search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sai baba"

    • நடிகர் விஜய் தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவர இருக்கும் தி கோட் படத்தில் நடித்து வருகிறார்.
    • சமீபத்தில் கோட் படத்தின் படப்பிடிப்பிற்காக கேரளா சென்று இருந்தார்.

    நடிகர் விஜய் தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவர இருக்கும் தி கோட் படத்தில் நடித்து வருகிறார். லியோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் இப்படத்தில் நடித்து வருகிறார்.

    சமீபத்தில் கோட் படத்தின் படப்பிடிப்பிற்காக கேரளா சென்று இருந்தார். கேரளா ரசிகர்கள் விஜய்க்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தார்கள். பின் இப்பொழுது கோட் படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது.

    இந்நிலையில் விஜய் சாய் பாபா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார். அங்கு பணிப்புரியும் குருக்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • கோரிமேடு அருகே பட்டனூர் கிராமத்தில் ஓம் ஸ்ரீ வழி காட்டும் சாய்பாபா ஆலயம்
    • சாய்பாபாவை சிவனாக பாவித்து அன்னா பிஷேகம் நடைபெற்றது


    புதுச்சேரி:

    கோரிமேடு அருகே பட்டனூர் கிராமத்தில் ஓம் ஸ்ரீ வழி காட்டும் சாய்பாபா ஆலயம் உள்ளது.

    108 மூலிகையால் காப்பு கண்ட 12 அடி செப்பு கோபுரத்தின் கீழ் கருட கருங்கல்லால் ஆன 6 அடி உயரத்தில் சாய்பாபா சிலை உள்ளது.

    இந்த ஆலயத்தில் ஐப்பசி பவுர்ணமியையொட்டி வழிகாட்டும் சாய்பாபாவை சிவனாக பாவித்து அன்னா பிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து சாய்பாபா விற்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் மற்றும் பாபாவின் பிரசாதம் வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை ஆலய டிரஸ்டி சாய் சசி அம்மையார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்


    • கீரம்பூர் அருகே உள்ள தொட்டிப்பட்டி சாய் தபோவனத்தில் ஸ்ரீ சாயிபாபா குருபூஜை 105-ம் ஆண்டு விழா நடைபெற்றது.
    • காலை 7.45 முதல் 8.30 வரை ஆரத்தி, கூட்டு பிரார்த்தனையும், 10 மணி முதல் 11 மணி வரை ஸ்ரீவித்யாரம்பம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே உள்ள தொட்டிப்பட்டி சாய் தபோவனத்தில் ஸ்ரீ சாயிபாபா குருபூஜை 105-ம் ஆண்டு விழா நடைபெற்றது. காலை 7.45 முதல் 8.30 வரை ஆரத்தி, கூட்டு பிரார்த்தனையும், 10 மணி முதல் 11 மணி வரை ஸ்ரீவித்யாரம்பம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு காலை முதல் மாலை வரை கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை சீரடி சாய்பாபா வழிபாட்டு மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    • கோரிமேடு அருகே பட்டனூரில் உள்ள ஓம் வழி காட்டும்சாயி பாபா ஆலயத்தில் ராமநவமியை முன்னிட்டு 108 கிலோ சர்க்கரை அபிஷேகம் நடைபெற்றது.
    • பாபாவிற்கு அபிஷேகம் செய்த சர்க்கரையை அனைவரும் எறும்பு புற்றுக்கு தானம் செய்தார்கள்.

    புதுச்சேரி:

    கோரிமேடு அருகே பட்டனூரில் உள்ள ஓம் வழி காட்டும்சாயி பாபா ஆலயத்தில் ராமநவமியை முன்னிட்டு 108 கிலோ சர்க்கரை அபிஷேகம் நடைபெற்றது.

    அதை தொடர்ந்து 108 சாயி பக்தர்கள் 108 முறை ராம நாமத்தை கூறினார்கள். அதை தொடர்ந்து ஓம் வழி காட்டும் சாயி பாபாவிற்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டது இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாபா பிரசாதம் வழங்கப்பட்டது. பாபாவிற்கு அபிஷேகம் செய்த சர்க்கரையை அனைவரும் எறும்பு புற்றுக்கு தானம் செய்தார்கள்.

    இவ்விழா ஏற்பாடுகளை ஆலய டிரஸ்டி சாய் சசி அம்மையார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • கோரிமேடு அருகே பட்டனூரில் உள்ள ஓம் ஸ்ரீ வழி காட்டும் சாய்பாபா கோவிலில் 5-ம் ஆண்டு பால்குட அபிஷேகம் நடைபெற்றது.
    • அதைத்தொடர்ந்து 12 மணிக்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டார்கள். கலந்து கொண்ட அனைவருக்கும் பாபா பிரசாதம் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    கோரிமேடு அருகே பட்டனூரில் உள்ள ஓம் ஸ்ரீ வழி காட்டும் சாய்பாபா கோவிலில் 5-ம் ஆண்டு பால்குட அபிஷேகம் நடைபெற்றது.

    இதில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவரும் மஞ்சள் ஆடை உடுத்தி பாபா மாலை அணிந்து 9 நாள் விரதம் இருந்து பால்குடம் சுமந்து வந்து கருவறைக்குள் சென்று தங்கள் கைகளாலே பாபாவிற்கு பசும்பால் அபிஷேகம் செய்தனர்.

    இந்த அபிஷேகம் செய்தபோது பாபாவின் உருவசிலை நீல நிறமாக மாறியது கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தார்கள் .

    அதைத்தொடர்ந்து 12 மணிக்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டார்கள். கலந்து கொண்ட அனைவருக்கும் பாபா பிரசாதம் வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டி சாய் சசி அம்மையார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    சாய்பாபாவை தேடி வரும் பெரும்பாலான பக்தர்கள் தங்களுக்கு சிறந்த, பண்பான வாழ்க்கை துணை வேண்டும் என வேண்டுதல் வைக்கின்றனர்.
    மராட்டிய மாநிலம் சீரடியில் பிரசித்த பெற்ற சாய்பாபா ஆலயம் அமைந்துள்ளது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகிறார்கள். இந்தியா மட்டுமல்லாது உலகில் பல பகுதியில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சாய்பாபா அருளை பெற்று செல்கிறார்கள்.

    சாய்பாபாவை தேடி வரும் பெரும்பாலான பக்தர்கள் தங்களுக்கு சிறந்த, பண்பான வாழ்க்கை துணை வேண்டும் என வேண்டுதல் வைக்கின்றனர்.

    இந்த நிலையில் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் வகையில் சாய்பாபா பக்தர்களுக்கு என்று தனியாக திருமண சேவையை தொடங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதை ஏற்று கோவில் நிர்வாகம் தற்போது புதிதாக பக்தர்கள் வரன் தேடும் வகையில் shirdivivah.com என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது.

    இந்த இணையதளத்தில் மணமகள், மணமகன் தேடுபவர்கள் தங்கள் சுயவிவரம், புகைப்படங்கள் மற்றும் குடும்ப விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

    இதற்காக பதிவு செய்ய இலவச சேவை, பணம் கட்டி வரன்தேடுதல், வி.ஐ.பி. சேவை என 3 முறைகள் உள்ளது. ஆண்டு பேக்கேஜ் முறைக்கு ரூ.5,100 மற்றும் ரூ.11 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கபட்டு உள்ளது.

    இதன்மூலம் சம்பந்தப்பட்ட வர்களை நேரடியாக தொடர்பு கொண்டு வரன்களை தேர்ந்தெடுக்கலாம். இணையதளத்தில் தினமும் பதிவு செய்யப்படும் அனைத்து சுய விவரங்கள் சாய்பாபா பாதத்தில் வைத்து பூஜிக்கப்படுகிறது.

    ஏழ்மையான ஜோடிகளுக்கு திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகம் செய்யும். அதற்கான செலவும் ஏற்றுக்கொள்ளப்படும் என கோவில் அறக்கட்டளை தலைவர் ரோஷன்குமார் தெரிவித்து உள்ளார்.

    இந்த சேவையை சாய்பாபா பக்தர்கள் வரவேற்று உள்ளனர்.
    சாய்பாபாவுக்கு 108 இளநீர் அபிஷேகம் நடைபெற்றது.
    புதுச்சேரி:

    புதுவை கோரிமேடு அருகேயுள்ள வழிகாட்டு சாய்பாபா ஆலயத்தில் அக்னி நட்சத்திர நிறைவையொட்டி சாய்பாபாவுக்கு 108 இளநீர் அபிஷேகம் நடைபெற்றது.

    ஒவ்வொரு பக்தர்களின் வேண்டுதலுக்கு இணங்க அவர்களுடைய பெயர்களை கூறி அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து சாய்பாபாவுக்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டது. அதன் பின்னர் சாய்பாபாவுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட இளநீர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. 

    விழாவுக்கான ஏற்பாடுகளை வழிகாட்டும் சாய்பாபா ஆலய டிரஸ்டி சாய்சசி மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
    உன் அன்பின் ஆழத்தையும் உன் பக்தியின் தூய்மையையும் உன் நம்பிக்கை பொறுமை எதையும் எதிர்நோக்கி தாங்கும் உணர்வு உன் பலத்தையும் உன் விசுவாசத்தையும் எவ்வளவு உன்னதமானது என்பதை சாய்பாபா அறிவார்.
    ஒருவர் உன்னை எந்த வகையில் அலட்சியப்படுத்தினாலும் அதை நீ உன் மனதிற்குள் எடுத்துக்கொள்ளாதே. புறக்கணிப்பு என்ற இடத்தில் தான் உனக்கான சரித்திரம் உருவாகிறது அந்த இடத்தில் தான் இருந்து விருட்சகமாய் வளர போகிறாய்! நான் மட்டுமே அனுசரித்து போக வேண்டுமா என்று நினைக்காதே நீ இப்படி நினைத்தால் உன் எதிரில் இருப்பவர் என்ன நினைக்க கூடும் இப்படியே போய் கொண்டு இருந்தால் இறுதியில் சண்டையிலும் வாக்குவாதங்களிலும் தான் முடியும் அமைதியாய் இருப்பது சிறந்தது பல பிரச்சினைகளில் இருந்து உன்னை காக்கும் கவசமாய் அது விளங்கும்.

    உன் சாய்பாபாவின் வார்த்தை உனக்கான இரத்த ஓட்டத்தை போல் இனிமேல் என் நாவில் தோன்றும் சொற்களின் பேர் அருளை பெறுவாய். அதனால் நீ எதற்கும் பயப்படாதே கலங்காதே உன்னில் நிச்சயம் வெற்றி என்ற தீபத்தை நான் ஏற்றுவேன். நீ உன்னில் பார்க்கும் அனைத்துமாய் அகிலத்தின் ரூபமாய் உனக்கு நான் இருப்பேன். உலகத்தில் என்ன மாறினாலும் நகன்றாலும் உன் தந்தை சாய்தேவா தூவாரகாமாயீ தாயுமாகிய நான் உன்னை விட்டு ஒருபோதும் அகலமாட்டேன் உன்னில் எப்போதும் நான் இருப்பேன். நீ என்று என்னை சாய்அப்பா என்று அழைத்து உன்னிடத்தில் நான் என்னும் சொல்லுக்கு சாய்தேவா என்ற அர்த்தத்தை கண்டாயோ அன்றே நீ என் உயிரான பொறுப்பு.

    உன் அன்பின் ஆழத்தையும் உன் பக்தியின் தூய்மையையும் உன் நம்பிக்கை பொறுமை எதையும் எதிர்நோக்கி தாங்கும் உணர்வு உன் பலத்தையும் உன் விசுவாசத்தையும் எவ்வளவு உன்னதமானது என்பதை உன் சாய்தேவா நான் அறிவேன். அதனால் எல்லாம் சரியாகிவிடும் எதற்கும் அஞ்சாதே உன்னோடும் உன் குடும்பத்தோடும் நான் என்ற உன் சாய்தேவா இருக்கிறேன். உன்னை நல்வழிபடுத்த வேண்டும் என்று பொறுப்பு உன் அனைத்துமாய் விளங்கும் உன் சாய்தேவா ஆன இந்த துவாரகாமாயீ தாய்க்கும் உள்ளது. என் பரிபூரண அருளும் ஆசிர்வாதமும் அன்பும் பெற்ற என் பிள்ளை நீ. உன்னை விட்டு நான் விலகுவதும் இல்லை உன்னை விலகி போகும்படி நான் செய்வதும் இல்லை.
    ஷீரடி சாய்பாபாவின் பரிபூரண அருளை பெற விரும்புவோர் அவரை வணங்கும் சமயத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை ஜபிப்பது மிகவும் சிறந்தது.
    இந்துக்களால், கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாக போற்றப்படும் சாய் பாபா, தான் இந்த பூவுலகில் வாழ்ந்த சமயத்தில் பற்பல அற்புதங்களை நிகழ்த்திக்காட்டி தன்னுடைய திவ்ய சக்தியை மக்களுக்கு நிகழ்த்திக்காட்டி பல அதிசய நிகழ்வுகளை நாம் படித்திருப்போம். அதே போல அவர் இந்த பூவுலகை விட்டு பிரிந்து சென்ற பிறகும் தன் பக்தர்களை கண் இமைபோல காத்து வருகிறார். சாய் பாபாவின் பரிபூரண அருளை பெற விரும்புவோர் அவரை வணங்கும் சமயத்தில் கீழே உள்ள மந்திரம் அதை ஜபிப்பது சிறந்தது.

    “ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி”

    இந்த ஒரு வரி மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்பதன் பயனாக சாய் பாபவின் முறை அருளை பெறலாம். சாய் பாபா மூல மந்திரம் அதை தினம் தோறும் ஜபிக்க இயலாதவர்கள் வியாழக்கிழமைகளில் ஜபிப்பது சிறந்தது.
    சாய்பாபா ஞானத்தை மட்டுமல்லாது தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு மனஅமைதியையும் அளிப்பவர் ஷீரடி சாய்பாபா என்பதை பின்வரும் கதை நமக்கு உணர்த்துகிறது.
    சாய்பாபா ஞானத்தை மட்டுமல்லாது தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு மனஅமைதியையும் அளிப்பவர் ஷீரடி சாய்பாபா என்பதை பின்வரும் கதை நமக்கு உணர்த்துகிறது.

    வாணி என்ற கிராமத்தைச் சேர்ந்த காகாஜி வைத்தியர் என்பவர் சப்தசிருங்கி தேவியின் ஆலயத்தில் பூசாரியாக இருந்தார். அவர் தினமும் தேவிக்கு பூஜை செய்து வந்த போதிலும் அவரது மனமானது வேதனைகளால் நிறைந்து அமைதியிழந்து இருந்தது. மனஅமைதி பெற விரும்பிய அவர், தான் தினமும் வழிபடும் சப்தசிருங்கியிடம் வழி கேட்டார். அவர் மேல் இரக்கம் கொண்ட தேவி அவரை பாபாவைச் சென்று வணங்கும்படியும் அதனால் மனமானது அமைதியடையும் என்றும் கூறினாள்.

    சாயிநாதரைப் பற்றி எதுவும் அறிந்திராத காகாஜி, பாபா என்று சப்தசிருங்கி தேவி குறிப்பிட்டது த்ரயம்பகேஷ்வரில் உள்ள ஈஸ்வரனையே ஆகும் என்று தன்னுள் எண்ணியவர், த்ரயம்பகேஷ்வர் சென்றார். அங்கு பத்து நாள்கள் தங்கி ஈஸ்வரரை வழிபட்ட பின்னும் அவர் மனமானது அமைதி பெறவில்லை. எனவே, மீண்டும் அவர் தன் கிராமத்திற்குத் திரும்பினார்.

    மீண்டும் தேவியை வணங்கிய அவர் தன் மீது கருணை கொண்டு தனக்கு மன அமைதி கிட்ட வழி கூற வேண்டும் என்று வணங்கினார். அவர்மீது இரக்கம் கொண்ட தேவி மீண்டும் அவர் கனவில் தோன்றினாள். தான் பாபா என்று குறிப்பிட்டது ஷீரடி சமர்த்த சாயியையே என்றும்; வீணாக ஏன் த்ரயம்பகேஷ்வர் சென்றாய்? என்றும் வினவினாள். அவ்வாறு கூறிவிட்டு உடனே மறைந்துவிட்டாள். உறக்கத்திலிருந்து விழித்த காகாஜி தனக்கு ஷீரடியைப் பற்றி எதுவும் தெரியாததால், எவ்வாறு ஷீரடியை அடைந்து பாபாவை தரிசிப்பது என்று எண்ணியிருந்தார்.

    நாம் கடவுளைக் காண வேண்டும் என்று நினைத்தால் மட்டும் அவருடைய தரிசனம் நமக்குக் கிடைத்துவிடாது. கடவுளின் பூரண அனுக்கிரகம் நமக்கு இருந்தால் மட்டுமே அவரைக் காண இயலும். ஆனால், பாபாவின் விசயத்தில் அவரின் பக்தர்கள் அவரைக் காண எண்ணினாலே போதும். எப்படியேனும் அவர்களைத் தன்னிடம் கூட்டி வருவார்.

    அவ்வாறே காகாஜிக்கும் நிகழ்ந்தது. ஷீரடியைச் சேர்ந்தவரும், சாயிபாபாவின் பெரும் அடியவருமான ஷாமா என்பவரின் சகோதரர் ஒருமுறை ஒரு ஜோதிடரைச் சந்தித்தார். அவரிடம் தன் குடும்பத்தில் பல சோதனைகள் ஏற்பட்டிருப்பதாகவும், அதனைப் போக்க ஏதேனும் வழி கூறுமாறும் கேட்டார். அதற்கு அந்த ஜோதிடர், "உங்கள் தாயார், உங்கள் சகோதரர் ஷாமா சிறு பிள்ளையாக இருக்கும்போது உடல்நிலை சரியில்லாமல்போன காரணத்தால், உங்கள் குலதெய்வமான சப்தசிருங்கியிடம், ஷாமாவின் உடல்நலம் சரியானால் குடும்பத்துடன் வந்து வழிபடுவதாகவும் கூறினார். அவர் அவ்வாறு வேண்டிய உடனே ஷாமாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால் அவர் குலதெய்வத்திடம் வேண்டியதை மறந்துவிட்டார். ஆனால், ஷாமாவின் தாயாருக்கு இறக்கும் தருவாயில் தனது வேண்டுதல் நினைவுக்கு வந்தது. ஷாமாவிடம் குலதெய்வத்தைச் சென்று வணங்க வேண்டும் என்ற சத்தியத்தைப் பெற்ற பின்னரே ஷாமாவுடைய தாயாரின் உயிர் பிரிந்தது.

    நாளடைவில் ஷாமா அந்த சத்தியத்தை மறந்தார். இதை நினைவுகூர்ந்த ஜோதிடர் அந்த சத்தியத்தை நிறைவேற்றினால் அவரின் குடும்பக் கஷ்டங்கள் அனைத்தும் விலகும் என்று கூறினார். பாபாவின் ரூபத்திலேயே தனது குலதெய்வமான சப்தசிருங்கி தேவியை தரிசித்த ஷாமா நேராக பாபாவிடம் சென்றார்.

    பாபாவை தன் குலதெய்வம் என்று எண்ணி வழிபடச் சென்ற அவரிடம், வாணி என்ற கிராமத்தில் இருக்கும் ஷாமாவின் குலதெய்வமாக விளங்கும் சப்தசிருங்கியை சென்று வழிபடுமாறு கூறினார். அதாவது அந்தச் செயலின் மூலம் பாபா தன் பக்தரான காகாஜியைத் தன்னிடம் அழைத்து வரவும் எண்ணினார்.

    ஷாமா வாணி கிராமத்திற்கு வந்து தன் குலதெய்வமான சப்தசிருங்கியை வணங்கினார். அவர் ஷீரடியிலிருந்து வந்திருக்கிறார் என்பதை அறிந்த காகாஜிக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று. அவர் தனக்கு பாபாவை தரிசிக்க வேண்டும் என்றும், தன்னையும் அவருடன் அழைத்துச் செல்லுமாறும் கேட்டார். ஷாமாவும் அவரைத் தன்னுடன் ஷீரடிக்கு அழைத்துச் சென்றார்.

    காகாஜி பாபாவை தரிசித்த அந்த கணமே அவரது மனமானது அமைதியைப் பெற்றது. ஆச்சர்யத்தின் உச்சமாக காகாஜி பாபாவிடம் தன்னுடைய பிரச்சனைகள் பற்றி எதுவும் கூறவில்லை. அதேபோல் பாபாவும் அவரிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை. அவரைக் கண்ட  மாத்திரத்திலேயே அவரின் மனதில் இருந்த வேதனைகள் நீங்கி, அவரது மனமானது அமைதியடைந்தது.
    ஷீரடி சாய்பாபாவுக்கு உகந்த இந்த அஷ்டோத்ர சத நாமாவளியை தினமும் அல்லது ஞாயிற்று கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் விருப்பங்கள் நிறைவேறும்.
    ஓம் ஸ்ரீ ஸாயிநாதாய நம:
    ஓம் ஸ்ரீ லக்ஷ்மீ நாராயணாய நம:
    ஓம் ஸ்ரீ கிருஷ்ண ராம சிவ மாருத்யாதி ரூபாய நம:
    ஓம் சேஷ சாயினே நம:
    ஓம் கோதாவரீ தட ஷீரடி வாஸினே நம:
    ஓம் பக்த ஹ்ருதாலயாய நம:
    ஓம் ஸர்வ ஹ்ருத்வாஸினே நம:
    ஓம் பூதாவாஸாய நம:
    ஓம் பூதபவிஷ்யத் பாவ வர்ஜிதாய நம:
    ஓம் காலாதீதாய நம:

    ஓம் காலாய நம:
    ஓம் காலகாலாய நம:
    ஓம் காலதர்பதமனாய நம:
    ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம:
    ஓம் அமர்த்யாய நம:
    ஓம் மர்த்யாபயப்ரதாய நம:
    ஓம் ஜீவாதாராய நம:
    ஓம் ஸர்வாதாராய நம:
    ஓம் பக்தாவன ஸமர்த்தாய நம:
    ஓம் பக்தாவன ப்ரதிக்ஞாய நம:

    ஓம் அன்னவஸ்த்ரதாய நம:
    ஓம் ஆரோக்யக்ஷேமதாய நம:
    ஓம் தனமாங்கல்யப்ரதாய நம:
    ஓம் ருத்திஸித்திதாய நம:
    ஓம் புத்ர மித்ர களத்ர பந்துதாய நம:
    ஓம் யோகக்ஷேமவஹாய நம:
    ஓம் ஆபத்பாந்தவாய நம:
    ஓம் மார்க்பந்தவே நம:
    ஓம் புக்திமுக்திஸ்வர்காபவர்கதாய நம:
    ஓம் ப்ரியாய நம:

    ஓம் ப்ரீதிவர்தனாய நம:
    ஓம் அந்தர்யாமினே நம:
    ஓம் ஸச்சிதாத்மனே நம:
    ஓம் ஆனந்தாய நம:
    ஓம் ஆனந்ததாய நம:
    ஓம் பரமேச்வராய நம:
    ஓம் பரப்ரம்ஹணே நம:
    ஓம் பரமாத்மனே நம:
    ஓம் ஞானஸ்வரூபிணே நம:
    ஓம் ஜகத பித்ரே நம:

    ஓம் பக்தனாம் மாத்ரு தாத்ரு பிதாமஹாய நம:
    ஓம் பக்தாபயப்ரதாய நம:
    ஓம் பக்த பாராதீனாய நம:
    ஓம் பக்தானுக்ரஹ காதராய நம:
    ஓம் சரணாகதவத்ஸலாய நம:
    ஓம் பக்தி சக்தி ப்ரதாய நம:
    ஓம் ஞான வைராக்யதாய நம:
    ஓம் ப்ரேமப்ரதாய நம:

    ஓம் ஸம்சய ஹ்ருதய தௌர்பல்ய பாபகர்ம வாஸனா க்ஷயகராய நம:

    ஓம் ஹ்ருதய க்ரந்திபேதகாய நம:

    ஓம் கர்மத்வம்சினே நம:
    ஓம் சுத்த ஸத்வஸ்திதாய நம:
    ஓம் குணாதீத குணாத்மனே நம:
    ஓம் அனந்த கல்யாண குணாய நம:
    ஓம் அமித பராக்ரமாய நம:
    ஓம் ஜயினே நம:
    ஓம் துர்தர்ஷாக்ஷப்யாய நம:
    ஓம் அபராஜிதாய நம:
    ஓம் த்ருலோகேஷு அஸ்கந்திதகதயே நம:
    ஓம் அசக்யராஹிதாய நம:

    ஓம் ஸர்வசக்தி மூர்த்தயே நம:
    ஓம் ஸுருபஸுந்தராய நம:
    ஓம் ஸுலோசனாய நம:
    ஓம் பஹுரூப விஸ்வ மூர்த்தயே நம:
    ஓம் அரூபாவ்யக்தாய நம:
    ஓம் அசிந்த்யாய நம:
    ஓம் ஸூக்ஷ்மாய நம:
    ஓம் ஸர்வாந்தர்யாமினே நம:
    ஓம் மனோவாக தீதாய நம:
    ஓம் ப்ரேமமூர்த்தயே நம:

    ஓம் ஸுலபதுர்லபாய நம:
    ஓம் அஸஹாய ஸஹாயாய நம:
    ஓம் அநாதநாத தீனபந்தவே நம:
    ஓம் ஸர்வ பாரப்ருதே நம:

    ஓம் அகர்மானேக கர்மஸுகர்மிணே நம:
    ஓம் புண்யச்ரவண கீர்த்தனாய நம:
    ஓம் தீர்த்தாய நம:
    ஓம் வாஸுதேவாய நம:
    ஓம் ஸதாம் கதயே நம:
    ஓம் ஸத்பராயணாய நம:

    ஓம் லோகநாதாய நம:
    ஓம் பாவனானகாய நம:
    ஓம் அம்ருதாம்சவே நம:

    ஓம் பாஸ்கரப்ரபாய நம:
    ஓம் ப்ருஹ்மசர்யதப: சர்யாதிஸுவ்ரதாய நம:
    ஓம் சத்ய தர்ம பராயணாய நம:
    ஓம் ஸித்தேச்வராய நம:
    ஓம் ஸித்த ஸங்கல்பாய நம:
    ஓம் யோகேச்வராய நம:
    ஓம் பகவதே நம:

    ஓம் பக்தவத்ஸலாய நம:
    ஓம் ஸத்புருஷாய நம:
    ஓம் புருஷாத்தமாய நம:
    ஓம் ஸத்ய தத்வபோதகாய நம:
    ஓம் காமாதி ஸர்வ அக்ஞானத்வம்ஸினே நம:

    ஓம் அபேதா நந்தானுபவப்ரதாய நம:
    ஓம் ஸமஸர்வமதஸம்மதாய நம:
    ஓம் தக்ஷிணாமூர்த்தயே நம:
    ஓம் வேங்கடேசரமணாய நம:
    ஓம் அத்புதானந்தசர்யாய நம:

    ஓம் ப்ரபன்னார்த்திஹராய நம:
    ஓம் ஸம்ஸாரஸர்வதுக்கக்ஷயகராய நம:
    ஓம் ஸர்வவித்ஸர்வதோமுகாய நம:
    ஓம் ஸர்வாந்தர்பஹிஸ்திதாய நம:
    ஓம் ஸர்வமங்களகராய நம:
    ஓம் ஸர்வாபீஷ்டப்ரதாய நம:
    ஓம் ஸமரஸஸன்மார்கஸ்தாபனாய நம:
    ஓம் ஸ்ரீஸமர்த்தஸத்குரு ஸாயிநாதாய நம:

    மங்களம் மங்களம் மங்களம்
    ×