றாக அறிக்கைகள் எச்சரிக்கின்றன.

    மில்லியன் கணக்கான இந்தியர்கள் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போராடும் அதே வேளையில், நாட்டின் பாதி செல்வத்தை வெறும் 1,687 பேர் மட்டுமே வைத்துள்ளனர்.

    மோடி அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளால் இயக்கப்படும் இந்த மிகப்பெரிய செல்வக் குவிப்பு, நம் நாட்டில் மிகப்பெரிய பொருளாதார சமத்துவமின்மையை உருவாக்குகிறது.

    இந்த சமத்துவமின்மை பரவலான சமூக பாதுகாப்பின்மை மற்றும் அதிருப்தியை உருவாக்குகிறது.

    மற்ற நாடுகளில் சமீபத்திய நிகழ்வுகள், இதே தீவிர பொருளாதார சமத்துவமின்மையும், முடக்கப்பட்ட ஜனநாயக அமைப்புகளும் அரசியல் குழப்பத்திற்கு ஊக்கியாக மாறிவிட்டன என்பதைக் காட்டுகின்றன.

    இந்த அரசாங்கம் இந்தியாவை அதே பாதையில் தள்ளுகிறது. அதிகார உறவு காரணமாக ஒரு சில தொழிலதிபர்கள் மேலும் மேலும் பணக்காரர்களாகி வருகின்றனர். பிரதமரின் கொள்கைகள் அவரது சில தொழிலதிபர் நண்பர்களின் நன்மைகளில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன.

    இந்தியாவின் பொருளாதாரத்தின் முதுகெலும்பான சிறு குறு தொழில்துறை முன்னெப்போதும் இல்லாத அழுத்தத்தில் உள்ளது.

    இந்த அழுத்தம் உள்நாட்டுக் கொள்கைகள் மட்டுமல்ல, வெளியுறவுக் கொள்கை தோல்விகளின் விளைவாகும்.

    சாதாரண மக்களுக்கு சம்பாதிக்கும் வாய்ப்புகள் சுருங்கி வருகின்றன. பணவீக்கம் மிக அதிகமாக உயர்ந்து, வேலை செய்பவர்கள் கூட சேமிப்பிற்குப் பதிலாக கடனில் அதிகளவில் சுமையாக உள்ளனர்.

    கல்வி மற்றும் சுகாதாரத்தில் முதலீடுகள் படிப்படியாகக் குறைந்து வருகின்றன, மேலும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் பலவீனமடைந்து வருகின்றன.

    மில்லியன் கணக்கான மக்களுக்கு சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பு வலையை வழங்கிய மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் போன்ற வெற்றிகரமான திட்டங்கள் இப்போது ஊதிய நெருக்கடிகளைச் சந்திக்கின்றன. தொழிலாளர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியம் கூட கிடைப்பதில்லை.

    செல்வத்தின் இத்தகைய தீவிர மையப்படுத்தல் பொருளாதாரத்திற்கு ஒரு பிரச்சனை மட்டுமல்ல, ஜனநாயகத்தின் ஆன்மாவின் மீதான நேரடித் தாக்குதலாகும். பொருளாதார அதிகாரம் ஒரு சிலரின் கைகளில் குவிந்ததால், அரசியல் முடிவுகளும் அவர்களுக்கு சாதகமாகத் இருக்கின்றன.

    இது வளர்ந்து வரும் சமூக மற்றும் பொருளாதார சமத்துவமின்மைக்கு வழிவகுக்கிறது. இதன் விளைவாக, மில்லியன் கணக்கான குடிமக்கள் ஜனநாயகம் மற்றும் வளர்ச்சியின் செயல்முறையிலிருந்து படிப்படியாக ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள்." என்று தெரிவித்துள்ளார்.    

    • ரத்தினம், நகைகள், ஜவுளி, ஆடைகள், இறால் போன்ற இந்தியாவின் முக்கிய ஏற்றுமதித் துறைகளை கடுமையாகப் பாதிக்கும்.
    • நீங்கள் உங்கள் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி மற்றும் பொருளாதார கொள்கைகள் மூலம் சிறு குறு தொழில் துறையை முற்றிலுமாக அழித்துவிட்டீர்கள்.

    ரஷியாவிடம் எண்ணெய் வாங்கி உக்ரைன் போரை ஊக்குவிப்பதாக குற்றம்சாட்டி இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா அபராதமாக விதித்த 25 சதவீத வரி நாளை (ஆகஸ்ட் 27) முதல் அமலுக்கு வர உள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க சுங்கத் துறை அதிகாரபூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டது.

    இதனால், ஏற்கனவே உள்ள 25% வரியுடன் சேர்த்து இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்படும் மொத்த வரி 50% ஆக உயர்ந்துள்ளது.

    அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, ரத்தினம், நகைகள், ஜவுளி, ஆடைகள், இறால் போன்ற இந்தியாவின் முக்கிய ஏற்றுமதித் துறைகளை கடுமையாகப் பாதிக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.

    இதற்கிடையே நேற்று குஜராத்தில் பேசிய பிரதமர் மோடி, "விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள், சிறு தொழில்களின் நலன்தான் மிக முக்கியமானவை. அமெரிக்காவின் மிரட்டலால், நமக்கு அழுத்தம் அதிகரிக்கலாம். ஆனால், அனைத்தையும் நாம் தாங்கிக் கொள்வோம்.

    நான் அனைவரும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்ற மந்திரத்தை பின்பற்ற வேண்டும். வணிகர்கள் தங்கள் கடைகளுக்கு வெளியே இந்திய பொருட்களை மட்டுமே விற்பனை செய்வதாக ஒரு பெரிய பலகையை வைத்திருக்க வேண்டும்" என்று கூறினார்.

    இந்நிலையில் அமெரிக்காவின் வரிவிதிப்பு, விசித்திரமான இந்திய வெளியுறவு கொள்கையின் விளைவு என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

    வரிவிதிப்பு மற்றும் இந்திய பொருட்களை வாங்குவது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா, "நாம் கடைப்பிடித்து வரும் மிகவும் விசித்திரமான வெளியுறவுக் கொள்கையின் விளைவுகளை நாம் அனைவரும் இப்போது பார்த்து வருகிறோம்.

    இதற்கு அரசாங்கம் எவ்வாறு பதிலளிக்கும் என்பதைப் பார்ப்போம். வெறும் அலங்கார பேச்சுக்கள் மட்டும் போதாது.

    நீங்கள் உங்கள் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி மற்றும் பொருளாதார கொள்கைகள் மூலம் சிறு குறு தொழில் துறையை (MSME) முற்றிலுமாக அழித்துவிட்டீர்கள்.

    அப்படி இருக்கும்போது மக்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை எவ்வாறு வாங்குவார்கள். உற்பத்தி இல்லாத இடத்தில், பொருட்களை எப்படி வாங்க சொல்ல முடியும்" என்று வினவியுள்ளார். 

    • இந்தியாவில் 7 கோடி குறு சிறு நிறுவனங்கள் உள்ளன.
    • நாட்டின் மொத்த உற்பத்தியில் எம்எஸ்எம்இ தான் 30 சதவீதம் பங்காற்றுகிறது.

    விவசாயத்தில் சிறுகுறு நிறுவனங்கள் தொடங்கி தொழில் முனைவோர்களாக நம்மை நாமே உயர்த்திக் கொள்ள முடியும் என வழிகாட்டுகிறார் "சி சேஞ்ச் " ஆலோசனை நிறுவனத்தின் நிறுவனரும், வணிக யுக்தி ஆலோசகருமான எம்.கே.ஆனந்த்.

    இதுகுறித்து, அவர் கூறியது: "பொருளாதாரம் தான் அனைத்தையும் தீர்மாணிக்கிறது. அந்த வகையில் உலகளவில் குறுசிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் 50 சதவீதம் பொருளாதாரத்தை அதிகரிக்கும் பிரதானக் காரணிகளாக உள்ளன. 140 கோடி மக்கள் தொகை உள்ள இந்தியாவில் விவசாயம், குறுசிறு நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) நிறுவனங்கள் தான் பொருளாதார ஊக்கியாக உள்ளன.

    அந்த வகையில் இந்தியாவில் 7 கோடி குறு சிறு நிறுவனங்கள் உள்ளன. அதாவது, 7 கோடி தொழில் முனைவோர்கள் உள்ளனர். இதில் 12 கோடி பேர் நேரடியாக வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இதில் 10 கோடி அளவுக்கு ஆண்டுக்கு வருமானம் ஈட்டினால் அவை குறு நிறுவனங்கள் என்றும், 100 கோடிகள் வரை ஆண்டு வருமானம் ஈட்டினால் சிறு நிறுவனங்கள் என்றும், ஆண்டுக்கு ரூ.500 கோடிகள் வருவாய் ஈட்டினால் நடுத்தர நிறுவனங்கள் அன்றும் அரசு வரையறுத்துள்ளது.

    நாட்டின் மொத்த உற்பத்தியில் எம்எஸ்எம்இ தான் 30 சதவீதம் பங்காற்றுகிறது. அப்படிப் பார்க்கையில் இந்தியாவின் முதுகெலும்பு எம்எஸ்எம்இயைச் சார்ந்துள்ளது. கடந்த நான்கைந்து ஆண்டுகளாக எம்எஸ்எம்இ தொடர்பான "ஸ்டார்ட்அப்" என்பது பெருகி வருகிறது. 1 லட்சத்து 50 ஆயிரம் நிறுவனங்கள் கடந்த 5 ஆண்டுகளில் "ஸ்டார்ட்அப்" பில் பதிவு செய்து, புதிதாகத் தொழில் தொடங்க வந்துள்ளனர்.

    மக்கள் தொகை மிகுந்த நம் நாட்டில், அனைவருக்கும் வேலை என்ற இலக்கை அடைய தற்போது உள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை போதவில்லை. ஆக, அனைவருக்கும் வேலை வேண்டும் என முடிவெடுத்தால், நிறைய தொழில் நிறுவனங்களை உருவாக்குதல் இங்கு அவசியம்.

    இளைஞர்கள், படித்தவர்கள், வணிகயோசனை கொண்டவர்கள், சொந்தத் தொழிலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், "ஸ்டார்ட்அப்" என்ற கலாச்சாரத்துக்குள் வரத் தொடங்கியுள்ளனர். பெரும்பாலும் "ஸ்டார்ட்அப்"பில் வருபவர்கள் தொழில்நுட்பத்தை சாந்துள்ளனர்.

    எம்எஸ்எம்.இ மற்றும் விவசாயத்தில் ஸ்டார்ட்அப் தொழில்கள் மூலமாக தொழில்நுட்ப புரட்சி அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ளது.

    ஸ்டார்ட்அப் பில் சிறுகுறு தொழிலுக்கான திட்டங்கள், வழிமுறைகளை முழுமையாக அறிந்து கொள்ள, வருகின்ற 17.08.2025 ( ஞாயிற்றுக்கிழமை) சென்னை காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் "அக்ரி ஸ்டார்ட்அப் திருவிழா 2.0" கலந்து கொள்ளுங்கள். முன்பதிவுக்கு 83000- 93777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    • அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் மற்றும் அதன் சலு கைகள் குறித்து முகாமில் விளக்கப்பட உள்ளது.
    • தொழில திபர்கள் தொழில் திட்டங்க களுடன் வந்து தொழில் கடன் மற்றும் மாநில அரசின் மானிய சேவை களை பயன்படுத்திக் கொள்ளு மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் சிறுகுறு தொழில்களுக்கு சிறப்பு கடன் முகாம் நடக்கிறது. இது குறித்து தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் சார்பில் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் தருமபுரியில் உள்ள கிளை அலுவலகத்தில் நாளை (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற செப்டம்பர் மாதம் 1- ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் மாநில அரசின் மானியங்கள், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தகுதி பெறும் தொழில்களுக்கு அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ.75 லட்சம் வரை வழங்கப்படும்.

    அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் மற்றும் அதன் சலுகைகள் குறித்து முகாமில் விளக்கப்பட உள்ளது. இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீத சலுகை அளிக்கப்படும்.

    இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி புதிய தொழில் முனைவோர், தொழிலதிபர்கள் தொழில் திட்டங்ககளுடன் வந்து தொழில் கடன் மற்றும் மாநில அரசின் மானிய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×