search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai team"

    • இறுதிப்போட்டிக்கு சென்னை மற்றும் தூத்துக்குடி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
    • பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் குழு பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பையை வழங்கியது.

    தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில், மாவட்டந்தோறும் குடியரசு தினத்தையொட்டி 14 வயதுக்குட்பட்டோருக்கான குழு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்த ஆண்டு குடியரசு தினத்தையொட்டி, கடந்த மாதம் குழு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

    இதில் மண்டல மற்றும் மாவட்ட அளவில் வெற்றிபெற்ற மாணவர்கள் புதுக்கோட்டையில் நடந்த மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டனர். இதில் பேட்மிண்டன், டென்னிஸ், கோகோ, கபடி, எறிபந்து, கூடைப்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

    3 நாட்கள் நடைபெற்ற இந்த விளையாட்டு போட்டிகளில் 38 மாவட்ட அணிகள் பங்கேற்று அசத்தின. இறுதிப்போட்டிக்கு சென்னை மற்றும் தூத்துக்குடி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் தூத்துக்குடி முதலிடத்தை பிடித்தது. சென்னை 2-ம் இடம் பிடித்தது.

    சென்னை அணியில் இடம்பிடித்த புழுதிவாக்கத்தை சேர்ந்த வியாசா வித்யாலயா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆ.ஜோன்ஸ்ராஜ் எறிபந்து (த்ரோபால்) விளையாட்டில் அசத்தினார். இதுதவிர அந்த பள்ளி மாணவர்கள் 12 பேர் சென்னை அணியில் இடம்பிடித்தனர்.

    மாணவர் ஜோன்ஸ் ராஜ், கராத்தே மற்றும் ஜூடோ போன்ற வீர கலைகளில் பயிற்சி பெற்று சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் குவித்தவர் ஆவார். வெற்றிபெற்ற தூத்துக்குடி மற்றும் சென்னை அணிகளில் இடம்பெற்ற மாணவ-மாணவிகளுக்கு, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் குழு பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பையை வழங்கியது.

    • ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்க அதிகாலையிலேயே சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
    • டிக்கெட்டுகள் ரூ.1,500 முதல் ரூ.3,000 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஐபிஎல் தொடர் வருகிற 31-ந் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளை சேர்ந்த வீரர்களும் தயாராகி வருகின்றனர். இந்த தொடரின் முதல் போட்டியாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்திற்கு திரும்பி உள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

    இந்த நிலையில், சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்க அதிகாலையில் இருந்தே சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    டிக்கெட்டுகள் ரூ.1,500 முதல் ரூ.3,000 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில்  நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை PAYTM மற்றும் www.insider.in மற்றும் மைதானத்தில் உள்ள இரண்டு கவுண்டர்களில் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பெண்கள் பிரிவு கால் இறுதி முதல் போட்டியில் மும்பை அணியை ஐதராபாத் சவுத் சென்டிரல் ரெயில்வே அணி வீழ்த்தியது.
    • 2-வது போட்டியில் உத்தரபிரதேச அணியை டெல்லி அணி வென்றது.

    திசையன்விளை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் ஏற்பாட்டில், திசையன்விளையில் அகில இந்திய அளவிலான மின்னொளி கபடி போட்டி 4 நாட்கள் நடந்தது.

    ஆண்கள் பிரிவு கால் இறுதி போட்டியை ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி, அப்புவிளை முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.சுரேஷ், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முரளி, அப்புவிளை மகேசுவரன் ஆகியோர் வீரர்களை அறிமுகம் செய்து தொடங்கி வைத்தனர்.

    பெண்கள் பிரிவு போட்டியை ராதாபுரம் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் வாழவந்தகணபதி, பொன் மீனாட்சி அரவிந்தன், சாந்தா மகேசுவரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    ஆண்கள் பிரிவு கால் இறுதி முதல் போட்டியில் தூத்துக்குடி துரைசிங்கம் அணியை தானே அணி வீழ்த்தியது. 2-வது போட்டியில் கன்னியாகுமரி அணியை சென்னை வருமான வரித்துறை அணி வென்றது. 3-வது போட்டியில் தமிழ்நாடு காவல் துறை அணியை ஹரியானா சி.ஐ.எஸ்.எப். அணி வீழ்த்தியது. 4-வது போட்டியில் எதிர்நீச்சல் அணியை ஐதராபாத் சவுத் சென்டிரல் ரெயில்வே அணி வென்றது.

    பெண்கள் பிரிவு கால் இறுதி முதல் போட்டியில் மும்பை அணியை ஐதராபாத் சவுத் சென்டிரல் ரெயில்வே அணி வீழ்த்தியது. 2-வது போட்டியில் உத்தரபிரதேச அணியை டெல்லி அணி வென்றது. 3-வது போட்டியில் சாய் அணியை ஹரியானா அணி வீழ்த்தியது. 4-வது போட்டியில் பெங்களூரு அணியை மங்களூரு அணி வென்றது.

    பின்னர் நடந்த ஆண்கள் பிரிவு முதலாவது அரை இறுதி போட்டியில் தானே அணியை சென்னை வருமான வரித்துறை அணி வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 2-வது அரை இறுதி போட்டியில் ஐதராபாத் சவுத் சென்டிரல் ரெயில்வே அணியை ஹரியானா சி.ஐ.எஸ்.எப். அணி வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    பெண்கள் பிரிவு முதலாவது அரை இறுதி போட்டியில் டெல்லி அணியை ஐதராபாத் சவுத் சென்டிரல் ரெயில்வே அணி வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 2-வது அரை இறுதி போட்டியில் மங்களூரு அணியை ஹரியானா அணி வீழ்த்தியது.

    பின்னர் நடந்த ஆண்கள் பிரிவு இறுதி போட்டியில் ஹரியானா சி.ஐ.எஸ்.எப். அணியை சென்னை வருமான வரித்துறை அணி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. பெண்கள் பிரிவு இறுதி போட்டியில் ஹரியானா அணியை வீழ்த்தி ஐதராபாத் சவுத் சென்டிரல் ரெயில்வே அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

    வெற்றி பெற்ற அணிகளுக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், பாளையங்கோட்டை யூனியன் தலைவர் தங்கபாண்டியன் ஆகியோர் சுழற்–கோப்பை பரிசு வழங்கினர். ராதாபுரம் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ், ஒன்றிய குழு துணைத்தலைவர் இளையபெருமாள், முன்னாள் லயன்ஸ் கவர்னர் சுயம்புராஜன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பரமசிவ அய்யப்பன், முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், மாவட்ட கவுன்சிலர் கனகராஜ், சாலமன் டேவிட், இசக்கிபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ‘புரோ கைப்பந்து லீக் போட்டியில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி கோப்பையை வெல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ளது’ என்று அந்த அணியின் கேப்டன் ஷெல்டன் மோசஸ் நம்பிக்கை தெரிவித்தார். #ProVolleyballLeague
    சென்னை:

    முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி வருகிற 2-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை கொச்சி மற்றும் சென்னையில் நடைபெறுகிறது. இதில் கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ், மும்பா வாலி (மும்பை), கோழிக்கோடு ஹீரோஸ், சென்னை ஸ்பார்ட்டன்ஸ், ஆமதாபாத் டிபென்டர்ஸ், ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியிலும் உள்நாட்டு வீரர்களுடன் 2 வெளிநாட்டினரும் இடம் பெறுவார்கள்.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோதும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். பிப்ரவரி 2-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை லீக் ஆட்டங்கள் கொச்சியில் உள்ள ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கிலும், பிப்ரவரி 16-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 3 லீக் ஆட்டம் மற்றும் அரையிறுதி, இறுதிப்போட்டி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கிலும் அரங்கேறுகிறது. தினசரி இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி 1, சோனி 2 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

    ஒவ்வொரு ஆட்டமும் 5 செட்கள் கொண்டதாகும். முதலில் 15 புள்ளியை எட்டும் அணி செட்டை வெல்லும். 5-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெறும் அணிக்கு மொத்தம் 3 வெற்றி புள்ளிகள் கிடைக்கும். தோல்வி அடையும் அணிக்கு புள்ளி எதுவும் கிடைக்காது. 3-2 மற்றும் 4-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெறும் அணிக்கு 2 வெற்றி புள்ளிகள் மட்டுமே கிட்டும்.

    புரோ கைப்பந்து லீக் போட்டிக்கான சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி கடந்த 12-ந் தேதி முதல் ஐ.சி.எப். உள்விளையாட்டு அரங்கில் தீவிர பயிற்சி எடுத்து வருகிறது. போட்டி குறித்து சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷெல்டன் மோசஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    புரோ கைப்பந்து லீக் போட்டி முதல்முறையாக நடைபெறுகிறது. போகப்போக இந்த போட்டி மக்களை நிச்சயம் வெகுவாக கவரும். இந்த போட்டியின் மூலம் பல இளைஞர்கள் கைப்பந்து ஆட்டத்தில் ஈடுபட முற்படுவார்கள். இதுபோன்ற போட்டிகளில் பண பலன் கிடைப்பதால் பெற்றோரும் தங்கள் குழந்தைகளை கைப்பந்து ஆட்டத்தில் களம் இறக்க ஆர்வம் காட்டுவார்கள். வெளிநாட்டு வீரர்களுடன் இணைந்து ஆடுவதன் மூலம் நமது வீரர்கள் நல்ல ஆட்ட அனுபவத்தை பெற முடியும். இதன் மூலம் இந்திய கைப்பந்து அணியின் தரம் உயரும். இது இந்திய அணி சர்வதேச போட்டிகளில் வெற்றி வாகை சூட வழிவகுக்கும். போட்டி முழுவதும் டெலிவிஷனில் ஒளிபரப்பப்படுவதால் வீரர்கள் பிரபலம் அடைவதுடன் அவர்களின் வாழ்க்கை ஸ்டைலும் மாறும்.

    போட்டியில் பல விதிமுறை மாற்றம் செய்து இருப்பதன் மூலம் இந்த லீக் போட்டி 20 ஓவர் கிரிக்கெட் போல் விறுவிறுப்பாக இருக்கும். போட்டியில் பங்கேற்கும் 6 அணிகளும் சமபலம் வாய்ந்தவை தான். எனவே போட்டி தினத்தில் எந்த அணி சிறப்பாக செயல்படுகிறதோ? அந்த அணி வெற்றி பெறும். சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணியில் நவின் ராஜா ஜேக்கப், ஒலிம்பிக் போட்டியில் ஆடிய கனடாவை சேர்ந்த ரூடி, லாத்வியாவை சேர்ந்த ருஸ்லான் மற்றும் கபில்தேவ், அக்கின் உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளனர். செர்வ், அட்டாக்கிங் உள்பட எல்லா துறைகளிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். எனவே இந்த போட்டியில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி கோப்பையை வெல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு ஷெல்டன் மோசஸ் கூறினார். #ProVolleyballLeague
    புரோ கைப்பந்து லீக் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் தமிழகத்தை சேர்ந்த நவீன், பிரபாகரனை சென்னை அணி ஏலம் எடுத்துள்ளது. #ProVolleyballLeague
    புதுடெல்லி:

    இந்திய கைப்பந்து சம்மேளனம் சார்பில் முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி அடுத்த ஆண்டு (2019) பிப்ரவரி மாதம் 2-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை சென்னை மற்றும் கொச்சியில் நடக்கிறது. இதில் 6 அணிகள் கலந்து கொள்கின்றன.

    இந்த போட்டிக்கான வீரர்கள் ஏலம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான சென்னை ஸ்பார்டன்ஸ் 11 வீரர்களை வாங்கி இருக்கிறது. வெளிநாட்டு வீரராக கனடாவின் ரூடி வெராப், நட்சத்திர வீரராக அகின் (இந்தியா) ஆகியோரை சென்னை அணி வாங்கி உள்ளது.

    தமிழகத்தை சேர்ந்த நவீன் ராஜா ஜேக்கப்பை ரூ.7 லட்சத்துக்கு சென்னை அணி எடுத்து இருக்கிறது. பிரபாகரன் (ரூ. 5 லட்சத்துக்கு 20 ஆயிரம்), கேரளாவை சேர்ந்த விபின் ஜார்ஜ் (ரூ.4 லட்சத்துக்கு 80 ஆயிரம்), பிறைசூடன், அஸ்வின், பாக்யராஜ், ஷெல்டன் மோசஸ், கபில்தேவ், ஹரிகரன் ஆகியோரையும் சென்னை அணி தன்வசப்படுத்தி இருக்கிறது. சென்னை ஸ்பார்டன்ஸ் அணி சிறந்த வீரர்களை வாங்கி இருப்பதாக அந்த அணியின் மானேஜர் ஜெ.நடராஜன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். #ProVolleyballLeague
    மாவட்டங்கள் இடையேயான மாநில இளைஞர் கூடைப்பந்து போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் சென்னை மாவட்ட மண்டல-1 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. #YouthBasketball
    சென்னை:

    மாவட்டங்கள் இடையேயான மாநில இளைஞர் (16 வயதுக்குட்பட்டோர்) கூடைப்பந்து போட்டி நாளை (26-ந்தேதி) முதல் 29-ந்தேதி வரை திருவாரூரில் நடக்கிறது.

    இந்த போட்டிக்கான சென்னை மாவட்ட மண்டல-1 அணியை சென்னை மாவட்ட கூடைப்பந்து சங்க செயலாளர் எஸ்.எஸ்.நிசார் அறிவித்துள்ளார். அணி விவரம்:

    சல்மான் பராஸ் (கேப்டன்), ஆதித்ய சீனிவாஸ், அரவிந்த், திலீப் குமார், ஹர்சவர்தன் ரெட்டி, கார்த்திகேயன், காமேஸ் ராகுல், ஷியாம் ராஜா, தன்ஷிக், விக்கி சாம் பீட்டர், விஸ்வா.

    பயிற்சியாளர்: செந்தில் செல்வன், உதவி பயிற்சியாளர்: அருணாச்சலம், மானேஜர்: லோக நாதன். #YouthBasketball
    ×