search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அகில இந்திய கபடி போட்டியில் சென்னை அணி சாம்பியன்
    X

    ஆண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த சென்னை வருமான வரித்துறை அணிக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், யூனியன் தலைவர் தங்கபாண்டியன் கோப்பை வழங்கிய காட்சி.

    அகில இந்திய கபடி போட்டியில் சென்னை அணி சாம்பியன்

    • பெண்கள் பிரிவு கால் இறுதி முதல் போட்டியில் மும்பை அணியை ஐதராபாத் சவுத் சென்டிரல் ரெயில்வே அணி வீழ்த்தியது.
    • 2-வது போட்டியில் உத்தரபிரதேச அணியை டெல்லி அணி வென்றது.

    திசையன்விளை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் ஏற்பாட்டில், திசையன்விளையில் அகில இந்திய அளவிலான மின்னொளி கபடி போட்டி 4 நாட்கள் நடந்தது.

    ஆண்கள் பிரிவு கால் இறுதி போட்டியை ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி, அப்புவிளை முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.சுரேஷ், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முரளி, அப்புவிளை மகேசுவரன் ஆகியோர் வீரர்களை அறிமுகம் செய்து தொடங்கி வைத்தனர்.

    பெண்கள் பிரிவு போட்டியை ராதாபுரம் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் வாழவந்தகணபதி, பொன் மீனாட்சி அரவிந்தன், சாந்தா மகேசுவரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    ஆண்கள் பிரிவு கால் இறுதி முதல் போட்டியில் தூத்துக்குடி துரைசிங்கம் அணியை தானே அணி வீழ்த்தியது. 2-வது போட்டியில் கன்னியாகுமரி அணியை சென்னை வருமான வரித்துறை அணி வென்றது. 3-வது போட்டியில் தமிழ்நாடு காவல் துறை அணியை ஹரியானா சி.ஐ.எஸ்.எப். அணி வீழ்த்தியது. 4-வது போட்டியில் எதிர்நீச்சல் அணியை ஐதராபாத் சவுத் சென்டிரல் ரெயில்வே அணி வென்றது.

    பெண்கள் பிரிவு கால் இறுதி முதல் போட்டியில் மும்பை அணியை ஐதராபாத் சவுத் சென்டிரல் ரெயில்வே அணி வீழ்த்தியது. 2-வது போட்டியில் உத்தரபிரதேச அணியை டெல்லி அணி வென்றது. 3-வது போட்டியில் சாய் அணியை ஹரியானா அணி வீழ்த்தியது. 4-வது போட்டியில் பெங்களூரு அணியை மங்களூரு அணி வென்றது.

    பின்னர் நடந்த ஆண்கள் பிரிவு முதலாவது அரை இறுதி போட்டியில் தானே அணியை சென்னை வருமான வரித்துறை அணி வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 2-வது அரை இறுதி போட்டியில் ஐதராபாத் சவுத் சென்டிரல் ரெயில்வே அணியை ஹரியானா சி.ஐ.எஸ்.எப். அணி வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    பெண்கள் பிரிவு முதலாவது அரை இறுதி போட்டியில் டெல்லி அணியை ஐதராபாத் சவுத் சென்டிரல் ரெயில்வே அணி வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 2-வது அரை இறுதி போட்டியில் மங்களூரு அணியை ஹரியானா அணி வீழ்த்தியது.

    பின்னர் நடந்த ஆண்கள் பிரிவு இறுதி போட்டியில் ஹரியானா சி.ஐ.எஸ்.எப். அணியை சென்னை வருமான வரித்துறை அணி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. பெண்கள் பிரிவு இறுதி போட்டியில் ஹரியானா அணியை வீழ்த்தி ஐதராபாத் சவுத் சென்டிரல் ரெயில்வே அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

    வெற்றி பெற்ற அணிகளுக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், பாளையங்கோட்டை யூனியன் தலைவர் தங்கபாண்டியன் ஆகியோர் சுழற்–கோப்பை பரிசு வழங்கினர். ராதாபுரம் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ், ஒன்றிய குழு துணைத்தலைவர் இளையபெருமாள், முன்னாள் லயன்ஸ் கவர்னர் சுயம்புராஜன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பரமசிவ அய்யப்பன், முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், மாவட்ட கவுன்சிலர் கனகராஜ், சாலமன் டேவிட், இசக்கிபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×