என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்மீக பயணம்"

    • இந்த ஆன்மீக பயணத்திற்கான விண்ணப்ப படிவங்களை அந்தந்த மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் நேரில் பெற்று கொள்ளலாம்.
    • www.hrce.tn.gov.in என்ற இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட பக்தர்கள் கட்டணமில்லா பயணமாக ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் வைணவத் கோவில்களுக்கும், அறுபடை வீடுகளுக்கும், ராமேசுவரத்திலிருந்து காசிக்கும் அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். மேலும் மானசரோவர் மற்றும் முக்திநாத் போன்ற புனித தலங்களுக்கு ஆன்மீக பயணம் சென்று வருபவர்களுக்கு வழங்கப்படும் அரசு மானியமும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆன்மிகப் பயணங்களின் மூலம் இதுவரை 7,998 பக்தர்கள் பயன் பெற்றுள்ளனர்.

    அந்தவகையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலிலிருந்து காசி விஸ்வநாதசாமி கோவிலுக்கு இவ்வாண்டு ரூ.1.50 கோடி அரசு நிதியில் 600 பக்தர்கள் ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட உள்ளனர். இதற்காக இந்து சமய அறநிலையத்துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களிலிருந்து மண்டலத்திற்கு 30 பக்தர்கள் வீதம் 600 நபர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    இந்த ஆன்மீக பயணத்திற்கான விண்ணப்ப படிவங்களை அந்தந்த மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் நேரில் பெற்றோ அல்லது www.hrce.tn.gov.in என்ற இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய சான்றுகளுடன் இணைத்து சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் அக்டோபர் 22-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஓசூரில் இருந்து முதன்முறையாக இந்த ஆன்மீக பயணம் தொடங்கப்பட உள்ளது.
    • தனி நபருக்கு ரூ.2,800- சிறுவர்களுக்கு ரூ. 2,500- வசூலிக்கப்படுகிறது.

    ஓசூர்,

    ஓசூரில் இருந்து முதன்முறையாக வருகிற 17-ந்தேதி முதல், தினசரி திருமலை திருப்பதிக்கு ஆன்மிக பயணம் செய்ய தமிழ்நாடு அரசு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க மாதந்தோறும் பக்தர்கள் சென்று வருகின்றனர். அவர்கள் எளிதில் சென்று வர தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் ஒசூர் மேலாளரும், ஓசூர் ஹோட்டல் தமிழ்நாடு மேலாளருமான வசந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதிக்கு தினசரி ஆன்மிக பயணம் மேற்கொள்ள தமிழ்நாடு அரசின் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் இளித்துறை ராமசந்திரன் வழிகாட்டுதலின்படி அறநிலைத்துறை மற்றும் சுற்றுலாத்துறை செயலர் டாக்டர் சந்திரமோகன்,

    நிர்வாகி இயக்குனர் சந்தீப் நந்தூரி ஆகியோரின் உத்தரவின் பேரில், ஓசூரில் இருந்து முதன்முறையாக இந்த ஆன்மீக பயணம் தொடங்கப்பட உள்ளது.

    ஒசூரில் இருந்து திருமலை திருப்பதிக்கு அழைத்துச்சென்று

    வர சொகுசுப் பேருந்து பயணம், சாமியை தரிசனம் செய்ய கட்டணம், உணவு என இதற்கான கட்டணமாக தனி நபருக்கு ரூ.2,800- சிறுவர்களுக்கு ரூ. 2,500- வசூலிக்கப்படுகிறது.

    முதல் நாள் இரவு ஓசூரிலிருந்துகிளம்பும் பேருந்து, விடியற்காலை 4 மணியளவில் கீழ் திருப்பதியில் உள்ள ஒட்டலுக்கு சென்றடையும்.

    அங்கு காலை சிற்றுண்டி முடித்து, திருச்சானூர் அலமேலு மங்கம்மாபுரத்தை தரிசித்த பின் மலையில் உள்ள ஏழுமலையானை தரிசித்து மீண்டும் இரவு 11 மணியளவில் ஓசூருக்கு வந்தடையும்.

    இந்த தினசரி ஆன்மிக பயணம் குறித்து அறிய, ஓசூர் தமிழ்நாடு ஹோட்டலில் உள்ள அலுவலக எண் 7845835847 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டோ அல்லது நேரில்வந்தோ தெரிந்து கொள்ளலாம்.

    தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள இந்த வசதியை, ஓசூர் பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு, மேலாளர் வசந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • 700-க்கும் மேற்பட்டோர் திருப்பதிக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்டனர்.
    • கிராமங்கள் வெறிச்சோடி காணப்பட்ட நிலையில் காரிமங்கலம் போலீசார் கிராமத்தை கண்காணித்து வருகின்றனர்.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம்,காரிமங்கலம் அடுத்த பந்தாரஅள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மன்னாடிப்பட்டி, நடு கொட்டாய், முருகன் கொட்டாய் உட்பட 10 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஆண்டு தோறும் திருப்பதிக்கு ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொள்வது வழக்கம்.

    கொரோனா வைரஸ் மற்றும் பல்வேறு காரணங்களால் கடந்த பல ஆண்டுகளாக திருப்பதிக்கு ஆன்மீக பயணம் மேற்கொள்ளவில்லை.

    இந்நிலையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆண் மற்றும் பெண் பக்தர்கள் சுமார் 700-க்கும் மேற்பட்டோர் திருப்பதிக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்டனர்.

    இதை அடுத்து பந்தார அள்ளி சென்றாய சுவாமி கோவிலில் மேல் தீபம் ஏற்றி சிறப்பு பூஜைகள் நடத்தி திருப்பதிக்கு பஸ், வேன், கார் உட்பட பல்வேறு வாகனங்களில் சென்றனர்.

    கிராம பொதுமக்கள் திருப்பதிக்கு ஆன்மீகம் பயணம் மேற்கொண்டதால் கிராமங்கள் வெறிச்சோடி காணப்பட்ட நிலையில் காரிமங்கலம் போலீசார் கிராமத்தை கண்காணித்து வருகின்றனர்.

    • தனது ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்தவுடன் ஆன்மீக பயணமாக இமைய மலைக்கு செல்வது வழக்கம்.
    • தற்பொழுது அவர் டி.ஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் சில நாட்களுக்கு முன் முடிவடைந்தது.

    தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் தனது ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்தவுடன் ஆன்மீக பயணமாக இமைய மலைக்கு செல்வது வழக்கம்.

    தற்பொழுது அவர் டி.ஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் சில நாட்களுக்கு முன் முடிவடைந்தது. இப்படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அடுத்து ரஜினிகாந்த் லோகேஷ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

    கூலி படத்திற்கு முன் ஆன்மீக பயணத்தை மே 30 தொடங்கினார் ரஜினிகாந்த். அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசும்போது " நான் கேதார்நாத், பத்ரிநாத், பாபா குகை வருடா வருடம் செல்வது வழக்கம், ஒவ்வொரு முறை நான் அங்கு செல்லும் போது எனக்கு அது ஒரு புது அனுபவத்தை கொடுக்கிறது என்று கூறினார். அதைத்தொடர்ந்து இந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் நரேந்திர மோடி வெற்றி பெறுவாரா என்ற கேட்ட கேள்விக்கு நோ கமண்ட்ஸ், அரசியல் கேள்விகள் வேண்டாம் என்று அதை மறுத்துவிட்டார்.

    நேற்று ரஜினிகாந்த கேதார்னாத் மற்றும் பத்ரினாத் கோவில்களில் வழிப்பட்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×