என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Non Hindus"

    • முக்பா பகுதிக்கும் இந்த தடை நீட்டிக்கப்படும்
    • இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைவதற்கான இந்தத் தடை கடுமையாக அமல்படுத்தப்படும் என பாஜக தலைவர் கருத்து

    உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள கங்கோத்ரி தாமிற்குள் (இந்துக்கள் புனித யாத்திரை தலம்) இனி இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைய அனுமதி இல்லை என்று ஸ்ரீ கங்கோத்ரி கோயில் குழு தெரிவித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடு பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோயில்களைத் தொடர்ந்து, கங்கா தேவியின் குளிர்கால இருப்பிடமான முக்பா (கோயில் அருகில் உள்ள கிராமம்) பகுதிக்கும் நீட்டிக்கப்படும் என்று அந்தக் குழு தெரிவித்துள்ளது.

    கோயில் குழுவின் தலைவர் சுரேஷ் செம்வால், கங்கோத்ரி மற்றும் முக்பா பகுதிகளில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைவதற்கான இந்தத் தடை கடுமையாக அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே பா.ஜ.க தலைவரும், ஸ்ரீ பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் குழுவின் (BKTC) தலைவருமான ஹேமந்த் திவேதி, பத்ரிநாத், கேதார்நாத் மற்றும் BKTC-யின் அதிகார வரம்பிற்குட்பட்ட அனைத்து கோயில்களிலும் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைவதைத் தடை செய்வதற்கான முன்மொழிவு, குழுவின் அடுத்த வாரியக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பேசியுள்ள அவர், "வரலாற்று ரீதியாக, கேதார்நாத் மற்றும் மானா பகுதிகள் முழுவதும் உள்ள கோயில்களில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வந்தது. பாஜக அல்லாத ஆட்சிக் காலங்களில், இந்த மரபுகள் பெரும்பாலும் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டன. இப்போது இந்த மரபுகள் முழுமையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 


     

    • மகா கும்பமேளா, ஜனவரி 13-ந் தேதி தொடங்குகிறது.
    • இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்காட்டு கும்பமேளா என்று மோடி கூறியிருந்தார்.

    உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருதடவை, மகா கும்பமேளா நடக்கிறது. இந்த மகா கும்பமேளா, ஜனவரி 13-ந் தேதி தொடங்குகிறது. 45 நாட்கள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், மகா கும்பமேளாவில் இந்துக்கள் அல்லாதோர் கடை வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அகில பாரதிய அகாரா பரிஷத் தலைவர் மஹந்த் ரவீந்திர புரி தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பிரயாக்ராஜ் நகரம் கும்பமேளாவின்போது அழகாகவும், சுத்தமாகவும், தெய்வீகமாகவும், அமைதியானதாகவும் இருக்க வேண்டும். அதன் பாதுகாப்பு மற்றும் புனிதத்தை பாதுகாக்க இந்துக்கள் அல்லாதவர்களை விலக்கி வைக்க வேண்டும்.

    இந்துக்கள் அல்லாதோருக்கு கடை அமைக்க அனுமதி கொடுக்கக்கூடாது. ஏனெனில் அவர்களுக்கு கடைகளை கொடுத்தால் எச்சில் துப்புதல், சிறுநீர் கழித்தல் போன்ற சுகாதாரமற்ற செயல்களில் அவர்கள் ஈடுபட வாய்ப்பிருக்கிறது" என்று தெரிவித்தார்.

    முன்னதாக 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்காட்டு கும்பமேளா. இந்த நிகழ்வில் எந்த பாகுபாடும் இல்லை. அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள்" என்று கூறியிருந்த நிலையில், மஹந்த் ரவீந்திர புரியின் பேச்சு சர்ச்சையாகியுள்ளது.

    வரலாற்று ரீதியாக சபரிமலை ஐயப்பன் கோவில் மதச்சார்ப்பற்றது என்றும், அனைத்து சாதி, மதத்தினரும் செல்லலாம் என்றும் உயர்நீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது. #SabarimalaForAll #Sabarimala
    திருவனந்தபுரம்:

    பா.ஜனதாவை சேர்ந்த பிரமுகர் டி.ஜி.மோகன்தாஸ் என்பவர் கேரள ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் இந்துக்கள் அல்லாதவர்களையும், சிலையை வழிபடாதவர்களையும் அனுமதிப்பதை தடுக்கவேண்டும் என்று கோரி இருந்தார்.

    மேலும் இது சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கும், 1965-ம் ஆண்டின் கேரள அரசின் பொது இடங்கள் வழிபாட்டு நுழைவு அங்கீகார சட்டத்துக்கும் எதிரானது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான கேரள அரசு ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறி இருப்பதாவது:-

    சபரிமலை அய்யப்பன் கோவில் ஆதிகாலத்தில் பழங்குடியினர் வழிபடும் இடமாக இருந்தது என்று வெளிப்படையாகவே விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் சரணம் அய்யப்பா என்று கோஷத்தில் உள்ள சரணம், புத்த மதத்தில் இருந்து வந்தது என்ற சிந்தனையும் உள்ளது.



    வரலாற்று ரீதியாக சபரிமலை கோவில் மதச்சார்ப்பற்றது. எனவே அங்கு சாதி, மதத்தை காரணம் காட்டி யாருக்கும் அனுமதி மறுக்கக்கூடாது. அங்கு அனைத்து மதத்தினரும் செல்லலாம். அய்யப்பனின் நண்பராக கூறப்படும் வாவருக்கு, சபரிமலை சன்னிதானத்தில் தனி இடம் உள்ளது. வாவரை வழிபட இங்கு ஏராளமான முஸ்லிம்களும் வருகிறார்கள். அவர்கள் அய்யப்பனையும் வழிபடுகின்றனர்.

    சபரிமலைக்கு வரும் வழியில் உள்ள எருமேலியில் வாவர் பள்ளி என்னும் ஒரு மசூதியும் உள்ளது. இங்கு அனைத்து அய்யப்ப பக்தர்களும் சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டு உள்ளனர். மேலும் பேட்டை துள்ளல் என்னும் நிகழ்ச்சியும் இங்கிருந்தே தொடங்குகிறது. பிறப்பால் கிறிஸ்தவரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய ஹரிவராசனம் பாடல்தான் அய்யப்பனின் தாலாட்டு பாடலாகவும் உள்ளது. அய்யப்ப பக்தரான அவரும் சபரிமலைக்கு அவ்வப்போது சென்று வருகிறார்.



    இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சபரிமலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர். எனவே மனுதாரரின் வேண்டுகோளை நிராகரிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #SabarimalaForAll #Sabarimala

    ×